மாவட்ட சாம்பியனாக காரைதீவு அணி





 (வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று  (7) ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றன.
காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்ற போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி 48 க்கு 37 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது.