Showing posts with label Knowledge. Show all posts

#WorldDeafDay

பல விஷயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று 'உலக காது கேளாதோர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

காது

வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு சூழல் ஏற்படும். ஆம்... இந்த உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப்போன்று உணர்வீர்கள். ஆனால், உலகில் 44.6 கோடி பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு குறைபாட்டால் தங்களின் கேட்கும் திறனை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறி இருக்கிறார்கள். அவர்களில் பலர் உபகரணங்கள் உதவியுடன் கேட்கலாம். ஆனால், ஒரு பாடலை நாம் கேட்டு ரசித்துக் கொண்டாடும் அளவுக்கு அவர்களால் கேட்க முடியாது. 

பல விஷயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று 'உலக காது கேளாதோர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958-ல் உருவாக்கியது. அந்த வகையில் இந்த வருடம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. செவித்திறன் பாதிப்பு இன்னும் முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலக அளவில் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 44.6 கோடி பேரில், 3.4 கோடி பேர் குழந்தைகள். 

பாதிப்பு

"பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நெருங்கிய உறவில் திருமணம், கர்ப்பகாலத்தில் தாய்க்கு வைரஸ் பாதிப்பு, பிறந்தவுடன் குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு, மூச்சுத்திணறல் பாதிப்பு போன்ற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக  `ஓடோகோஸ்டிக் எமிஷன் டெஸ்ட்' (Otoacoustic Emissions Test) செய்யவேண்டியது அவசியம். அதில் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், மூன்று மாதம் கழித்து மீண்டும் பேரா டெஸ்ட் (Bera test -  Brainstem evoked response audiometry) செய்து அறுவை சிகிச்சை அல்லது மருந்துகளின் மூலம் பாதிப்பைச் சரிசெய்வோம். உடல்நலக் குறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனைகளிலேயே இந்தச் சோதனைகளைச் செய்வார்கள். அதைத்தாண்டிப் பெற்றோரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்" என்கிறார் முத்து சித்ரா. 

காதுகேளாமை பாதிப்பை குழந்தைப் பருவத்திலேயே கண்டறிந்தால் 60 சதவிகித பாதிப்பைச் சரிசெய்துவிட முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

"ஒரு வயதுக்கு மேலாகியும் குழந்தைக்குப் பேச்சு வராமல் இருந்தால் ஏதாவது சத்தம் கேட்டுத் திரும்பாமல் இருந்தால் அவர்களுக்குக் காது கேட்பதில் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்து கொள்ளும் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். 

காதுகேளாமை

பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காது அடைத்துக்கொள்வது, காதில் சீழ் வடிதல், உதட்டுப்பிளவு போன்ற பாதிப்புகள் இருந்தால் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, பெற்றோர்தான் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் குறைகிறதா, சீழ் வடிகிறதா என்பதைக் கண்காணித்து மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவேண்டும். 

பெண்களைப் பாதிக்கும் Osteosclerosis என்ற காது எலும்பு பாதிப்பு நோயாலும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு முப்பது வயதுக்கு மேலுள்ள பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது.  இது தாயின் மூலம் பிள்ளைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிய அறுவை சிகிச்சை மூலம் இதைச் சரிசெய்யலாம்.

டிரைவர்கள், அதிகமாகச் சத்தத்தை எழுப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், காவல்துறையினர், ஹெட்ஃபோனை அதிக சத்தமாக வைத்துக் கேட்பவர்களுக்கு (Noise-induced hearing loss) என்னும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான பாதுகாப்புக் கருவிகளுடன் வேலை செய்தால், சத்தமாக ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

காதில் உள்ள நரம்புத் தேய்மானம் காரணமாகவும் செவித்திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காதில்  சத்தம் கேட்பது, அடிக்கடி மயக்கம் ஏற்படுவது போன்றவை நரம்புத் தேய்மானத்தின் அறிகுறி.  இப்படி ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 

அதிக ஒலி

காது கேட்க உதவும் உபகரணங்களின்  உதவியுடன் இந்தப் பாதிப்பை ஓரளவு சரிசெய்யலாம். காது, மூக்கு, தொண்டை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அவற்றில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்றுவிடுவது நல்லது" என்கிறார் முத்து சித்ரா. 

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மனிதர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே மிக மிக முக்கியம். ஆனால், அதைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இதயத்துக்குதான். உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதியை உலக இதய தினமாக அனுசரித்துவருகின்றனர். இதயதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், இதயநோய்குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே. 

