ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு
( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று (15) கல்விப் பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
Photo credit to it's respective owner
........................................................
எமது கல்லூரியின் இணைப்பாடவிதான அபிவிருத்தி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக கடந்த 28/04/2024 அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகாவித்தியாலத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி நிகழ்வின் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடையிலான முதல் கட்ட நிகழ்வில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள்
பின்வரும் நிலைகளை பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.என்பதுடன் மாகாண மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டனர்.
1.H.அப்துல் வதூத்-கிராஅத் (கனிஷ்ட பிரிவு) முதலாம் இடம்
2.S.இமாம் அஹமட்-கிராஅத் (சிரேஷ்ட பிரிவு) முதலாம் இடம்
3.MA.அன்சாப்-கிராஅத் (இடைநிலைப் பிரிவு)
மூன்றாம் இடம்
4.MM.ராசிம்-அதான் கூறுதல் (இடைநிலைப் பிரிவு).முதலாம் இடம்
5.L.முஹன்னத்-அதான் கூறுதல் (சிரேஸ்ட பிரிவு) இரண்டாம் இடம்
6.R.பாத்திமா ரஸா -நஸீத் (சிரேஸ்ட பிரிவு)
இரண்டாம் இடம்
7.AG.பிஸ்மி ஸஹா-அஸ்மாஉல் ஹுஸ்னா (சிரேஸ்ட பிரிவு) மூன்றாம் இடம்
இதற்கிணங்க இம்மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக பயிற்றுவித்த எமது பாடசாலை இஸ்லாம் பாட ஆசிரியர்களான அஷ்ஷேக் HM.சிப்னாஸ் (இணைப்பாளர்) ,அஷ்ஷேக் ANM.ஜுனைட்,,I.ஸிப்கா ஆசிரியை குறிப்பாக இம்மாணவர்களை பயிற்றுவிப்பதில் இரவு பகலாக தன்னை அர்ப்பணித்த இஸ்லாம் பாட ஆசிரியர் அஷ்ஷேக் NM.நிஷாத் ஆகியோருக்கும் மேலதிகமாக பல்வேறு உதவிகளை புரிந்த பிரதி அதிபர்
AL.நஸீபா(SLPS) ,ALM.இல்யாஸ் ஆசிரியர் அவர்களுக்கும் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்.
தகவல்-
NM.முஹமட் ஸாலிஹ் (SLPS)
பிரதி அதிபர்
இணைப்பாடவிதானம்
அக்/முஸ்லிம் மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
இலங்கையில் தொழிற்துறை கல்வியையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டு நவீன உலகினை வெற்றிகொள்ள மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக தாய் நாட்டின் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதே தேசிய விஞ்ஞான மன்றம் (NSF) ஆகும்.
இந்த அமைப்பினால் வருடந்தோரும் படசாலை மாணவரகள் மத்தியில் பல்வேறு மட்டங்களில் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில்,எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் வலய,மாகாண போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி
தேசிய மட்டத்தில் STREAM EDUCATION அபிவிருத்தி சம்பந்தமான பாடல் நிகழ்வினில் இரணடாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 30/04/2024 அன்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்வியமைச்சர் கௌரவ சுசில் பிரேம் ஜயந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் தலைசிறந்த விஞ்ஞானிகளும் வைத்திய நிபுணர்களும் கலந்து சிறப்பித்தனர்.
எமது கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும்
1.Haroon Fathima Hishma
2.Mansoor Fathima Hasna
3.Riswan Iffath Nama
4.Ilmy Fathima Reeza
5.Mohammad Sulfikar Perveze Mushari ஆகிய மாணவர்களே இவ்வாறு சான்றிதழ்கள் வழஙகி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு தேசிய விஞ்ஞான மன்றத்தின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களும் இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களும் மாணவர்களுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன்,எமது பாடசாலையினதும் ஊரினதும் நாமத்தை நாடறியச் செய்த இவ்வெற்றிக்காக மாணவர்களை தயார் படுத்திய அதிபர் AH.பௌஸ் (SLEAS) முன்னைநாள் இணைப்பாட விதான உதவி அதிபர் MA.சம்சுல் பழீல் மற்றும் ஆசிரியர்களான ALM.நவாஸ்,ALM.இல்யாஸ்,MA.ஹக்கீமா ஆசிரியை ஆகியோருக்கும் MA.பர்ஸானா (Do) வெற்றி பெற்ற மாணவர்கள் என யாவருக்கும் பாடசாலை சமூகம் தனது நல்வாழ்த்துக்களை கூறி நிற்கின்றது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி அவர்களும் மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை.
கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆறாவது உபவேந்தராக நியமிப்பார்.