பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமானப்பணி





வி.சுகிர்தகுமார் 0777113659
 

 ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று (26) சிரமானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில்; அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் வைத்தியர் குணாளினி சிவராஜ் மேற்பார்வை செய்தார்.
வைத்தியசாலையின் வெளிச்சுழலில் காணப்பட்ட ; புற்கள் குப்பைகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட குப்பைகள் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டதுடன் அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பொது இடங்கள் ஆலயங்கள் என துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினராகிய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.