இதயநோய்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதயநோய், ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் பாதிக்கும். உலகம் முழுவதும் வருடத்துக்கு 1.79 கோடி பேர் இதய பாதிப்பால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 24 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். 

இந்தியாவில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகித மரணம் மாரடைப்பால் மட்டுமே நிகழ்கின்றன. அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு முன்னர், 100-ல் இரண்டு பேருக்கு மட்டுமே இதய நோய் இருந்தது. இப்போது, 100-ல் 14 பேருக்கு இருக்கிறது. 2020-ல் இது 20 ஆக உயரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதய நோய் என்றதும், பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு மட்டும்தான் தெரிகிறது. தினமும் பரபரப்பாக வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், விளையாட்டு வீரர்களுக்கு கார்டியோமியோபதியும், வயதானவர்களுக்கு கரோனரி ஆர்ட்டரி ஃபெயிலியரும், குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என எந்த வயதினருக்கும் இதய நோய் திடீரென ஏற்பட்டு விடுகிறது. 

இதய நோய்

உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக அளவு உணவை சாப்பிடுதல், தினசரி உடற்பயிற்சி செய்யாதது, அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும். இடது புற மார்பு மற்றும் தோள்பட்டைப் பகுதியில் வலி, தாடைப் பகுதியில் வலி, மார்பு இறுக்கம், அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ், புகைப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன், மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, மயக்கம், தசை வலி, உடலில் எனர்ஜி இல்லாதுபோவது போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகள். 


இதய நோய்

இதய நோயாளிகள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்து நாள்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இரவில் எட்டு மணி நேரமும், மதிய வேளையில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரமும் தூங்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பின், அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக எடையுள்ள கனமான பொருள்களைத் தூக்கக்கூடாது. கைகளை மூடியபடி, குனிந்தபடி செய்யவேண்டிய வேலைகளை முடிந்த அளவு தவிர்க்கலாம். உதாரணமாக, வாளிகளில் தண்ணீர் கொண்டு செல்லுதல், துணி துவைத்தல், பைக் ஓட்டுதல் போன்றவை. இவை, இதயத்துக்கு சுமையை அதிகரிக்கும். 

இதய நோய் வருவதற்கு புகைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் பற்றியே குறை கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் வாழும் சுற்றுச்சூழலை யாரும் பொருட்படுத்துவது இல்லை. நாம் வாழும் இடம், பணிபுரியும் சூழல் என ஒவ்வொன்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. 

உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.
ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.
புதுமையான சீர்த்திருத்தங்கள்
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைAFP
பெருஸ்கூலு (peruskoulu) - ஃபின்லாந்தின் கட்டாய கல்வித்திட்டத்தின் வெற்றிக்கதை இதுதான். 1970களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது.
ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையை குறித்து தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்கு காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.
"ஃபின்லாந்தின் இந்த திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூறமுடியாது" என்கிறார் அந்நாட்டை சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க்.
"மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்கு செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது."
கல்வி மற்றும் சமத்துவம்
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைAFP
சமத்துவமின்மை மக்களின் எதிர்பார்ப்பை தடுத்து, அவர்களின் வாங்கும் திறனை குறைக்கிறது - சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு நன்றாக இருக்கிறது என தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் பசி சல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவம் நிறைந்த சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாக பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சமநிலை அதிகமுள்ள நாடுகளில், அதிக கல்வியறிவுள்ள மக்கள் இருப்பதோடு பள்ளிப்படிப்பை கைவிடுப்வர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வருமானம் இடைவெளி குறைந்துள்ள நாடுகளில் உடல் பருமன் நோய் குறைவாகவும், நல்ல மன ஆரோக்கியம் இருப்பதாகவும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும், பாடம் கற்பிக்கும் முறைக்கும், கற்றுக் கொள்வதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு."
சமத்துவம் மற்றும் சமூக நீதி
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைEPA
தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.
பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்கு தேவையான அனைத்தும் இலவசம்.
முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.
சமமில்லாத வருமானம், ஏழ்மை உள்ளிட்டவையும் கல்வி முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய தாக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ள முடிவதாக மேலும் அவர் புத்தகத்தில் பசி எழுதியுள்ளார்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைAFP
இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு ஏற்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்பதற்கான பொருளாதார மாதிரி, ஃபின்லாந்தின் கல்விமுறை வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார் அவர்.
இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், குறைந்த விலையில் வீட்டுவசதி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்க ஊக்குவிக்க அவர்களுக்கு விடுமுறை மற்றும் பல நலத் திட்டங்களை இந்த பொருளாதார மாதிரி வழங்குகிறது.
ஆசிரியரின் மதிப்பு
இத்திட்டத்தின் தத்துவம் பள்ளி வகுப்பறைகளிலும் பிரதிபலித்தது.
வழக்கமான ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.
அவர்களின் வகுப்பிற்கு திட்டமிட்டு, அறிவை புதுப்பித்து, மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவது குறித்து திட்டமிட ஆசிரியர்களுக்கு போதிய நேரம் இருக்கிறது. நல்ல ஊதியத்தோடு, நல்ல சூழலில் அவர்கள் பணிபுரிகிறார்கள்.
மருத்துவம், சட்டம் மற்றும் கட்டடக்கலையில் முன்னிலை வகிக்கும் ஃபின்லாந்து மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்வதை விரும்புகின்றனர்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிபடத்தின் காப்புரிமைEPA
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகளை விட ஃபின்லாந்தின் பள்ளி நேரங்கள் குறைவே - உதாரணமாக தொடக்க பள்ளியில் ஆண்டு ஒன்றுக்கு 670 மணி நேரம் மட்டுமே மாணவர்கள் செலவிடுகின்றனர். கோஸ்டா ரிகாவில் இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.
அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 1000 மணி நேரங்கள் செலவிடுகின்றனர்.
விக்கி பள்ளியில் பணியாற்றும் எர்யா ஸ்குன்க் கூறுகையில், "குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டும். வகுப்பறையில் அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, அதன் தரம்தான் முக்கியம்" என்றார். அதிக வீட்டுப்பாடம் இல்லாமல்தான் மாணவர்கள் இங்கு வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபின்லாந்தில் 15 வயதிலான மாணவர்கள் பள்ளிக்கு பிறகு வாரத்திற்கு சுமார் 2.8 மணி நேரங்கள் பணி புரிகின்றனர். தென் கொரியாவில் இது 2.9 மணி நேரங்களாகும்.
சில நாடுகளில் வீட்டுப்பாடத்திற்கான சராசரி நேரம் வாரத்திற்கு 4.9 மணி நேரங்கள். ஆனால், சீனாவில் இது 13.8 நேரமாக இருக்கிறது.
"மாணவர்கள் என்ன கற்க வேண்டுமோ அதனை வகுப்பறையில் கற்கிறார்கள். பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என மற்ற முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்" என்கிறார் மற்றொரு ஆசிரியரான மார்ட்டி மெரி.
நல்ல சூழல்
விக்கி பள்ளியின் சூழல் அமைதியானதாக உள்ளது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
பள்ளி சீருடைகள் எல்லாம் கிடையாது. மாணவர்கள் அவர்களது சாக்சுகளோடு கூட சுற்றலாம். ஸ்கான்டினேவியன் பள்ளிகளில் யாரும் ஷூ அணிந்திருக்க மாட்டார்கள்.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
ஃபின்லாந்து மாணவர்கள் தேர்வுகள் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. கல்வியில் சேரும் முதல் 5 ஆண்டுகளில் தேர்வுகளே கிடையாது. பின்னர், வகுப்பறையில் மாணவர்கள் அவர்களின் திறனை வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.
போதிய ஆதரவும், வாய்ப்பும் அளித்தால், எதையும் கற்றுக்கொள்வதற்கான ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதுதான் இந்த அமைப்பின் நடைமுறை.
பதற்றம் இல்லாமல் மாணவர்கள் படிக்க உதவ வேண்டும் என்பதையே ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஒன்றை கற்றுக்கொள்ள இயற்கையாகவே ஆர்வத்தை வரவைக்க வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் கல்வி கிடையாது.
ஆய்வு முடிவுகளின்படி, 7 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே கணிதம் பயில்வது குறித்து பதற்றமடைகிறார்கள். ஜப்பானின் கண்டிப்பான அமைப்பில் இது 52 சதவீதமாக உள்ளது.
மக்கள் நலன்
ஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூக திட்டங்களும், அந்நாட்டு கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.
ஃபின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி
எனினும், 2018ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது.
பசி சல்பர்க் கூறுகையில், "சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூக திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது" என்கிறார்.
"நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாக கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்".

