Showing posts with label Eastern. Show all posts

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கல்வி முகாமைத்துவத்திற்கான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் எம்.எச்..றியாஸா நியமனம் பெற்றுள்ளார்.

காரைதீவு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன், கல்முனை கோட்டத்திற்கான கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆகியோருக்கு மாகாண கல்வி செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

அதே வேளை எம்.எல்.எம்.முதர்ரிஸ் உடற்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளருக்கான கடிதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

 நியமனக் கடிதங்கள் அனைத்தும் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன


 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களும் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த  மழை இன்று காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலபிரதேசங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன்  காற்றும் வீசி வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நூருல் ஹுதா உமர் 

சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களின் உறையுள் தேவைக்காக OCD அமைப்பின் தலைவரின் எண்ணக்கருவில் உருவான "யாவருக்கும் உறையுள் - 2030" எனும் தொனிப்பொருளில் நிர்மானிக்கப்படவுள்ள 13 ஆவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) மலையடிக்கிராமம் 4 அல்-அக்ஷா பள்ளிவாசல் மஹல்லாவுக்குட்பட்ட பகுதியில் அமைப்பின் செயலாளர் சரோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து அடிக்கல் நாட்டிவைத்தார். 

இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் நஸீர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர் மொஹம்மட் தம்பி, நூர் பள்ளிவாசல் தலைவரும், அமைப்பின் ஆலோசகருமான அல்-ஹாபிழ் றிப்கான், சம்/மத்திய கல்லூரியின் உப அதிபர் பர்ஸான், கணக்காளர் ஜிப்ரி, அஸ்ஸமா வித்தியாலய அதிபர் அபூபக்கர், ஜனாதிபதியின் இளைஞர் விவகார அமைப்பின் உறுப்பினர் பாஸித், OCD அமைப்பின் செயலாளர் பெரோஸ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 


( எம்.என்.எம்.அப்ராஸ்)

புனித நோன்பு நாட்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் (2024)கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. 

தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது பற்றி கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நோன்பு ரமழான் முழுவதும் மொத்தமாக 4164 நோன்பு பிடிக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை,மருதமுனை,

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் இடத்துக்கே சென்று 

மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக  சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, அவர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை மேலதிகமாக கடமையாற்றவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக, அம்பாந்தோட்டை வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த  வைத்திய கலாநிதி டாக்டர்.  ஏ.பி.ஆர்.எஸ்.சந்திரசேன  நியமிக்கப்பட்டு அவர் கடந்த 2ஆம் திகதி கடமையேற்றுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் கடமைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் நியமிக்கப்பட்டார் .

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்ற வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை  ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருட காலமாக அர்ப்பணிப்புடன் சிறந்த சேவை செய்து வைத்தியசாலையின் பாரிய வளர்ச்சியில் அபரிமிதமான பெரும் பங்காற்றிய டாக்டர் இரா முரளீஸ்வரன் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில்  வயல்விழா  நேற்று முன்தினம் நடைபெற்றது.


பரசூட் முறையிலான நெற்செய்கையின் நன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பரசூட் முறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்பன முறையான செய்து காட்டல்கள் மூலம் விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி நித்தியா நவரூபன், எஸ்.சித்திரவேல் பாடவிதான உத்தியோகத்தர்களான திருமதி லாவண்யா செந்தீபன், லக்ஸ்மன், மாறன் ஆகியோருடன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன்போது ஏற்கனவே பரசூட் தட்டுக்களில் இடப்பட்ட நாற்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பரசூட் முறையிலான நெற்செய்கையின் போது எமது செலவினை குறைத்து அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 8-12 Kg விதைநெல் போதுமானது என்பதால் மிகக்குறைந்த செலவே ஏற்படும் எனவே விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டுவதற்கு விவசாய திணௌக்களத்துடன் சேர்ந்து முயற்சிக்க வேண்டும் என பிரதி விவசாய பணிப்பாளரும் தன்னுடைய உரையில் கேட்டுக்கொண்டார்.


