ஜப்பான் நாட்டில் நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில், அட்டாளைச்சேனைமாணவர்கள் இருவர் இறுதி சுற்றுக்கு தெரிவு




 


ஜப்பான் நாட்டில் நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் மாணவர்கள் இருவர் இறுதி சுற்றுக்கு தெரிவு.

--------------------------------------------------------------------------

அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியில் அல் குர்ஆனை ஒன்லைன் ஊடாக கற்று வந்த ஜப்பான் நாட்டில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் அங்கு நடைபெற்ற அல் குர்ஆன் மனன போட்டியில் தெரிவு செய்யப்பட்டு இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் 


சாய்ந்தமருதை சேர்ந்த பொறியியலாளர் Uwais அவர்களின் புதல்வரும் புதல்வியுமான Uwais Mohamed Aabidh Rushdi மற்றும் Uwais Thahleela Thahaani ஆகியோர்களே தெரிவு செய்ய்யப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி Tokyo நகரில் நடைபெறவுள்ள இறுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.


மேற்படி எமது அஷ்பால் அகடமி மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு ஒன்லைன் மூலமாக பயிற்றுவித்த எமது அகடமின் உஸ்தாத் மார்களான அல் ஹாபிள் Dr M. I. M. Siddeek, அல் ஹாபிழ் B. M. Fasmeer,  அல் காரி அல் ஹாபிழ் M. H. M. Sajjaath மற்றும் அல் ஹாபிள் Rinosan ஆகியோர்களுக்கும் அஷ்பால் வின்னேர்ஸ் அகடமி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.


மேற்படி இரண்டு மாணவர்களும் இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கின்றோம்.


எமது பிராந்தியத்தில் இருந்து வெளிநாடு சென்று அங்கு வசித்து வருகின்ற பல மாணவர்களுக்கு அஷ்பால் அகடமி Online மூலமாக அல் குர்ஆனை பயிற்றுவித்து இவ்வாறான சர்வதேச நிகழ்வுகளில் வெற்றி ஈட்டக்கூடிய பல மாணவர்களை உருவாக்கி வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.