அக்கரைப்பற்று பதுர் பள்ளியில் ஒன்று சேர்ந்தோருக்குப் பிணை


ஊடரங்கினை மீறி, அக்கரைப்பற்று பதுர் பள்ளிவாயலில், இரவுத் தொழுகையினை தனியாகத் தொழுத பின்பு கலைந்த 10 பேர், அக்கரைப்பற்று  இராணுவத்தால், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம், இந்த சந்தேக நபர்கள் அனைவரும் அக்கரைப்பற்று பொலிசாரால், அக்கரைப்பற்று நீதிமன்றில் கௌரவ பதில் நீதிபதி எஸ்ஏஆர். ஆர்கிலா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். குறித்த சந்தேக

இவர்கள் தலா 50 000/=பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு பதில் நீதிபதி உத்தரவிட்டார். இதேவேளை, ஊரடங்கினை மீறிச் சென்ற இன்னும் சில சந்தேக நபர்கள் பயணம் செய்த வாகனம் விடுவிக்கப்படவில்லை. அது நீதிமன்றக் கட்டுக் காப்பில் வைக்கப்பட்டுள்ளது.