நினைவு மலர் வெளியீடு




 


மாளிகைக்காடு அல் ஹூசைன் வித்தியாலயத்தில் நினைவு மலர் வெளியீடும்  இப்தார் நிகழ்வும்!


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹூசைன் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில்  நினைவு மலர் வெளியீடும், இப்தார் நிகழ்வும், வித்தியாலயத்தின் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் திறந்த வெளியரங்கில் 2024.04.07 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். நளீம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.


நிகழ்வின்போது அஷ்செய்க் மௌலவி ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார். இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.