Showing posts with label Slider. Show all posts

 


ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து அதிக அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலி, அஃபுலா, கர்மெல் மலைத்தொடர், நாசரேத் மற்றும் திபெரியா உள்ளிட்ட வடக்கு பிராந்திய நகரங்களில் வசிப்பவர்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் பட்சத்தில், தூதரகத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல் இதன் பின்னணியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 (வி.ரி.சகாதேவராஜா)


நாவிதன்வெளி மத்தியமுகாம் சாளம்பைக்கேணி முஸ்லிம்களுக்கு ரமழான் பொதிகளை  நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.புவனரூபன் தனது எட்டாவது மாத கொடுப்பனவை ரமழான் நோன்பு பொதிகளாக நேற்று வழங்கி வைத்தார்.

 தற்போது நோன்பு காலம் என்பதால் நாவிதன்வெளி  சாளம்பைக்கேணி  கிராமத்திலே தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும்  35 குடும்பங்களுக்கு  இவை வழங்கி வைக்கப்பட்டது.
அவர் தனது கடந்த ஏழு மாத மாதாந்த கொடுப்பனவுகளை ஏழை மக்களுக்காகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய எட்டாவது மாதக் கொடுப்பனவை இவ்வாறு வழங்கப்பட்டது.

உபதவிசாளர்  கு.புவனரூபன் கூறுகையில்;
 கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எனக்கு 2465 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளில் 63 வாக்குகள் முஸ்லிம்களால் அளிக்கப்பட்டவை. ஆதலால் ரமழான் நோன்பு காலத்திலே அவர்களுக்கும் எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதனை வழங்குகிறேன் என்றார்.

 


(வி.ரி.சகாதேவராஜா)


 உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் "கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்" திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள்  இன்று (6) வெள்ளிக்கிழமை  வழங்கிவைக்கப்பட்டது.

உதவும் பொற் கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் பிரபல சமூக சேவையாளர் கனடா விசு.கணபதிப்பிள்ளையின் ( பாண்டிருப்பு) நிதியுதவியில் இப் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் வி.புவிவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மதிசீலன்,ஒய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்களான வித்தகர் வி.ரி.சகாதேவராஜா,கண. வரதராஜன், தாயக இணைப்பாளர் என்.சௌவியதாசன் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் வி.சுகிர்தகுமார்            

 தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான உறவுப்பயணம் நிகழ்வுகள் நேற்று முதல் (05)ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதில் இளைஞர் யுவதிகள் தங்கள் வாழ்க்கை முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முறையாக அங்கீகரித்து மதிக்க பழக்கப்படுவதை பிரதான நோக்காக கொண்டு இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
இந்த பரஸ்பர சமூக புரிதலின் மூலம் இனங்களுக்கிடையே நட்பை உருவாக்கவும் கலாசார நல்லிணக்கம் ஏற்படவும் இளைஞர் குழுக்களை ஒன்றாக இணைக்கும் இத்திட்டத்திற்கு அமைய மாத்தளை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகைள ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் வரவேற்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் ஆகியோர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் கங்கா சாகரிக்கா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாசா தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ரதீசன் மாத்தளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செனவிரத்தின ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தலைவர் மிருஜன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாத்தளை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகைள ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் மாலை அணிவித்து நடன நிகழ்வுகளுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து தேசிய கொடியேற்றப்பட்டு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான உறவுப்பயண பரஸ்பர புரிந்துணர்வு நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் “அகன்று செல்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களிலிருந்து மக்களை அகற்றி பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த நடைபயண செயற்பாடு இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், “போதைப்பொருட்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என்ற செய்தியை பொதுமக்களிடையே பரப்பும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

 


இரண்டாவது ஈரானிய கப்பலில் இருந்து மொத்தம் 204 பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் வெலிசரா கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இலங்கை கடற்படை.

 


போலி பத்திரம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இந்த தண்டனையை விதித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது, மொத்தம் 12 ஆண்டுகள்.

இருப்பினும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

61 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான வழக்கறிஞருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றது.

பொரளை பகுதியில் உள்ள ஒரு நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், இவர் மீது சாட்டப்பட்டிருந்தது.

#NewsFirst #NewsFirstEnglish #LKA #SriLanka #LatestNews #HighCourt #Ja

 


கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,



என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.


ஈரான் கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதில் இருந்த 208 பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் .


நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு.எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம்.


நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.


இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது. சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது.


இது போர் ரீதியாக யாருக்கும் செய்யும் உதவி அல்ல. மனித உயிர்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த முடிவு. யாரும் இதனால் விசனப்படுவார்கள் என்று நினைக்க கூடாது. சர்வதேச ஒப்பந்தங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் நாங்கள் முடிவுகளை எடுத்தோம். இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தி இந்த முடிவை எடுத்தோம்.


இந்த கப்பலில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வெலிசர கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். திருகோணமலை சொல்லப்படும் போது அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. கொஞ்சம் பணியாளர்களுடன் கப்பல் அங்கு செல்லும்.சர்வதேச சாசனங்களை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி 🏆


மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா 🇮🇳 நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

யார் வெற்றி பெறுவார்கள்?
🇮🇳 🇳🇿


 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளார்.

ஆறு ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இஷான் கிஷான் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து உள்ளார்.

முன்னதாக, அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார்

டாஸ் வென்ற இங்கிலாந்து

இந்த அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

 


பெருமிதத் தருணம்: அக்கரைப்பற்று மண்ணிற்கு மற்றுமொரு மகுடம்! 🎓✨


எமது அக்கரைப்பற்று மண்ணின் மைந்தர்களான திரு. P. செகுராஜ் (P. Seguraj) மற்றும் திரு. T. இரதிகமூர்த்தி (T. Rathikaramoorthy) 

ஆகியோர் தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் (National Audit Office) உதவி கணக்காய்வு அத்தியட்சகர்களாக (Assistant Superintendent of Audit) பதவி உயர்வு பெற்றுள்ள செய்தியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.


​தங்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம் எமது பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

 புதிய பதவியில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐🎊


​A Moment of Pride for Akkaraipattu! 🇱🇰

Hearty congratulations to Mr. P. Seguraj Seguraj Thilip  and Mr. T. Rathikaramoorthy Rathy Karan  on being promoted as Assistant Superintendent of Audit at the National Audit Office. Wishing you both continued success in your professional journey! 👏🏛️


​#Akkaraipattu #PrideOfOurSoil #Promotion #AuditService #NationalAuditOffice #SuccessStory #Congratulations

எமது அக்கரைப்பற்று மண்ணின் மைந்தர்களான திரு. P. செகுராஜ் (P. Seguraj) மற்றும் திரு. T. இரதிகமூர்த்தி (T. Rathikaramoorthy) 

ஆகியோர் தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் (National Audit Office) உதவி கணக்காய்வு அத்தியட்சகர்களாக (Assistant Superintendent of Audit) பதவி உயர்வு பெற்றுள்ள செய்தியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.


​தங்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம் எமது பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

 புதிய பதவியில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐🎊


​A Moment of Pride for Akkaraipattu! 🇱🇰

Hearty congratulations to Mr. P. Seguraj Seguraj Thilip  and Mr. T. Rathikaramoorthy Rathy Karan  on being promoted as Assistant Superintendent of Audit at the National Audit Office. Wishing you both continued success in your professional journey! 👏🏛️


​#Akkaraipattu #PrideOfOurSoil #Promotion #AuditService #NationalAuditOffice #SuccessStory #Congratulations

 


வி.சுகிர்தகுமார்          


 அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகின்ற எரிபொருள் யாவும் ஒரு சில மணித்தியாலங்களில் தீர்ந்து போவதையும் காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனும் அச்சத்தில் அதிகளவான வாகன உரிமையாளர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுவருவதையும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இரவு பகலாக சேவையினை வழங்கி வருவதையும் உணர முடிகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் வயலை பண்படுத்தும் வேலைகளுக்கான டீசலை பெற்றுக்கொள்வதற்கு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதையும் அவதானிக்க கிடைத்தது.
எரிபொருளை பதுக்கி வைக்கின்றவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் QR  முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் அத்தியாவசிய தேவையுடைய அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட நடைமுறையொன்றினை மேற்கொள்வதன் மூலம் அரச சேவையினை தடையின்றி முன்கொண்டு செல்ல முடியும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


மத்திய கிழக்கில் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் இரானும் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன


லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துகிறது. இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் வெடிப்புகள் காணப்படுகின்றன.


இஸ்ரேலில் இரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மற்றும் தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டபோது வானத்தில் வெடிப்புகள் காணப்பட்டன. பிராந்தியத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைனில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.


