புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு
நூருல் ஹுதா உமர்
புனித நோன்பு நாட்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தவர்களுக்குமான இலவச ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை இவ்வருடமும் (2024)கல்முனையன்ஸ் போரம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.
தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது பற்றி கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நோன்பு ரமழான் முழுவதும் மொத்தமாக 4164 நோன்பு பிடிக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகளை கல்முனை,மருதமுனை,
சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் இடத்துக்கே சென்று
மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
( வி.ரி.சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில் நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், வித்தியாலயத்தின் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் 2024.04.07 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரினால் 509 ஆசிரியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. அவ்விடமாற்றத்தில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியையான பாத்திமா ருகையா அவர்கள் பொத்துவில் - ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.
ஆசிரியை பாத்திமா றுகையா தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் சட்டரீதியானது அல்ல என்ற அடிப்படையில் எழுத்தானை (Writ) மனுவொன்றை சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆஸாத் அவர்களின் ஆலோசனையில் கல்முனையில் அமையப்பெற்றுள்ள கிழக்குமாகாண மேல் மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில் பிரதிவாதிகளாக மாகாணக் கல்விப்பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளார், ஆசிரியர் இடமாற்ற சபை, ஆசிரியர் இடமாற்ற மேன் முறையீட்டு சபை என 27 பேர் பெயரிடப்பட்டிருந்தனர்.
ஆசிரியை பாத்திமா ருகையா சார்பாக சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் அறிவுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி அம்ஜாட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
ஆசிரியை சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பல வழிகளில் தவறானது என வாதிட்டனர். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி காலாவதியான 1/2016 ம் ஆண்டைய ஆளணி முறையை வைத்துச் செய்யப்பட்டது என்றும், இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் அங்கத்தவர்கள் கிழக்கு மாகாண இடமாற்றக் கொள்கைக்கு முரணாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு பாடசாலையில் வெற்றிடம் இருக்கும் போது இன்னொரு வலயத்திற்கு அனுப்பப்படுவது தவறானது எனவும் கடுமையாக வாதாடியிருந்தனர்.
இரு தரப்பினரினதும் சமர்ப்பணங்களை செவியுற்ற நீதிமன்றம் காலாவதியான ஆளணியை அடிப்படையாக வைத்து இடமாற்றங்களை மேற்கொண்டமை சட்ட ரீதியானது அல்ல என்ற அடிப்படையில் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக அடுத்த திகதி வரைக்கும் இடைக்காலத்தடையை விதித்து குறித்த ஆசிரியரை தனது பழைய பாடசாலையிலேயை கற்பிக்குமாறு, நேற்று கட்டளையிட்டது
கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரினால் செய்யப்பட்ட இடமாற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு றுகையா அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத்தடையைத் தொடர்ந்து பல ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை நீதி மன்றில் சவாலுக்குட்படுத்தத் தயாராகி வருகின்றனர்.
இலங்கை வங்கியின் ஒலுவில் கிளையின் முகாமையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் த.பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் அக்கரைப்பற்று மண்ணை புகுந்த இடமாக கொண்டுள்ளதுடன் அக்கரைப்பற்று தம்பிலுவில் அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் கடமையாற்றியுள்ளதுடன் சமூக சேவையிலும் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சேவை தொடரவும் இன்னும் பல பதவி உயர்வுகளை பெறவும் பிரதேச மக்கள் சார்பில் வாழ்த்துகின்றேன்.
கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி அம்பாறை - திருக்கோவிலிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகவீனமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவன் உயிரிழந்தார்.
இதனையடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்மித்து இடம்பெற்ற எதிர்ப்பினையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டது.
வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்தவர்களும் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கல்முனை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.