(
உயர்தர கிரிக்கெட் அனுபவத்தைப் பெற விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு கோட்டைமுனை பகுதியில் இந்த பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
(ஏ.எம்.ஹஸ்னி)
சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)
Rep/Faslin.
ஆரையம்பதி கடற்கரையில் பட்டத் திருவிழா.
சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்
மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத் திருவிழா இன்று(19) சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்
இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்
இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு
உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்
வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்