Showing posts with label Slider. Show all posts

Rep/Faslin.

 ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா.



சர்வமத சின்னங்களையிட்டு பட்டம் செய்து பறக்கவிட்ட மாணவன் முதலிடம்


மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத்  திருவிழா இன்று(19)  சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 


இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்


இதில் ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்


இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன


ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு

உமாபத சர்மா கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்

வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள்  கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்

 


யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் கி.கிரிசிகன் (15) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமான சம்பவம் பாடசாலை சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

 


நூருல் ஹுதா உமர்


சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் தொடர்ந்தும் திடீர் சோதனை நடவடிக்கை சாய்ந்தமருதில் இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்தும் இன்று (20) சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உலருணவுகள், மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகள் மேற்கொள்ளப்படாத உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டது.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார குழுவினர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தம் இல்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் களான  ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

 


மாளிகைக்காடு செய்தியாளர்


காரைதீவு பிரதேச செயலக பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தலைமையிலும், பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களின் ஏற்பாட்டிலும் இன்றையதினம் (19) இடம்பெற்றது.

இதன்போது இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியினை பெற்று கிடைக்கப்பெறும் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிப்பது தொடர்பிலும், விவசாயிகளின், அதிகாரிகளினதும் வேண்டுகோளுக்கமைவாக நீரியல் உயிரின பிரச்சினைகள்தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. மேலும் அப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதனூடாக கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பிலும் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.  

 


#Rep/Firthowze.

SLPS -3, SLTES -3, SLEAS - 3 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி பெற்ற சாதனை சகோதரி #ரஹிமாவுக்கு வாழ்த்துக்கள்!


வடமத்திய மாகாணத்தில் இருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 SLPS -3, இலங்கை ஆசிரிய கல்வியில் சேவை தரம் 3. SLTES -111, இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS -111 ஆகிய மூன்று போட்டிப் பரீட்சைகளிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவாகியுள்ள அளுத்கம தாருல் ஸலாம் வித்தியாலய அதிபர் மொஹமட் பாரூக் சல்மத்துல் ரஹீமாவின் சாதனை  இம் மாகாணத்தில் இதுவரை எட்டப்படாத ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இச்சகோதரியின் சாதனைப் பயணத்தை நாமும் மனதார வாழ்த்துவோம்!

 


வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


நூருல் ஹுதா உமர் 


இலங்கை நூலக சங்கத்தின் 18 வது தேசிய ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில், நூலக சங்க ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகருமாகிய கலாநிதி முஹம்மட் மஜீட் மஸ்றூபா தலைமையில் 2024.04.18 ஆம் திகதி இடம்பெற்றது.

இலங்கை நூலக சங்கம் 1024 அங்கத்தவர்களைக் கொண்ட, நூலகர்களுக்கான தொழில் முறை தராதரங்களைப் பேணுகின்ற, நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் கற்கை நெறிகளை நடாத்துகின்ற ஒரு தொழில்சார் சங்கமாகும். இந்நிறுவனம் தனது வருடாந்த மாநாடுகளை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நடத்தி வருகின்றது. இம்முறை 18 வது தேசிய ஆய்வு மாநாடு 'நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு: சமூக விரிவாக்கல் சேவைகள் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல்'' எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றது.

 இவ்வருடம் வித்தியாசமான முறையில் இலங்கையின் தேசிய மொழிகளை முதன்மைப்படுத்தி மும்மொழிகளிலும் சிங்கள மொழி, தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி மூலம் இவ் ஆய்வு மாநாடு நடத்தப்படுகின்றது. இலங்கை நூலக சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. பிருத்தி லியனகே மற்றும் முன்னாள் தலைவர் கலாநிதி ஆனந்த திஸ்ஸ ஆகியோரின் நெறிப்படுத்தல்களில் இவ் ஆய்வு அமர்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்களும், முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் ஆர். மகேஸ்வரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜெ. ஜெயராஜ் அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றினர். கிழக்கு பல்கலைக்கழக பிரதி நூலகர் எஸ். சாந்தரூபன் இணைத் தலைவராக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் முதன்மை அமர்வின் தலைமையினை கலாநிதி திருமதி கே. சந்திரசேகர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் நூலகர் அவர்கள் ஏற்றிருந்தார். மாநாட்டின் செயலாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி ஜெனன் அவர்களும், இணைச் செயலாளராக ஏ.எல்.எம். முஸ்தாக், கல்முனை பொது நூலகர்; அவர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் பொது நூலகர்கள், பாடசாலை நூலகர்கள், விசேட நூலகர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த வகையில் இம் முறை தமிழ்மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறித்த நிகழ்வு இடம்பெற்றது வரலாற்று சிறப்புமிக்க ஓர் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆய்வு மாநாடு இரண்டு கட்ட அமர்வுகளாக இடம்பெறுகின்றது. முதல் அமர்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட, தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 26ம் திகதி கம்பஹா பொது நூலகத்தில் சிங்கள மொழி மூலம் நடைபெற உள்ளது. 

