சம்பியனாக KSC தெரிவு




 (


வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு பிரதேச செயலகம் வருடாந்தம் நடத்தி வரும் பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டியில் இவ்வாண்டுக்கான  ஒட்டுமொத்த சம்பியனாக காரைதீவு விளையாட்டு  கழகம் தெரிவு செய்யப்பட்டது.

அக் கழகம் 20 தங்கப் பதக்கங்களையும், 16 வெள்ளிப் பதக்கங்களையும், 16 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாம்பியனாக தெரிவாகி சாதனை படைத்தது.

இரண்டாம் இடத்தை ஜொலிகிங்ஸ்  விளையாட்டுக் கழகமும் மூன்றாவது இடத்தை விவேகானந்தா விளையாட்டு கழகமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சாம்பியனாக சாதனை படைத்தமைக்காக தமது கழக உறுப்பினர்கள் அனைவருக்கும்  கழகத்தின் தலைவர் பொறியியலாளர் வி.விஜயசாந்தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.