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
படத்தின் காப்புரிRS
`வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கணக்குகள் மீட்டமைக்கப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படாத 40 மில்லியன் பயனாளர்களின் கணக்குகளும் மீட்டமைக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக்கின் தயாரிப்பு நிர்வாக பிரிவின் துணைத்தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.
இதனால் வெள்ளியன்று ஃபேஸ்புக்கின் பங்குகள் 3 சதவீதம் வரை குறைந்தன.
ஃபேஸ்புக் கணக்கை மூலமாக கொண்டு பயன்பாட்டாளர்கள் புகுபதிகை (Sign In) செய்துள்ள ஏர்பின்பி மற்றும் டிண்டர் ஆகிய பிற சில முக்கிய தளங்களிலும் ஹாக்கர்கள் இதன்மூலம் ஊடுருவியிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டனர்?
உலகின் எந்த பகுதியில் இந்த 50 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை, இருந்த போதிலும் அயர்லாந்து தகவல் கட்டுப்பாட்டாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மீண்டும் லாக்கின் செய்ய வலியுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச்சொற்களை மாற்ற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதால், இந்த கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறேதும் தகவல்கள் எடுக்கப்பட்டதா என்று கண்டறியவுள்ளோம். மேலும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம், அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியவரவில்லை" என ரோசன் தெரிவித்துள்ளார்.
முகநூல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"பயன்பாட்டாளர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியம்; இந்த தகவல் திருட்டு குறித்து மிகவும் வருத்தம் அடைகிறோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 50 மில்லியன் பயன்பாட்டாளர்களில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பக் மற்றும் அதன் தலைமை இயக்க அதிகாரி சாண்ட்பெர்க் ஆகியோரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
`வியூ அஸ்` (view as) என்றால் என்ன?
தங்களது கணக்கில் உள்ள தகவல்கள் பிற பயன்பட்டாளர்களுக்கு எவ்வாறு காட்சியளிக்கிறது என்பதைக் காட்டும் அம்சம் தான் ஃபேஸ்புக்கின் `வியூ அஸ்`.
ஃபேஸ்புக்கில் ஒருமுறை நுழைந்தவுடன் மீண்டும் மறுமுறை கடவுச்சொல்லை பொருத்தி நுழையத் தேவையில்லை, இது `ஆக்சஸ் டோகன்` எனப்படும் அம்சத்தால் சாத்தியமாகிறது. ஹாக்கர்கள் இந்த ஆக்சஸ் டோகன்ஸை திருடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் ஃபேஸ்புக்
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் பாதுகாப்பு குறித்து ஃபேஸ்புக் நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளது இம்மாதிரியான தகவல் திருட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தீய எண்ணம் கொண்டவர்களால் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவதாகவும், ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பை தீவிரமான ஒரு விஷயமாக கருதுவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது, தகவல்கள் திருட்டு குறித்தும், இதற்கு நிறுவனத்தில் யாரேனும் பொறுப்பாளர்களா என்றும் பதிலளிக்கவில்லை.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அந்த நேரத்தில், நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க அரசியல் சாசனத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ தற்போது வழியில்லாத நிலையில், புதிய தகுதியிழப்புச் சட்டத்தை நாடாளுமன்றம்தான் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதே நேரத்தில், தேர்தலில் நேர்மையை நிலைநாட்ட, ஐந்து யோசனைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1.தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தங்களுக்கு எதிராக எவ்வளவு வழக்குகள் உள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
2.தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகள் விவரம் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளிடமும் தெரிவிக்க வேண்டும்.
3.ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள வழக்கு விவரங்களை தங்கள் கட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும்.
4.வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரும் தங்கள் மீதான வழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தேர்தலுக்கு முன்பு மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும்.
5.இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தாங்கள் விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும். அதனால், அனைத்து நபர்களைப்பற்றிய தகவல்களும் அவர்களுக்கு முழுமையாக அறியத் தரப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஊழல் என்பது புற்றுநோயின் மையமாகிவிட்ட நிலையில், அதைக் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3)-ன் படி, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டிக்கப்பட்டால் தான் வகிக்கும் பதவியை அவர் தகுதியிழப்பதுடன், விடுதலையான பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4)-ன்படி, மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட்டாலும், அவர் மூன்று மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்ய முடியாது. அந்த காலகட்டத்தில் அவர் மேல்முறையீடு செய்தால், அதுபற்றி உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை தகுதியிழப்பு செய்ய முடியாது. பின்னர் இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தற்போது ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட மனுதாரதர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (4) ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தற்போதைய நிலவரப்படி 34 சதம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி உடையவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 142-வது அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில், குற்றப் பின்னணி உடையவர்கள் முழுமையாக தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக ஏடிஆர் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் ஜெகதீப் சொக்கர் தெரிவித்துள்ளார். சட்டத்தின் வார்த்தைகளைப் பின்பற்றியுள்ள உச்சநீதிமன்றம், அதே சட்டத்தின் உயிர்ப்புத் தன்மையை புறக்கணித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும், இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

