மாணவர்களுக்கு இலவச சீருடை; இலவசப் புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
நீதிமன்றின் நீண்ட காலமாக ஓட்டடை ஒடிசல் விழுந்து காணப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புணரமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான,புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு, போன்றவையும், இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதின்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.
இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் இன்றைய தினம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதியுமான றிஸ்வான் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்பலகையினை திறந்து திரை நீக்கம் செய்து வைத்தார்.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க மூத்த துணைத் தலைவர், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ. றசீத் அவர்கள், அங்குரார்ப்பண உரையினை நிகழ்த்தும் போது, பல தசாப்தகாலமாக புணரமைக்கப்படாமல் காணப்பட்டிருந்த, அக்கரைப்பற்று நீதிமன்று,கடந்த 2024.01.01 கௌரவ நீதிபதியாக ஏ.சி. றிஸ்வான் அவர்கள் கடமையேற்றதன் பின்பு, பல்வேறுபட்ட மாற்றங்களகை் கண்டு வருகின்றது என்பதாகத் தெரிவித்தார்.அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சிமன்றங்களக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான கௌரவ ஏ.சி. றிஸ்வான் அவர்கள் உரைநிகழ்த்தும் போது, குறுகிய காலத்தில் இப் பணிகளைச் செய்து முடிக்க அரும்பணியாற்றிய, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கும், களப்பணியில் ஈடுபட்ட சமூதாயஞ்சார் பணியாளர்களுக்கும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான திறப்பு விழாவினைச் செய்து கொடுத்த அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
நாமும் ஒரு முறை வாழ்த்தலாமே!
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று 2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது.
இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய தினத்தில் கலை கலாச்சார பீடத்திலிருந்து 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மானர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவின் மூன்றாவது அமர்வில் விஷேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து
2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.
பொறியியல் பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக் கொண்டார். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விரும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட https://www.seu.ac.lk/conv24/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது விஷேட அம்ஷமாகும்.
நாளை 2024.02.11 நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது