சந்தேகநபர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையினூடாக தெரியவரும் என பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 80 கிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவர், அநுராதபுரம் பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, திடீர் சுகவீனமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி 22 வயதான சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீண்டகாலமாக போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
இந்தத் தாக்குதலில், பலத்த காயங களுக்குள்ளான சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள் என்பதாக தெரியவருகின்றது
இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.
நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா குடியரசு போப்ரோசீடிங் நிறுவனங்கள் இஸ்ரியல் நிலைக்கு எதிராக மற்றும் தற்காலிக நடவடிக்கைகளைக் குறிப்பிடுமாறு நீதிமன்றங்களைக் கோரும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.
அம்பாரை நீதிமன்ற பதில் நீதிபதி அசோக அவர்களால், அக்கரைப்பற்று சித்திக் ஹாஜியாரின் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் ஜனவரி 8ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 18 வயது நிரம்பிய சசிகரன் தனுஸ்கன் என்பவராவார்.இவர் அக்கரைப்பற்று காந்தி வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வாங்காமத்தில் மரணித்தவரின் ஆட்டுப் பண்ணை காலை வீட்டில் குடியிருந்தவராவார்.
கொலைசெய்யப்பட்டவருடன் சம்பள முரண்பாடு பற்றி பேசிய வேளையில், தனக்கு அவர் அடித்ததாகவும், பின்பு அவரைத் தாக்குவதற்கு கம்பு ஒன்றைத் தேடிச் சென்றதாகவும், கம்பு இல்லாததால், கோடரியால் கொத்திக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் பொலிசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சந்தேந நபரை இறக்காமம் பொலிஸ் சார்ஜான்ட் தசீர் அம்பாரை நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கத்தில் (B/4925/2023) ஆஜர்படுத்தியிருந்தார்.
(முந்தைய செய்தி)
அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு! வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இறக்காமம் – வாங்காமம் பகுதியில்,அக்கறைப்பற்றைச் சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் (63 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் தனது ஆட்டுப்பண்ணைக்கு சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையிலயே இன்று காலை அவரின் ஜனாசா வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.முதலாளியை கொலை செய்த இளைஞர்கள்
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இடம்பெற்றிருக்கிறது பின்னர் நேற்று முழுவதுமாக அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு நேற்று இரவு அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது
இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல வருடங்களாக இருப்பிடம் கொடுத்து அவர்களுக்கு தொழிலும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்த சிறந்த ஒரு நல்ல மனிதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெரிய வருகிறது
முதலாளியிடம் இருந்த முதலாளிக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததன் காரணமாக அதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சடலம் வாங்காமம் பகுதியில் உள்ள கரும்பு காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நீதிமன்ற நீதவான் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரிடம் வேலை செய்த நபர்களிடம் 75 ஆடுகள் உள்ள பண்ணையில் 17 ஆடுகளை மாத்திரம் அவதானித்த அவர் இதனை பற்றி வினவியபோது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாத தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 19 வயது இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.
அக்கரைப்பற்று பேரூந்து நிலையத்தில்,SLTB நேர முகாமையாளரைத் தாக்கிய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் அம்பாரை வைத்தியசாலையில் தப்பிச் சென்று தஞ்சமடைந்தனர் குறிப்பிட்ட தனியார் ஊழியர்கள் இருவரையும் வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் வைக்குமாறு அக்கரைப் பற்று நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்
முந்தைய செய்தி
இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் பணி பகிஷ்கரிப்பு!
அபு அலா, அப்துல் ஹமீட்
இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் இன்று காலை முதல் (08) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் அறிவிப்பு!
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை ஆகிய இரு போக்குவரத்து சபைகளும் ஒருங்கிணைந்த சேவைகளை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றனர். இச்சேவையில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகளும், நடத்துநர்களும் நேர அட்டவணையின் பிரகாரம் ஒருபோதும் நடப்பதில்லை. இத்த தவறுகளை உரியவர்களுக்கு சுட்டிக்காட்டியும் அத்தவறுகளை தொடர்ந்தும் செய்து வருவதாக அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.
இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை 7.30 மணிக்கு அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்திற்கு வந்தடைய வேண்டிய தனியார் பஸ் ஒன்று, நேரம் தவறி வந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரினால் சுட்டிக்காட்டப்பட்டபோது குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமுற்ற அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தை எதிர்த்தும், உரிய சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், இது தொடர்பில் எங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் என அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் மேலும் தெரிவித்தார்.
இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் அம்பாறை, கல்முனை, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு செல்கின்ற பிரயாணிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திப்பின்னணி-