சேவை நலன் பாராட்டிக் கௌரவிப்பு




 


நூருல் ஹுதா உமர் 


கல்முனைக் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களை சேவை நலன் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) கல்முனை கமு/கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எஸ். ஸஹுதுல் அமீன் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.