பழிவாங்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை


எதிர்காலத்தில் தன்னுடைய கட்சியின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் முதலாவதாக பழிவாங்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு பதவி மோகம் இல்லை எனவும் பதவிக்காகவோ அல்லது வேறு வரப்பிரசாதங்களுக்காகவோ கட்சியை பிரிக்க இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தேர்தலில் பாடுபட்ட சம்பிக்க ரணவக்க இன்று பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.