 நூருல் ஹுதா உமர் 


மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் 
பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். 

நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். 

இதன்பின் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.


வி.சுகிர்தகுமார் 0777113659  


 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபி;ர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

 


மாளிகைக்காடு அல் ஹூசைன் வித்தியாலயத்தில் நினைவு மலர் வெளியீடும்  இப்தார் நிகழ்வும்!


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில்  நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், வித்தியாலயத்தின் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் 2024.04.07 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபரின் முயற்சியினால் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அன்சார் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டனர்.

 


ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக இடைக்காலத் தடை - கிழக்குமாகாண மேல் நீதிமன்றம் 


கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான பாத்திமா ருகையா அவர்கள் பொத்துவில் - ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.


ஆசிரியை பாத்திமா றுகையா தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சட்டரீதியானது அல்ல என்ற அடிப்படையில் எழுத்தானை (Writ) மனுவொன்றை சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆஸாத் அவர்களின் ஆலோசனையில் கல்முனையில் அமையப்பெற்றுள்ள கிழக்குமாகாண மேல் மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் பிரதிவாதிகளாக மாகாணக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளார், ஆசிரியர் இடமாற்ற சபை, ஆசிரியர் இடமாற்ற மேன் முறையீட்டு சபை என 27 பேர் பெயரிடப்பட்டிருந்தனர்.


ஆசிரியை பாத்திமா ருகையா சார்பாக சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் அறிவுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி அம்ஜாட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.


ஆசிரியை சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பல வழிகளில் தவறானது என வாதிட்டனர். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி காலாவதியான 1/2016 ம் ஆண்டைய ஆளணி முறையை வைத்துச் செய்யப்பட்டது என்றும், இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் அங்கத்தவர்கள் கிழக்கு மாகாண இடமாற்றக் கொள்கைக்கு முரணாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு பாடசாலையில் வெற்றிடம் இருக்கும் போது இன்னொரு வலயத்திற்கு அனுப்பப்படுவது தவறானது எனவும் கடுமையாக வாதாடியிருந்தனர்.


இரு தரப்பினரினதும் சமர்ப்பணங்களை செவியுற்ற நீதிமன்றம் காலாவதியான ஆளணியை அடிப்படையாக வைத்து இடமாற்றங்களை மேற்கொண்டமை சட்ட ரீதியானது அல்ல என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக அடுத்த திகதி வரைக்கும் இடைக்காலத்தடையை விதித்து குறித்த ஆசிரியரை தனது பழைய பாடசாலையிலேயை கற்பிக்குமாறு, நேற்று கட்டளையிட்டது


கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் செய்யப்பட்ட இடமாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு றுகையா அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத்தடையைத் தொடர்ந்து பல ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நீதி மன்றில் சவாலுக்குட்படுத்தத் தயாராகி வருகின்றனர்.


 (எஸ்.அஷ்ரப்கான்)                               

சம்மாந்துறை சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஹுதா வங்கிப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா  தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமது ஷாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து கையளித்தார்.            
இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக  உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம்  சலீம்,மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர்,அபிவிருத்தி உதவியாளர்,வங்கிச் சங்க முகாமையாளர்,திட்ட முகாமையாளர்,வலய முகாமையாளர்,சமூக அபிவிருத்தி உதவியாளர்,வலய உதவி முகாமையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்டத் தலைவர்,வங்கி கட்டுப் பாட்டுச் சபைத் தலைவர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்  திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, திறன் விருத்தி, மகளிர் அபிவிருத்தி, நீர் விநியோகத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


#SukirthaKumar


இலங்கை வங்கியின் ஒலுவில் கிளையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் த.பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள். 


பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் அக்கரைப்பற்று மண்ணை புகுந்த இடமாக கொண்டுள்ளதுடன் அக்கரைப்பற்று தம்பிலுவில் அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் கடமையாற்றியுள்ளதுடன் சமூக சேவையிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது சேவை தொடரவும் இன்னும் பல பதவி உயர்வுகளை பெறவும் பிரதேச மக்கள் சார்பில் வாழ்த்துகின்றேன்.


