Showing posts with label sports. Show all posts

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் விளையாட்டு நிகழ்வும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வெளிவீதி பிரதேசத்தில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபக தலைவரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அருளாளராக ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக வசந்தன் குருக்களும் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முன்பள்ளி இணைப்பாளர்; மோகனதாஸ் மற்றும் ஆலய தலைவர் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது.
பின்னராக நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் பாலர் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இறுதியாக போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் பரிசுகள் என வழங்கி வைக்கப்பட்டன.
பாலர் பாடசாலை மாணவர்களை சிறப்புற கற்பித்த ஆசிரியைகளும் இதன்போது பாராட்டப்பட்டனர்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார்  குருகுல அறநெறி பாட சாலைகளில் ஒன்றான திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலை பிள்ளைகளின் பாரம்பரிய கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வு 
 திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ கணேசா அறநெறி பாடசாலை நாடாத்திய இச் சித்திரை விளையாட்டு போட்டி நிகழ்வு சுவாமி விபுலா னந்தர்  நூற்றாண்டு நினைவாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் ( கண்ணன்)  மற்றும் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் சோ,ரவீந்திரன்,ஆசிரியர்களான ஜனா , தர்மசீலன் மற்றும் அறநெறி ஆசிரியர்கள், பெற்றோர்கள்   ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


(வி.ரி.சகாதேவராஜா)

பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  திறந்து வைத்தார்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை (101/7) வீழ்த்தி இலங்கை (169/5) சாம்பியன் பட்டத்தை வென்றது

 


தகுதி 🇱🇰🏏

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான 2வது அரையிறுதியில் இலங்கை பெண்கள் வெற்றி பெற்று ஐசிசி மகளிர் #T20உலகக் கோப்பை 2024க்கு தகுதி பெற்றனர்.
#SriLanka #T20WorldCup2024 #LKA #CricketTwitter

 


வி.சுகிர்தகுமார் 0777113659   

 தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையில் தேசிய ரீதியில் ஸ்மார்ட் யுத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா தேசிய ரீதியில் நேற்று (27)பிற்பகல் வேளையில் இடம்பெற்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தம்மரெத்தின சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் வேளையில் ஸ்மார்ட் யுத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஆலோசனைக்கு அமைய இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யு.சுசந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட உதவிப்பணிப்பாளர்  யு.எல்.மஜீட் மற்றும் இளைஞர் சேவை மன்றத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டர் இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
வழக்கு மரம் ஏறுதல் தலையனைச்சமர் முட்டி உடைத்தில் கிடுகிழைத்தல் சாக்கோட்டம் சமநிலை ஓட்டம் தேங்காய் துருவுதல் முட்டை மாற்றுதல் தொப்பி மாற்றுதல் வினோத உடைப்போட்டி என பல்வேறு பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 


Chennai super Kings அணியின் கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே, நடிகர் அஜித்குமாருடன் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Sugirthakumar Vijayarajah
.


40 வயதிற்கு மேற்பட்ட Legend Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது.
10 ஓவர்களில் 124 எனும் இலக்கை நிர்ணயித்த லெஜன்ட் வோரியஸ் அணியின் இலக்கை தாண்டி வெற்றி வாகை சூடியது.

குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரபு மற்றும் மேகசுதன் ஆகிய இருவருக்கும் அணியை வழிநடத்திய தலைவர் தயகாரன் சிரேஸ்ட வீரர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியோர்.

இச்சுற்றுப்போட்டி தொடரை ஏற்பாடு செய்து கடந்த கால நினைவுகளை நினைவூட்டியதுடன் பதவி நிலைகளுக்கு அப்பால் முன்னாள் கிரிக்கெட் நண்பர்களை சந்திக்க வாய்பேற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் நன்றி.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் கடந்த மாதம் (29) ஆரம்பமாகியது.
.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிபோட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரரும் சுப்பர் லெஜன்ட் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 


(எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்)


புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகம் நாடாத்திய கரப்பந்தாட்ட போட்டியில் "றை ஸ்டார் பிங்" அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றினர்.

பாலமுனை றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட மற்றும் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமான மர்ஹூம் சாலிஹ் அவர்களின் ஞாபகார்த்தமாக அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி அண்மையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் 
பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகவும், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான நியாஸ் ஆதம் நட்சத்திர அதிதியாகவும், றை ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர்களான அதிபர் கே.எல்.உபைதுல்லா, எஸ்.ரீ.வாஹிட், கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஐ.மனாப், செயலாளர் சிபான் அசீஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
  
இக்கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு "றை ஸ்டார் பிங்" மற்றும் "றை ஸ்டார் வோரியஸ்" ஆகிய அணியினர் தெரிவு செய்யப்பட்டு "றை ஸ்டார் பிங்" அணியினர் 21:15, 21:19 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.

