சட்டமா அதிபரின் அறிவுரையைப் பின்பற்றுக!


சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபரின் பணிப்புரைபடி செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். 

குறித்த சம்பவத்தில் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.