விண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி வராலாற்று சாதனை படைத்துள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா அறிவித்துள்ளது. #JAXA #asteroid

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுஸா 2 ( Hayabusa 2) என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.

இந்நிலையில்,  ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிரக்கிக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிரக்கியது இதவே முதல் முறையாகும்.

இதன் விண்கல் மீது மூலம் முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.


Related Tags :
விண்கல் | ஜாக்ஸா | ஜப்பான்

இன்று (செப்டம்பர்15-ந் தேதி)அண்ணா பிறந்தநாள்

பேரறிஞர் அண்ணா பார்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது. இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்! கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார்.

பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான். ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணா அடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார்.



திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ, தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிடம், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா ?” என்று கேட்கிறார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா? தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும். அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இது தான் அண்ணாவின் விளக்கம். அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது.

அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம். மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா. எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது? என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது. இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார். அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு” என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா? 

உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WorldSuicidePreventionDay #WHO 2018.

ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் ஒருவரது தற்கொலைக்கு தூண்டுதலாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று, செப்டம்பர் 10-ஆம் நாள். உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. முன்னோக்கியே நகர்கின்ற உங்கள் வாழ்க்கையை சற்றே பின் நோக்கியும் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த யாரையாவது தற்கொலையால் இழந்ததுண்டா? இல்லை என்றாலும், நாளிதழ்களிலும் செய்திகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விஷயத்தை அவ்வப்போதுகேட்டு வருந்தியதுண்டா?

இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில்  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலுக்கமைய, 2,586 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இவர்களில் 677 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோரில், 19 சதவீதமானோர் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், 11.6 சதவீதமானோர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விரக்தியால் தற்கொலை செய்தவர்களாகவும் உள்ளனர். மேலும், 10 சதவீதமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாகவும், 35.18 சதவீதமானோர் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தற்கொலைகளை தடுக்க முடியுமா? எதனால் இந்தத் துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்றன? இந்த கேள்விகளை குறித்து சிந்திக்கவும், உங்களுடைய பங்கை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம். நம்முடைய பாட்டி, தாத்தாக்கள் பெரிய சுனாமியை எதிர்த்து நின்று ஜெயித்தபோது, வாழ்க்கையில் ஒரு சிறு அலை இன்றைய தலைமுறையினரை ஏன் அடித்துச் செல்கிறது? உளவியல் ரீதியாக இதை 'Resilience' என்கிறோம். ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல் நாம் ஒவ்வொருவர் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது.
  • நவீன உலகில் பறக்கும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகப் பார்க்கிறோம். சந்தோஷமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா? நான் அழுதால் சாய்வதற்கு தோளும் இல்லை. என் பிரச்சனைளை கேட்பதற்கு செவியும் இல்லை. 'Blue Whale Challenge", "Momo Challenge" என்று குழந்தைகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறக்கிறார்கள். தகாத உறவுநிலைகள், போதை பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு உயர்கிறது.
தற்கொலை குறித்த தவறான பார்வை
நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.


நீங்கள் சாதிக்க பிறந்தவர்; தற்கொலை செய்துகொள்ள அல்ல...படத்தின் காப்புரிமைAURUMARCUS

பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம்.
நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.


நீங்கள் சாதிக்க பிறந்தவர்; தற்கொலை செய்துகொள்ள அல்ல...படத்தின் காப்புரிமைDOMOSKANONOS

இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
வாழ்க்கை இருட்டாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம்‚ நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.