இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று





இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.