இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
(சுகிர்தகுமார்) 0777113659
--------------------------------------------------------------------------
அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியில் அல் குர்ஆனை ஒன்லைன் ஊடாக கற்று வந்த ஜப்பான் நாட்டில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் அங்கு நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில் தெரிவு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்
சாய்ந்தமருதை சேர்ந்த பொறியியலாளர் Uwais அவர்களின் புதல்வரும் புதல்வியுமான Uwais Mohamed Aabidh Rushdi மற்றும் Uwais Thahleela Thahaani ஆகியோர்களே தெரிவு செய்ய்யப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி Tokyo நகரில் நடைபெறவுள்ள இறுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேற்படி எமது அஷ்பால் அகடமி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு ஒன்லைன் மூலமாக பயிற்றுவித்த எமது அகடமின் உஸ்தாத் மார்களான அல் ஹாபிள் Dr M. I. M. Siddeek, அல் ஹாபிழ் B. M. Fasmeer, அல் காரி அல் ஹாபிழ் M. H. M. Sajjaath மற்றும் அல் ஹாபிள் Rinosan ஆகியோர்களுக்கும் அஷ்பால் வின்னேர்ஸ் அகடமி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
மேற்படி இரண்டு மாணவர்களும் இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கின்றோம்.
எமது பிராந்தியத்தில் இருந்து வெளிநாடு சென்று அங்கு வசித்து வருகின்ற பல மாணவர்களுக்கு அஷ்பால் அகடமி Online மூலமாக அல் குர்ஆனை பயிற்றுவித்து இவ்வாறான சர்வதேச நிகழ்வுகளில் வெற்றி ஈட்டக்கூடிய பல மாணவர்களை உருவாக்கி வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்
சுனாமி பேரலையில் நூற்றுக்கணக்கானவர்களை இழந்த அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் சுனாமிப் பேரலை நினைவு தின துஆ பிராத்தனையும், குர்ஆன் தமாம் செய்தலும், நினைவுரையும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஜும்மா பள்ளிசாலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெறவுள்ளது டன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை சுனாமி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமாகும் ஜும்மா பள்ளிவாசலின் இந்நிகழ்வு மஹரீப் தொழுகை வரை இடம்பெறவுள்ளதுடன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை இடம்பெறவுள்ள நிகழ்விலும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமாக்கள், பிரதேச செயலாளர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் சுனாமிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட உள்ளதுடன், துஆ பிராத்தனையும் சுனாமி தொடர்பிலான நினைவுரையும் இடம்பெறவுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமிப்பேரலையில் மாளிகைக்காடு கடற்கரையை அண்டியதாக அமைந்திருந்த கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மதரஸத்துல் இர்ஸாதியாவில் கல்விகற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் மரணித்ததுடன் குறித்த கல்வி நிலையங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது மற்றுமின்றி பல நூற்றுக்கணக்கானோர் மரணித்ததுடன் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.