இம்மாநாட்டுக்கு பல்கலைக்கழக நூலகர்கள், பீடாதிபதிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில்சார் நூலக வல்லுனர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் நூலகவியலைக் கற்கின்ற மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர் 


உணவு பாதுகாப்பு தொடர்பான வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (18) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் பானுஜ, உணவுக் கட்டுப்பாடு நிருவாகப் பிரிவுக்கான சிரேஷ்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர் ஜவாத் மரைக்கார் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்கள் பதிவு செய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரிகளினால் காத்திரமான விளக்கக்காட்சியுடன் கூடிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


(வி.ரி.சகாதேவராஜா)


குரோதி சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும்  இணைந்து நடாத்திய 26வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவின் காலை நிகழ்ச்சிகள்  கழகத் தலைவர் வி.விஜயசாந்தன் தலைமையில் இன்று (20) சனிக்கிழமை காலை மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக  ஆரம்பமாகியது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.

கழக போசகர்களான சிவ.ஜெகராஜன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு கிலோமீட்டர் நீள மரதன் ஓட்டத்தில் ஏழு போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

 காரைதீவு பொலிசார் மற்றும் காரைதீவு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளித்தன.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கல்வி முகாமைத்துவத்திற்கான பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் எம்.எச்..றியாஸா நியமனம் பெற்றுள்ளார்.

காரைதீவு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன், கல்முனை கோட்டத்திற்கான கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆகியோருக்கு மாகாண கல்வி செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.

அதே வேளை எம்.எல்.எம்.முதர்ரிஸ் உடற்கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளருக்கான கடிதத்தினையும் பெற்றுக் கொண்டார்.

 நியமனக் கடிதங்கள் அனைத்தும் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன

 


மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (89) அமெரிக்காவில் காலமானார்.


உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956ல் ஒலிம்பிக்கில் ஈழத்தமிழர் சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

 


இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.

 


இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.


இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.


இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.


இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது.


அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.


இஸ்ரேல் - இரான் இடையே என்ன பகை? நண்பர்கள் பகையாளி ஆனது எப்படி?

36 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?

15 ஏப்ரல் 2024

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.


பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.


Instagram பதிவை கடந்து செல்ல

Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

எண்ணெய், தங்கம் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன.


வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது.


ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.






கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.


இரானிய அமைச்சர் எச்சரிக்கை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.


"இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தா


இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

 கடந்த ஏப்ரல் 14-15ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு மத்திய கிழக்கில் வசிப்பவர்களுக்கு ஒரு நீண்ட இரவாக அமைந்தது.


அன்றிரவு இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது. இது உலகின் கவனத்தையே அரபு நாடுகளின் வானத்தை நோக்கித் திருப்பியது.


சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவான கருத்து நிலவுகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் அரபு பிராந்தியத்தின் மீதுதான் உள்ளது. எனவே, இரானின் இந்தத் தாக்குதலை உலகம் முழுவதும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.


இந்தத் தாக்குதல்கள் அன்றிரவின் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தனது நட்பு நாடுகளின் உதவியுடன் தற்காத்துக் கொண்டது.


இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அதன் நவீன பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், சில இஸ்ரேலின் எல்லையை அடைவதற்கு முன்பே அமெரிக்கா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


இரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை தற்காத்துக்கொள்ள உதவிய நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியவை அடங்கும்.


அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றுமே மேற்கத்திய நாடுகள். ஆனால் இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர்.


இரான் - இஸ்ரேல்: எந்த நாட்டின் ராணுவம் வலிமையானது? இரான் தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்


பாகிஸ்தானில் சூடுபிடித்த விவாதம்

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானில், 'ஜோர்டான்' என்ற வார்த்தை ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் ட்ரெண்ட் ஆனது.


இதுகுறித்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருமான முஷ்டாக் அகமது கான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் படத்தைப் பகிர்ந்து எதிர்மறையான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


முஷ்டாக்கின் இந்தப் பதிவுக்கு 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர்.


'ஆசாத் டிஜிட்டல்' சமூக வலைதளத்தில் அவர், "இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க ஜோர்டான் மன்னருக்கு ஒருபோதும் மனம் வரவில்லை. ஆனால் இரான் இஸ்ரேலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியபோது, அவர் உடனே இஸ்ரேலின் உதவிக்கு வந்தார். எனக்கு இது மிகவும் மோசமான நடவடிக்கையாகப் பட்டது,” என்றார்.


இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமின்றி ஜோர்டானிலும் விமர்சிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை, அந்நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


ஜோர்டானில் உள்ள ஐந்தில் ஒருவரின் மூதாதையர்கள் பாலத்தீனப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் மனைவி ராணி ரானியாவும் பாலத்தீனத்தைச் சேர்ந்தவர். காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சமீபகாலமாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.


தூஸ்ஸாங் ல்யூவெர்த்யூர்: பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்து புரட்சி செய்த 'கருப்பு நெப்போலியன்'

14 ஏப்ரல் 2024

சிங்கப்பூரை விட பெரிய ராட்சத பனிப்பாறையின் நகர்வை 'அழிவின் பாதை' என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


படக்குறிப்பு,ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா

ஜோர்டான், இரான் நிலைப்பாடுகள் என்ன?

இந்த விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜோர்டான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ கூறப்பட்டிருக்கிறது.


அந்த அறிக்கையின்படி, “சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஜோர்டானின் வான்வெளிக்குள் வந்தன. அவை எங்கள் மக்களுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் அவற்றைத் தடுத்து நிறுத்தினோம். அவற்றின் சிதிலமடைந்த பாகங்கள் ஜோர்டானின் பல இடங்களில் விழுந்தன, ஆனால் அவை யாரையும் காயப்படுத்தவில்லை.”


மேலும், “ஜோர்டானையும், அதன் குடிமக்களையும், அதன் வான்வெளியையும் பாதுகாக்க எதிர்காலத்தில் எந்தவொரு நாடு நடத்தும் தாக்குதலையும் ஜோர்டான் தடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் தாக்குதலின் போது ஜோர்டான் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாங்கள் கண்காணித்து வருவதாக தாக்குதலை நடத்திய இரானின் புரட்சிகர காவலர்கள் கூறியுள்ளனர்.


ஜோர்டான் தொடர்ந்து தலையிட்டால், அந்நாடு இரானின் அடுத்த இலக்காக இருக்கலாம். ஆனால் இரானின் உள்துறை அமைச்சர் நாசர் கனானி ஒரு செய்தியாளர் சந்திப்பில், "இந்தத் தாக்குதலை இடைநிறுத்தியதில் ஜோர்டானின் பங்கு பற்றி நான் பேச முடியாது, அது ராணுவ விவகாரம்," என்று கூறினார்.


“ஜோர்டானுடனான எங்கள் உறவுகள் நட்பு ரீதியானவை. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன,” என்றார்.


சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'டவர் 22' மீது இராக் போராளிக் குழுவான ‘அல்-மக்மூதா இஸ்லாமியா’வால் ட்ரோன்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.


ஜோர்டான் வரலாற்று ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. 1990களில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா முன்னெடுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டபோது இஸ்ரேலுடனான அதன் உறவுகள் மேம்பட்டன.


பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்


ஜோர்டானின் வரலாறு

இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜோர்டானின் அம்மான் பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணையின் சிதைவுகள்

புவியியல் ரீதியாக, ஜோர்டான் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. சௌதி அரேபியா, இராக் மற்றும் சிரியாவை தவிர, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஜோர்டான். பாலத்தீனப் பகுதிகள் மற்றும் சிரியாவை சேர்ந்த ஏராளமானோர் ஜோர்டானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


ஜோர்டானில் முடியாட்சி உள்ளது. தற்போது இரண்டாம் அப்துல்லா ஜோர்டான் மன்னராக உள்ளார். 1946இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஹாஷிமைட் வம்சம் (அல் ஹாஷிமூன்) ஜோர்டானை ஆட்சி செய்து வருகிறது.


மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹாஷ்மி குடும்பத்தின் வரலாறு மற்றும் வம்சாவளி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோர்டான் மன்னரின் பரம்பரை இஸ்லாத்தைத் தோற்றுவித்த முகமது நபியின் வழித்தோன்றலாக வந்தது.


இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதி 400 ஆண்டுகளாக உஸ்மானியா சுல்தான்களால் (உஸ்மானிய பேரரசு) ஆளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் முதல் உலகப் போரின் போது நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், மெக்காவின் அப்போதைய அமீர் (உள்ளூர் ஆட்சியாளர்) ஷெரீப் ஹுசைன் பின் அலி, ஒட்டோமான் சுல்தானகத்திடம் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றார்.


பிரிட்டன் உட்பட மற்ற கூட்டணி சக்திகளின் உதவியுடன், 1916இல் அரபு கிளர்ச்சிக்குப் பிறகு மெக்கா ஒட்டோமான் சுல்தானகத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது.