பஹ்ரைனில் சேதமடைந்த கட்டடம் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பஹ்ரைனில் சேதமடைந்த கட்டடம்

இதற்கிடையே இரான் பதிலடி தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ''இதுவரை 75 இரானிய ஏவுகணைகள் மற்றும் 123 டிரோன்களை அழித்துள்ளோம்'' என பஹ்ரைன் கூறுகிறது.


இரண்டு இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக அஜர்பைஜான் கூறுகிறது.


வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியதாக இரான் கூறுகிறது


லெபனானின் சேதத்தை காட்டும் புகைப்படம் பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,லெபனானின் சேதத்தை காட்டும் புகைப்படம்

இஸ்ரேலில் தாக்குதல்

வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி இரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது


'40 நிமிடங்களுக்கு என் இதயம் நின்றுவிட்டது' – இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய நபர்

இந்தியா - இங்கிலாந்து - டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியின் 2 பலவீனங்கள் என்ன?

இரான் கப்பல், இலங்கை

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

'ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி' கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இரண்டு மணி நேரத்தில் மூன்று தனித்தனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜெருசலேமில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் பாதுகாப்பு புகலிடங்களிலிருந்து வெளியேற ராணுவம் தற்போது அனுமதி அளித்துள்ளது.


முன்னதாக, இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் மற்றுமொரு தொடர் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


"இரான் ஆட்சிக்கு சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, தெஹ்ரான் முழுவதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை(ஐ.டி.எஃப்) கூடுதல் தாக்குதலை தொடங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தாக்குதல் நடத்தப்படும் குறிப்பிட்ட இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதையும் அது வழங்கவில்லை, ஆனால் கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.


புதன்கிழமை இரவு தலைநகரில் ஒரு சக்திவாய்ந்த வெடி சத்தத்தை தங்கள் செய்தியாளர்கள் உணர்ந்ததாக ஏ.எஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


டெஹ்ரானில் புகை எழும் காட்சி பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,டெஹ்ரானில் புகை எழும் காட்சி

இஸ்ரேல் தொடர்ந்து இரானின் பதிலடி தாக்குதல்களால் குறி வைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தெடர்பான முன்னேற்றங்களுக்கு உட்பட்டு வான்வெளியை ஓரளவு மீண்டும் திறக்க இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


நாட்டிற்குத் திரும்பும் குடிமக்களை ஏற்றி வந்த விமானம் ஒன்றும் டெல் அவிவ் வந்தடைந்துள்ளது.


முன்னதாக, தலைமை மையங்கள் மற்றும் உள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட கிழக்கு தெஹ்ரான் வளாகத்தின் மீது தனது விமானப்படை "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது.


இரான் 

மத்திய கிழக்கில் விமான சேவைகளின் நிலை என்ன?

பல நாட்கள் இடையூறுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கில் சில விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.


ஓமனிலிருந்து பிரிட்டிஷ் குடிமக்களை அழைத்து வருவதற்காக பிரிட்டன் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சார்ட்டர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை புறப்படவில்லை.


"அந்த விமானம் இன்று (மார்ச் 5) பிற்பகுதியில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கிலிருந்து மக்களை பத்திரமாக அழைத்து வந்தன.


மத்திய கிழக்கில் விமான சேவைகளின் நிலை என்ன?பட மூலாதாரம்,Reuters

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் ஏர்வேஸ் இப்போது குறைந்த அளவிலான விமான சேவைகளை இயக்கி வருகின்றன. அபுதாபியின் ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதன் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஓமனின் மஸ்கட்டிலிருந்து லண்டன், பெர்லின், கோபன்ஹேகன், மாட்ரிட், ரோம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நகரங்களுக்கு வியாழக்கிழமை நிவாரண விமானங்களை இயக்கப் போவதாக கத்தார் ஏர்வேஸ் இன்று காலை அறிவித்தது.


நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து செயல்படும் அந்த விமான நிறுவனத்தின் முக்கியச் சேவைகள், "கத்தார் வான்வெளி மூடப்பட்டிருப்பதன் காரணமாக" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இஸ்ரேலில், முதல் சுற்று மீட்பு விமானங்கள் டெல் அவிவில் தரையிறங்கியுள்ளன.


