ஆலையடிவேம்பில்,அஸ்டா செனிக்கா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை



 வி.சுகிர்தகுமார் 0777113659 

 ஆலையடிவேம்பில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான  முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் தொடர் சேவை இன்று முதல் ஆரம்பமானது.
இதன்போது சினோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டதுடன் 60 வயதிற்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அஸ்டா செனிக்கா தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பில் பிரதேசத்தில் இதுவரை 12500 இற்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் சுமார் 8000 ஆயிரம் வரையிலான மக்கள் இரண்டாவது தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றலின் தொடர் சேவை இன்று முதல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணின் மேற்பார்வையில் கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன் பிரகாரம் இன்று 07ஆம் திகதி காலை 8 மணிமுதல் 1 மணிவரை  கண்ணகிகிராமம் 1 2 ஆகிய பிரிவு மக்களுக்கு  கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்திலும்  அது போல் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஏனைய பிரிவு மக்களுக்கு காலை 8 மணிமுதல் 1 மணிவரை அக்கரைப்பற்று ஸ்ரீP இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேநேரம் நாளை 08ஆம் திகதி  காலை 8 மணிமுதல் 1 மணிவரை  இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஏனைய பிரிவுகளுக்கு ஆலையடிவேம்பு திருநாவுக்கரவு வித்தியாலயத்திலும் , அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தவறாது தடுப்பூசி ஒன்றினையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதுடன் 60 வயதிற்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அஸ்டா செனிக்கா தடுப்பூசி வழங்கப்படுவதுடன் இவர்களுக்கான இரண்டாவது அஸ்டா செனிக்கா தடுப்பூசியும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தடுப்பூசியை பெற்றுக்கொண்டு கொரோனா தொற்று நோயிலிருந்து அனைவரும் விடுபட வழி சமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.