காபூலில் மேல்நிலைப்பள்ளி குண்டு வெடிப்பில் 45 பேர்


 


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மேல்நிலைப்பள்ளி அருகேநடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று மாணவர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வீதிகளில் புத்தகப் பைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களை காண முடிவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இந்த சம்பவத்தில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் காயமடைந்துள்ளதாக கல்வித் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த தாக்குலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.