இதன்போது நட்சத்திர அதிதியாகக் ககலந்துகொண்ட சட்டத்தரணி நியாஸ் ஆதம் வெற்றிபெற்ற "றை ஸ்டார் பிங்" அணியினருக்குரிய வெற்றிக் கிண்ணத்தினையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம்  நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன்  இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விளையாட்டு  நிகழ்வானது பே
நேற்று முன் தினம் (2024.04.10) பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர்  உதயகுமார் சிவராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
                    
இதன் போது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மைதான மற்றும் குழுநிலை போட்டிகளின்  இறுதிப் போட்டி நிகழ்வுகளும் ,  வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.   

பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் களுதாவளை கெனடி  விளையாட்டு கழகம் முதலாம் இடத்தினையும் (தங்கம் - 24, வெள்ளி - 22, வெண்கலம் - 12 ) செட்டிபாளையம்    நீயூட்டன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் (தங்கம்- 12, வெள்ளி - 11, வெண்கலம் - 10) பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர் சா. அறிவழகன், செட்டிபாளைய கிராம ஆலய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


 (வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று  (7) ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றன.
காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்ற போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி 48 க்கு 37 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

 


( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் கயிறு இழுத்தல் போட்டிகள் காரைதீவில் இடம்பெற்றன. 

காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில் காரைதீவு பிரதேச செயலக அணி வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.

பெண்கள் பிரிவில் அம்பாறை பிரதேச செயலக அணி முதலிடத்தையும் இரண்டாமிடத்தை தமன பிரதேச செயலக அணியும் பெற்றுக் கொண்டது.


( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின்  ஆரம்பப் பிரிவிற்கான வருடாந்த விளையாட்டு விழா  நேற்று (03)  புதன்கிழமை  கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..


பிரதமர் அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் யூ.சிவராஜா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதியாக கல்முனை
வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் கலந்து சிறப்பித்தார்.

போட்டியில் ஆறு இல்லங்கள் போட்டியிட்டன.
1) Rose House
2) Sun Flower House
3) Shoe Flower House
4) Audurium Flower House
5) Daisy Flower House
6) Lotus Flower House

முதலிடத்தினை LotusHouse   பெற்று வெற்றிவாகை சூடியது.

 (


வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச செயலகம் வருடாந்தம் நடத்தி வரும் பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டியில் இவ்வாண்டுக்கான  ஒட்டுமொத்த சம்பியனாக காரைதீவு விளையாட்டு  கழகம் தெரிவு செய்யப்பட்டது.

அக் கழகம் 20 தங்கப் பதக்கங்களையும், 16 வெள்ளிப் பதக்கங்களையும், 16 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாம்பியனாக தெரிவாகி சாதனை படைத்தது.

இரண்டாம் இடத்தை ஜொலிகிங்ஸ்  விளையாட்டுக் கழகமும் மூன்றாவது இடத்தை விவேகானந்தா விளையாட்டு கழகமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சாம்பியனாக சாதனை படைத்தமைக்காக தமது கழக உறுப்பினர்கள் அனைவருக்கும்  கழகத்தின் தலைவர் பொறியியலாளர் வி.விஜயசாந்தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 


கார்த்திகைப்பூ, ஆனையிறவு போர் நினைவுச்சின்னம்...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்காக தமிழ்த்தேசிய பிரதிபலிப்பை வெளிப்படுதும் இல்ல அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன


#Rep/SukirathaKumar

 40+ LPL சுற்றுப்போட்டி 

 

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் நேற்று (29) ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகின்றது.


ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.


முன்னாள் முன்னணி வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் விளையாட்டு வீரரும் சுப்பர் அணி தலைவரும்  நீதிபதியுமாகிய த.கருணாகரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் அணிகளுக்கான சீருடை அறிமுகம் இடம்பெற்றது.


இதன் பின்னராக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானம் மற்றும் பனங்காடு அக்னி விளையாட்டு மைதானம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானம் ஆகிய மைதானங்களில் 29 30 31 ஆம் திகதி இடம்பெறுகின்ற போட்டிகளின் இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


10 ஓவர்களை கொண்ட 11 பேர் பங்கும் பற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வுகளில் 60 இற்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் முன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் சிறந்த செயற்பாடாகவும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.


இத்தொடரின் போட்டி நிகழ்வுகள் இன்று பனங்காடு அக்னி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


போட்டிகளுக்கு அக்கரைப்பற்று நாதன்ஸ் மற்றும் அக்கரைப்பற்று மிஸ்டர் பிறைம் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கிவருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.