கௌரவிப்பு




 


(வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவில் நடப்பாண்டின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவு விளையாட்டு கழகத்தின் 41 வது வருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கபொத சாதாரண தரத்தில் 9ஏ பெற்ற மற்றும் கபொத உயர்தர பரீட்சையில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் 29 பேர் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றோரால் பாராட்டப்பட்டார்கள்.

பிரதம அதிதியான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் 
கழக போசகர்களான  வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டு கௌரவித்தனர்.