போற்றப்படவேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்


 


மட்டக்களப்பு மேல்நீதிமன்ற அரச சட்டத்தரணி காரியாலயத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் சாஐன் 29651 கிட்னண் குலேந்திரன் என்ற உத்தியோகத்தர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3/8/2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்திருந்தார். 

அதனை பரிசோதித்து பார்த்த போது 75 520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டியிருந்தன. 

உடனே குறித்த உத்தியோகத்தர் இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபர் இடம் கொடுத்தியிருந்தார் . 

இவ்வுத்தியோகத்தர் சிறந்த குடும்பத்தை சேர்ந்தவரும்  கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் கிட்னண் கோவிந்தராஜா அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறான கடினமான சூழ்நிலையில் இவ்வாறு பண்பான முறையில் நடந்து கொண்டதை அனைவரும் போற்றவேண்டும்