இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்


 


ரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா முதல் விண்ணப்பம்

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நேற்று விண்ணப்பித்து இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.


கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.


சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாதான் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து இருக்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம் ஆகும்.


ஒரு நாளுக்கு முன்புதான், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், இந்தியாவில் தன் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பித்தது. பிரிட்டன் மற்றும் பஹ்ரைன் நாடுகளில், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து, அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.


கடந்த 02 ஆகஸ்ட் 2020 அன்று, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மனித பரிசோதனைகளுக்கு, இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


தற்போது, இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதையும், மக்கள் நலனுக்காகவும், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் விண்ணப்பத்தில் கூறப்பட்டு இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.