கடந்த 1917இல், ஆங்கிலோ-அரபு ராணுவம் பாலத்தீனத்தை உள்ளடக்கிய பகுதியைக் கைப்பற்றியது. 1921ஆம் ஆண்டில், பாலத்தீனம் அந்தப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 'டிரான்ஸ் ஜோர்டான்' பகுதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஆட்சி அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஜோர்டானின் முதல் மன்னரானார்.


மெக்காவின் எமிர் ஷெரீப் ஹுசைன் பின் அலியை சர்ச்சைக்குரிய பால்ஃபோர் பிரகடனத்தில் கையொப்பமிட வைக்க பிரிட்டன் பலமுறை முயன்றது. அதற்குப் பதிலாகப் பெரிய தொகையைக் கொடுக்கவும் முயன்றது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் கூட்டணி நாடுகள் சார்பில் சௌதி குடும்பத்தினருடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?


இஸ்ரேல்-ஜோர்டான் உறவுகள்இஸ்ரேல், இரான், ஜோர்டான் பட மூலாதாரம்,

படக்குறிப்பு,ஜோர்டான் கொடி

பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்காகத் தனி நாட்டை நிறுவ பிரிட்டன் கொண்டு வந்த ஒரு சர்ச்சைக்குரிய திட்டம். 1946 வரை, அந்தப் பகுதி பிரிட்டனின் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து ஆளப்பட்டது. ஆனால் 1946இல் அது ஜோர்டானின் ஹாஷிமைட் அரசு என்ற பெயரில் ஒரு சுதந்திர நாடாக மாறியது.


கடந்த 1948 மற்றும் 1973க்கு இடையில், ஜோர்டான் இஸ்ரேலுடன் நான்கு போர்களை நடத்தியது. 1948இல் நடந்த முதல் அரபு-இஸ்ரேல் போர், 1967இல் நடந்த போர், 1967 முதல் 1970 வரை நடந்த போர், 1973இல் நடந்த போர் ஆகியவை இதில் அடங்கும்.


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 1994ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கவில்லை.


ஜோர்டானின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, ஜோர்டானின் கொடியின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. இந்தக் கொடி ஒட்டோமான் சுல்தானகத்திற்கு எதிரான அரபு கிளர்ச்சியின் கொடியால் உந்தப்பட்டது.


இது மூன்று வெவ்வேறு வண்ணப் பட்டைகள் மற்றும் ஒரு சிவப்பு முக்கோணத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கொடியில் ஏழு புள்ளிகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளது.


இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு விளிம்பும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் முதல் சூராவான 'அல்-ஃபாத்திஹா'வின் ஏழு வசனங்களைக் குறிக்கிறது. இந்தக் கொடியை பாலத்தீனக் கொடியில் இருந்து வேறுபடுத்துவது இந்த நட்சத்திரம்தா


 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக 195 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று சாதனை படைத்துள்ளார்.

 


வளைகுடா நாடுகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது - சில பகுதிகளில் ஓராண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச நிலையத்திலும் வெள்ளம் சூழந்தது. இதனால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.


உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே, நகரின் நிதி மையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள சாலைகள் நீரில் மூழ்கின. இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் செல்வது கடினமானது. ஆனால், இவர்கள் இதை ஒரு சவாலாக பார்க்கின்றனர்.


துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வளைகுடா நாடுகள் பொதுவாக வெப்பமான, வறண்ட வானிலைக்கு பெயர் பெற்றவை, ஆனால் அங்கு அடிக்கடி அதீத மழைப் பொழிவும் ஏற்படுகிறது.


ஓமனில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் போலீசார் மீட்டனர். நாடு முழுவதும் பதினெட்டு பேர் இறந்தனர் - அவர்களில் பள்ளி மாணவர்களும் பேருந்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.


மின்னல், வெள்ளத்தால் பஹ்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இன்று புதன்கிழமை சில இடங்களில் தீவிர புயல் மழை இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 நூருல் ஹுதா உமர் 


1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2024) 53 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. 

இதன் பின்னணியில் இக்கல்லூரியின் நீண்ட கால தேவையாகவும் வரலாற்று நிகழ்வுகளை தற்கால இளம் மாணவ சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் கல்லூரி முதல்வரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் ஒன்றான இக்கல்லூரியில் அதிபர்களாக கடமையாற்றியவர்களின் பெயர்கள் மற்றும் காலங்களை உள்ளடக்கிய "மஹ்மூத் அதிபர் பெயர் பலகை" உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17) கல்லூரியின் நிர்வாக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பெயர் பலகையினை இக்கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதைய 17வது அதிபரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரி வரலாற்றில் (1971-2024) இன்றுவரை 17 அதிபர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர் 


கல்முனைக் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களை சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) கல்முனை கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.