அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு




 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் கல்முனையில் நேற்று(21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டார்மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகச் செயலாளர் பி.எம்.எம்.ஜஃபர்,நிருவாக கிராம உத்தியோகத்தர் உதார,கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.