லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது





Sugirthakumar Vijayarajah
.


40 வயதிற்கு மேற்பட்ட Legend Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது.
10 ஓவர்களில் 124 எனும் இலக்கை நிர்ணயித்த லெஜன்ட் வோரியஸ் அணியின் இலக்கை தாண்டி வெற்றி வாகை சூடியது.

குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரபு மற்றும் மேகசுதன் ஆகிய இருவருக்கும் அணியை வழிநடத்திய தலைவர் தயகாரன் சிரேஸ்ட வீரர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியோர்.

இச்சுற்றுப்போட்டி தொடரை ஏற்பாடு செய்து கடந்த கால நினைவுகளை நினைவூட்டியதுடன் பதவி நிலைகளுக்கு அப்பால் முன்னாள் கிரிக்கெட் நண்பர்களை சந்திக்க வாய்பேற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் நன்றி.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் கடந்த மாதம் (29) ஆரம்பமாகியது.
.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிபோட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரரும் சுப்பர் லெஜன்ட் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்