நியமனம்


திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.தேசப்பிரிய அரச சேவையில் சுமார் 30 வருட அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.

இவர் தற்போது இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியாவார். இந்தக் காலப்பகுதியில் அரச பிரிவின் பல துறைகளில் பணியாற்றியுள்ள இவர் திறைச்சேரியின் பிரதிச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கும் முன்னர் தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.