கால்கோள் விழா





 ( வி.ரி. சகாதேவராஜா)

நாவிதன்வெளி கணேசா வித்தியாலயத்தில் 2024ம் ஆண்டிற்கான தரம்-1 இற்கு புதிய மாணவர்களை  உள்வாங்கும் வித்தியாரம்ப நிகழ்வானது புதிதாகக் கடமையேற்றுள்ள அதிபர் திருமதி கா.துரைலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் போது அதிபர் அவர்களை ஆசிரியர்கள்,மாணவர்களால் பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டார்கள்..
விழாவில்  பிரதம அதிதியாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் .சி.பிரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அப்பாடசாலையில் தரம்-9வரை கற்று தரம்-10 இற்கு ஏனைய பாடசாலைக்கு கற்கச் செல்லும் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வும் நடைபெற்றது.