Showing posts with label Court. Show all posts

 


களுவாஞ்சிக்குடி நீதிமன்ற. உட்கட்டமைப்பு வசதிகள் புணரமைப்புச் செய்யபப்பட்டுள்ளன. கெளரவ நீதவான் திரு.ரஞ்சித் குமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நீதிமன்ற  உத்தியோகத்தர்கள், சமுதாய நன்நடத்தைப் பிரிவினர், கைதிகள் ஆகியோரின் உதவியுடன், மரநடுகை, சுற்றுச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், ஆகியவை கடந்த விடுமுறைக் காலத்தில் சிறப்புற முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

 இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சங்கைக்குரிய சுமணச் சந்திர தேரர் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்தக் கட்டளை பிறப்பிக்க்கப்பட்டுள்ளது.



 


சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ வீடியோக்களை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

 


இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (குடியேற்றம்) செய்த முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தரணி ஒருவரை சட்டத்தரணியாக கடமையாற்றுவதை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (இடம்பெயர்வு) எட்வர்ட் மெகரி, பிரதிவாதி அல்வாப்பிள்ளை கங்காதரன் வஞ்சகம் மற்றும் முறைகேடு செய்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் (BASL) எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார். 2015 ஜூன் 5ஆம் திகதியன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஒரு வழக்கு இருப்பதை பொய்யாக உறுதிப்படுத்தும் கடிதம், அழைப்பாணை மற்றும் ஒருவருக்கு எதிராக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆவணங்களுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மச்சாடோ, கூறப்பட்ட நபருக்கு ஐக்கிய இராச்சியத்தில் புகலிடம் கோருவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக.

உடனடி வழக்கில் பிரதிவாதி நடந்து கொண்ட விதத்தை இலகுவாகக் கருதவோ மன்னிக்கவோ முடியாது. பதிலளிப்பவரைப் பொறுத்த வரையில் கிடைத்த ஒரேயொரு கருணை, முதலில் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர் தனது தவறான நடத்தையை ஒப்புக்கொண்டு வருத்தமும் வருத்தமும் தெரிவித்தமைதான் என நீதியரசர் புவனேக அலுவிஹாரே குறிப்பிட்டார்.

நீதியரசர்களான புவன்வெக்க அலுவிஹாரே, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இதனைக் கொண்டுள்ளது. பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி அனுர குணரத்ன ஆஜராகியிருந்தார். சதுரிகா எல்விட்டிகல, சச்சினி சேனாநாயக்க மற்றும் நதாஷா பெர்னாண்டோ ஆகியோருடன் ரொஹான் சஹபந்து பி.சி.ஏ.எஸ்.எல். சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.கோபல்லவ ஆஜரானார்.

 


இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உயிரிழப்புக்கு காரணமான பஸ் சாரதியினை விளக்கமறியலில் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி தெசிபா  ரஜீவன்-கட்டளை பிறப்பித்தார்.

 


எந்தவொரு நீதிமன்றத்திலும் விதிக்கப்படும் மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி ஒப்புதல் கையொப்பமிடமாட்டாரென தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறிவிப்பு 

t

 


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல நிபந்தனைகளின் அடிப்படையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 21 பேரையும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எம்.ஏ. மொஹமட் சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) குறித்த மனு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை குறித்த இடைக்கால தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி மனுவை மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம்   தீர்ப்பளித்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ. எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ. ஆர். எம். அசீம் ஆகியோர்  தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 பணியாற்றி வந்த நிலையில், இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.


சாய்ந்தமருதுக்கான நகர சபை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசமாக இருந்து வந்த சாய்ந்தமருதுக்கு – உள்ளுராட்சி சபையொன்று வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்தது வந்தது.

இந்த நிலையில் கடந்த 2020 பெப்ரவரி 14ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை பிரகடனப்படுத்தப்பட்டது.

2162/50 இலக்கத்தையுடைய அந்த வர்த்தமானி அறிவித்தலில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபை அமுலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என, 2020 பெப்ரவரி 20ஆம் திகதி, அப்போதைய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்தார்.

இப்போதுள்ள பிரச்சினை என்ன?

ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை ரத்துச் செய்வதாயின், அதனை இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது, அதன் பின்னர் இன்னொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ரத்துச் செய்யப்படவில்லை என்கிறார் மனுதாரர் சலீம்.

எனவே, தற்போது சாய்ந்தமருது நகரசபை அமுலில் உள்ளது என்றும், எனவே அதற்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


கௌரவ ஓய்வு பெற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திரு இராமச்சந்திரன் அவர்கள் 07-01-2023ம் திகதி சனிக்கிழமை காலமானார்.  முல்லைத்தீவு நீதமன்றிலும், வவுனியா மேல் நீதிமன்றிலும் கடமையாற்றியவர் அவர். அவர் எந்த உத்தியோகத்தரையும் சினந்து, கடிந்து பேசியது கிடையாது, எவருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட உன்னதமான ஒருவர் ஆவார்


அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


கிளைபோசேட் பூச்சிகொல்லி மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வலிதற்றதாக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பூச்சிகொல்லிகள் பதிவாளர், விவசாயம் அமைச்சர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

கிளைபோசேட் பூச்சி கொல்லிக்கு 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளைபோசேட்டின் பயன்பாடு நீர்நிலைகள், மண், தாவரம், மீன்கள், பறவைகள் உட்பட மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளைபோசேட் மீதான தடையை நீக்குவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்று தீர்ப்பளிக்குமாறும் தடையை நீக்குவதற்கான உத்தரவை இரத்துச் செய்யுமாறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



ஸ்காட்லாந்து சுற்றுலாப்பயணி கெய்லீ பிரேசர், தன்னை #SriLanka #lka வில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியாக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 


மட்டக்களப்பு மேல்நீதிமன்ற அரச சட்டத்தரணி காரியாலயத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் சாஐன் 29651 கிட்னண் குலேந்திரன் என்ற உத்தியோகத்தர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3/8/2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்திருந்தார். 

அதனை பரிசோதித்து பார்த்த போது 75 520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டியிருந்தன. 

உடனே குறித்த உத்தியோகத்தர் இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபர் இடம் கொடுத்தியிருந்தார் . 

இவ்வுத்தியோகத்தர் சிறந்த குடும்பத்தை சேர்ந்தவரும்  கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் கிட்னண் கோவிந்தராஜா அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறான கடினமான சூழ்நிலையில் இவ்வாறு பண்பான முறையில் நடந்து கொண்டதை அனைவரும் போற்றவேண்டும்

 


மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

 


தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது


 

நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்கம் போல இடம்பெறும் என்பதாக நீதிச் சேவை ஆணைக்குழு - அறிவித்துள்ளது.

நீதிமன்ற ஊழியர்கள் சுழற்ச்சி முறையில் பணிபுரியவுள்ளர்கள்.



இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.