அஜர்பைஜானைத் தாக்கிய இரானிய டிரோன்கள்

அஜர்பைஜானைத் தாக்கிய இரானிய டிரோன்கள்

அஜர்பைஜானில் இரானிய டிரோன் தாக்குதலால் பொதுமக்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"ஒரு டிரோன் நக்ஷிவன் தன்னாட்சி குடியரசில் உள்ள விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தைத் தாக்கியது, மற்றொரு டிரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக் கட்டடத்திற்கு அருகில் விழுந்தது," என்று அமைச்சகம் கூறுகிறது.


இந்த டிரோன் தாக்குதல் விமான நிலையக் கட்டடத்தை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களில் இரண்டு பேரைக் காயப்படுத்தியது.


அஜர்பைஜானுக்கான இரானிய தூதர் இப்போது நேரில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு "இரானியத் தரப்பிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும், மேலும் அதற்கான எதிர்ப்பு தொடர்பான குறிப்பும் சமர்ப்பிக்கப்படும்."


இரானின் அச்சுறுத்தல்களால் 20,000 மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளனர் - ஐநா அமைப்பு தகவல்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற இரான் நாட்டின் அச்சுறுத்தல்களால், அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, உல்லாசக் கப்பல்களில் இருக்கும் மேலும் 15,000 பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்செனியோ டோமிங்குஸ் கூறியுள்ளார்.


உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கியமான பாதையாகும். சாதாரணச் சூழலில் உலகின் 20% எண்ணெய் விநியோகம் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அழிக்கப்பட்ட இரானிய போர் கப்பலின் கோப்புப் படம் பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அழிக்கப்பட்ட இரானிய போர் கப்பலின் கோப்புப் படம்

இதற்கிடையில் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் குவைத்தில் இரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது வீரரின் பெயரை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.


அயோவாவின் வௌகி பகுதியைச் சேர்ந்த மேஜர் ஜெஃப்ரி ஓ'பிரையன், 2012-ஆம் ஆண்டில் ராணுவ இருப்பில் சிக்னல் கார்ப்ஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவர் 2019-ஆம் ஆண்டில் குவைத்திற்குப் பணியமர்த்தப்பட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைத்தின் போர்ட் சுவைபாவில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தை, வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பித்து வந்த ஒரு "ட்ரோன்" தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலில் மூன்று வீரர்கள் இறந்ததாக அமெரிக்க மத்திய தலைமை முதலில் கூறியிருந்தது. ஆனால், காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மற்றும் இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர்.


அமெரிக்க அதிபரின் போர் அதிகாரங்களை குறைப்பதற்கான வாக்கெடுப்பு தோல்வி

வாக்கெடுப்பு தோல்விபட மூலாதாரம்,US Senate

அமெரிக்க செனட்டில் போர் அதிகாரங்கள் குறித்த வாக்கெடுப்பு 47-53 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சட்டமியற்றுபவர்கள் பெரும்பாலும் தங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு ஏற்பவே வாக்களித்தனர்.


இந்த மசோதா நிறைவேறியிருந்தால், போர் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் குறைந்திருக்கும்.


இந்த மசோதாவின்படி, போர் தொடர்பான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்னால், டிரம்ப் அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றம்) அனுமதியைப் பெற வேண்டியிருந்திருக்கும்.


இந்த மோதலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட இத்தகைய முதல் மசோதா இதுவாகும், ஆனால் இது டிரம்பைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது.


ஆனால், இரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) பேசப்போகும் கடைசி விஷயம் இதுவல்ல. ஏனெனில், அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.


நாளை இதே கேள்வி குறித்து பிரதிநிதிகள் சபை வாக்களிக்க உள்ளது. டிரம்ப் கணித்துள்ள ஒரு சில வாரங்களைத் தாண்டி போர் நீடித்தால், எதிர்காலத்தில் போர் அதிகாரத் தீர்மானத்தை ஆதரிக்கத் தாங்கள் அதிக விருப்பத்துடன் இருப்பதாக சில செனட் உறுப்பினர்கள் கேபிடல் ஹில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.


தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிப்பவர்களை வெளியேற்றும் கத்தார்

இதற்கிடையே, தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிக்கும் மக்களை கத்தார் வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"தேவையான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செளதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துபையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இந்த வாரம் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், இப்பிராந்தியத்திலிருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்டாலோ, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக மத்திய கிழக்கை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்காக சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்ய அமெரிக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அத்துடன், மற்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் வணிக ரீதியிலான விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் உதவி வழங்கி வருகிறது.


