நீர்வெட்டு




கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. 

நாளை காலை 9 மணி முதல் இவ்வாறு நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் தெஹிவல, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, முல்லேரியாவ, ரத்மலான மற்றும் சொய்சாபுர தொடர்மாடிகள் பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.