Showing posts with label Crime. Show all posts

 


யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.


இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.


இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.


அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.


அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.



 நூருல் ஹுதா உமர் 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டாலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது. 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தலைமையில் காரைதீவு, நிந்தவூர், இறக்காமம் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகளும், அந்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார அதிகாரிகளும், பொதுச் சுகாதார அதிகாரிகளும் இணைந்து நடாத்திய உணவு நிலைய பரிசோதனைகளில் 67 நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த 13 நிறுவனங்களில் இருந்து பெருமளவான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டது. இதன் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 நிறுவனங்களுக்கு எதிராகவும் 105,000/- தண்டம் அறவிடப்பட்டது.

இந் நிகழ்வில் பங்கு கொண்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். ரயீஸ், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கும் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயங்களின் மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பர்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எல்லோருக்கும் தமது நன்றிகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.


சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு மற்றும் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த இருவருக்கும் ரூபா முன்று இலட்சம் அபராதம் இன்றைய தினம் விதிக்கப்பட்டது.

இன்றைய தினம் குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்,அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு வைத்திருந்த குற்றவாளி ஒவ்வொருக்கும்  தலா ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வீதமும், அதனைக் காய்ச்சும் உபகரணங்களை வைத்திருந்தமைக்காக ருபா இருபத்தையாயிரமும் விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளிக்கு ரூபா 150 000.00 தண்டப்பணம் விதிக்கப்ட்டது. இருவருக்கும் ரூபா மூன்று இலட்சம் தண்டப்  பணமானது அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களினால் விதிக்ககப்பட்டது.

 


*நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது  வழக்குப்பதிவு இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது*


இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.


மட்டக்களப்பில் இ.போ.ச. பஸ் சாரதி, மீது தாக்குதல் - தனியார் போக்குவரத்து சாரதி தப்பி ஓட்டம் இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!
மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதல் சாரதி நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட சாரதி பஸ் வண்டியுடன் தப்பி ஓட்டம் நடுத்துனரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் சம்பவதினமான பகல் 11.10 மணியளவில் பிரயாணிகளை ஏற்றுவதற்காக தனியார் பஸ்வண்டி தரித்து நின்றுள்ளது. இதன் போது பின்னால் கல்முனையை நோக்கி பிரயாணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சாலைக்கான பஸ்வண்டி சாரதி பஸ்தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பஸ்வண்டி சாரதியை பஸ்வண்டியை கொஞ்சம் முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனியார் பஸ்வண்டி சாரதி கோபமடைந்து பஸ்வண்டியில் இருந்து இறங்கி இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி,நடத்துனர் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து தனியார் பஸ்வண்டி சாரதி பஸ்வண்டியுடன் தப்பி ஓடியதையடுத்து இதில் காயமடைநத இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் தனியார் பஸ்வண்டி நடத்துனரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவர் அதே சிறைச்சாலையில் பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.

 

பல்வேறு குற்றச் செயல்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவருக்கே சிறைச்சாலை அதிகாரி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறைக்காவலரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை சிறைக்காவலர் தனக்கு வழங்கியதாக அந்தப் பெண் மற்றொரு பெண்ணிடம் கூறினார்.

 

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 




க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை அண்மையில் பரீட்சையின் போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


யாழில் பொலிஸார் துரத்திச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் பலி! 


புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செ.பிரதீபன் (41) என்பவரே உயிரிழந்தார். 

 


ஏறாவூர் நகர சபை செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஏறாவூர் சுற்றுலா  நீதவான் நீதிமன்றத்தில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களுக்கு எதிராகவே வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தினால் விதிக்கப்பட்ட அரச கடமையை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 


அனுமதிக்கு மாறாகவும் அனுதியின்றியும் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கட்டிடம் தொடர்பில் நகர சபையின் செயலாளரினால் மேற்கொள்ள வேண்டிய கடமையினைச் செய்யத்  தவறியதன் அடிப்படையில் முறைப்பாட்டுக்காரர் நுபைர் சார்பாக  சட்டத்தரணி முஹம்மட் சப்றாஸ் என்பவரினால் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் இவ் வழக்கின் எதிரியான ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களை 31.05.2024ம் திகதியன்று ஏறாவூர் நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பானையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


பலாங்கொட பெட்டிடிகல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி வெளிநாடு சென்ற பின்னர் தனது மகளை கொடூரமாக தாக்கி வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக குறித்த நபரிடமும் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி அவரது தந்தையால் தாக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ஹெஷானி ரொட்ராகோ இன்று (03) உத்தரவிட்டார்.

 


புத்தளத்தைச் சேர்ந்த காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த காதி நீதிமன்ற நடுவர் 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 


வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 




பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய சந்தேகநபர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11) கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 (வி.சுகிர்தகுமார்   0777113659)

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் 02 பிரதேசத்தில் வீடொன்றின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ள நிலையில் உள்ளிருந்து 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்க்கப்;பட்டுள்ளார்.
குறித்த வீடானது பின் பகுதி முற்றாக கல் வீடாக அமைந்துள்ளதுடன் முன்பகுதியின் கூரைப்பகுதி கிடுகினால் வேயப்பட்டிருந்தது.
வீட்டின் முன்பகுதியே தீக்கிரையாகியுள்ளதுடன் தீக்கிரையான பகுதியிலேயே சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டது.
உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (09) இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அறியமுடிவதுடன் சம்பவம் நடைபெற்றபோது மனைவி பிள்ளைகள் அனைவரும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணையினை ஆரம்பித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக உயர் அதிகாரிகளுக்கும் விசேட தடயவியல் பொலிசாருக்கும் அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் தீடிர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டபின்னர் பிரேத உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக சடலத்தை கொண்டு செல்ல உத்தரவிட்டார்.


 எலி எச்சம் இருந்த வெதுப்பகம் : பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் : திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது. 


நூருல் ஹுதா உமர் 


புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. 


தொடர்ந்தும் இன்று (02) நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. 


இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்கள், வெதுப்பகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மட்டும் எலி எச்சங்கள் காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டது. 


கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார குழுவினர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


 சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு ! 


 நூருல் ஹுதா உமர்


புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் இன்று (01) மூன்றாவது தடவையாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார். 


கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். 


அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸ்லம் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும், வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது.


மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

 


சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு ! 


 நூருல் ஹுதா உமர்


உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் இன்று (30) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று.


உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.


மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது. 


இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர் எம்.ஜே. புஹாது உட்பட பலரும் ஈட்டுப்பட்டனர்.

 பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் கடும் சுடும் வெயிலில் நிறுத்திய கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் தற்போது அமுலில் உள்ளது 1883ம் ஆண்டின் 02 ம் இலக்க  தண்டனைச் சட்டக் கோவையாகும். இது காலத்திற்கு காலம் பல்வேறு திருத்தங்களைக்  கண்டிருக்கின்றது. அந்த வகையில்  1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். 


இலங்கையின் நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம், 16 என்ற  அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைப்பதாக அறிவித்துள்ளார்.

தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.