கடந்த 11 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த திருக்கோவில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் நாளை (28) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 11  ஆம் திகதி அம்பாறை - திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார்.

இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது. 

வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு  அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில்  பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது,  திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்களின் அமைப்பான நவ்ஸ் எனும் அமைப்புக்கு ஒரு தொகுதி ஈத்தம் பழங்கள் அன்பளிப்புச் செய்தார்.

சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களது சார்பில் அமைப்பின் முக்கியஸ்தர்களான சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரும் அமைப்பின் ஆலோசகருமான எம்.சி. பர்ஷான் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் அமைப்பாளர் ஏ. அபூபக்கர் ஆகியோர் குறித்த ஈத்தம் பழங்களை நவ்ஸ் அமைப்பின் தலைவர் எம்.ஏ. றிபாயிஸ் முகம்மட் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கி வைத்தனர்.


 நூருல் ஹுதா உமர் 


வரட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா, கடற்தொழில் மற்றும் நீரியல் வள மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்

சமூகமாக முன்னேற வேண்டும் என்றால் இளைஞர்கள் தொடர்ச்சியாக அறிவைப்  பெருக்கிக் கொள்வதோடு ஒருமைப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படுவதிலே தான் நாம் சமூகமாக முன்னேற முடியும் என அக்கரைப்பற்று அனைத்து  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்

பாலமுனை பிரதேசத்தில் இருந்து கிழக்கின் கேடயத்தில் புதிய அங்கத்தவராக இணைந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

புத்தாக்க கல்வி அறிவை அடித்தளமாக கொண்ட சமூகமாக நாம் வளர வேண்டும். அத்துடன் ஒருமைப்பாட்டுடன் எல்லோரும் சேர்ந்து இயங்கும் முறைமைக்குள் நாம் உள்வாங்கப்படுகின்றபோது நமது சமூகம் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை பிரசவித்துக்கொள்ளும். அந்த முறையை கொண்டு வருவதே எங்களது முதல் பணியாகும் என்றார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கிழக்கின் கேடயம் பொருளாளர் ஏ.எல்.ருஸ்தி அஹ்மத், கிழக்கின் கேடயத்தின் இணைப்பாளர் சட்டக்கல்லூரி மாணவன் முஹம்மட் அசாம், ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும், கிழக்கின் கேடயத்தின் ஆலோசகருமான சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எம்.அர்சாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு;ள்ளதுடன் இதனால் அவசர சேவை சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அன்மையில் ஏற்பட்ட மாணவனின் மரணித்தின் பின்னராக இடம்பெற்ற மக்களது ஆர்ப்பாட்டம் மற்றும் வைத்தியசாலையின் உடமைகள் சில தாக்கப்பட்டதை கண்டித்தோ இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டும் பொலிசாரால் உரியவர்கள் கைது செய்யப்படவி;ல்லை என்பதை தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட நிலையிலும் வைத்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே வைத்திய சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேநேரம் 15 நாட்களுக்கும் மேலாக திருக்கோவில் வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் பாம்பு கடியினால் தீண்டப்பட்ட ஒருவர் மரணித்துள்ள நிலையில் இன்னுமொருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
அத்தோடு சுமார் 30 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்களின் தேவையினை பூர்த்தி செய்து வந்த வைத்தியசாலையின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வயோதிபர்கள் சிறுவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற வந்தவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெரும் தொகை பணதத்pனை செலவு செலவு செய்து தொடர்ச்சியாக தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளதுடன் ஏழை நோயாளிகள் மீது கருணை கொண்டு வைத்திய சேவையை மீள ஆரம்பிக்குமாறு பொது மக்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிர்களை கேடயமாக பயன்படுத்தாது சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதமாக நடவடிக்கைகளைக் முன்னெடுத்து  வைத்திய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவவுமாறு நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.