பிரிட்டிஷ் குடிமக்களை ஓமனிலிருந்து திரும்ப அழைத்து வருவதற்காக பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சார்ட்டர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை புறப்படவில்லை என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இது குறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாடகை விமானம் திட்டமிட்டபடி நேற்று ஓமனிலிருந்து புறப்பட முடியவில்லை. அந்த விமானம் இன்று பிற்பகல் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.


லெபனான், இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்த மோதலின் பாதிப்பை அதிகளவில் உணர்கின்றன.


இரான் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 3 வரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.


பிப்ரவரி 28 முதல் சுமார் 17,500 குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய 20,000 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்புகின்றனர்

தாயகம் திரும்பும் இந்தியர்கள் பட மூலாதாரம்,Courtesy Yogi Oversea

படக்குறிப்பு,தாயகம் திரும்பும் இந்தியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்து கோவில்களைத் தரிசிப்பதற்காகச் சென்றிருந்த 200 இந்தியச் சுற்றுலாப் பயணிகள், போர் வெடித்ததால் அங்கு சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது அங்கிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர்.


இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த 'யோகி ஓவர்சீஸ்' நிறுவனத்தின் தலைவர், வான்வெளி இடையூறுகள் காரணமாக இந்தப் பெரிய குழுவினர் விமானங்களுக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.


"பயணிகள் யாரும் பீதியடையவோ அல்லது அசௌகரியமாகவோ உணரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே எங்களது முதல் முன்னுரிமையாக இருந்தது," என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கௌஷல் தமேஷா கூறினார். தமேஷாவும் மற்ற சில சுற்றுலா வழிகாட்டிகளும் துபையிலேயே தங்கியிருந்து, டஜன் கணக்கான பயணிகள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதி செய்தனர்.


இந்தக் குழுவில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததாக தமேஷா தெரிவித்தார். "எங்கள் டூர் மேனேஜர் பயணிகளுடன் நீண்ட நேரம் உரையாடினார், அவர்களுடன் விளையாடினார், மேலும் அவர்களை உற்சாகமாக வைத்திருந்தார்," என்று அவர் கூறினார்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியாவின் எந்தப் பகுதிக்காவது விமானம் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் கடைசி குழு இன்று அழைத்துச் செல்லப்பட்டது. அவர்கள் தற்போது தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள ஆல்பனீஸ் மற்றும் கார்னி

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், இரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்படும் வரை போர்நிறுத்தம் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆல்பனீஸ் பேசுகையில், "உலகம் அமைதியை விரும்புகிறது... இதில் சம்பந்தப்படாத வளைகுடா நாடுகளும், சுற்றுலாப் பகுதிகளும் கூடத் தாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்," என்றார்.


சனிக்கிழமை தொடங்கிய இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


'எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்' - இரானியர் ஆதங்கம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து இலக்காகி வரும் நிலையில், பிபிசி பெர்சியன் இரானியர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.


பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டதாகவும், தெருக்கள் மிகவும் நிசப்தமாக இருப்பதாகவும் சஜாத் கூறுகிறார். மக்கள் "கவலையிலும் மன அழுத்தத்திலும்" இருக்கும் அதே வேளையில், அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மரணம் தனக்கு "எதிர்காலத்தைப் பற்றிய அதிக நம்பிக்கையை" அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். "நிலைமை இந்த அளவுக்குச் செல்லும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை," என்று கூறும் அவர், மேற்கு நகரமான உருமியாவின் மீதான "இந்தத் தாக்குதல்களின் அளவு" உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு இரான் நாட்டை விட்டு வெளியேறி, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித்தவிக்கும் அமீர் கூறுகையில்: "போரினால் நல்லது எதுவும் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிறந்த நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்."


தெஹ்ரான் மீதான மற்றொரு தாக்குதலைப் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் தான் "நடுங்குவதாக" அவர் கூறுகிறார், ஏனெனில் அவரது குடும்பத்தினர் அங்கேயே உள்ளனர்: "எனது அன்புக்குரியவர்களுக்கு இது நடக்கிறது என்பதை இங்கே இருந்து தெரிந்துகொள்வதை விட, நானே அந்த குண்டுவீச்சின் கீழ் இருப்பதை விரும்புவேன். எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்."


"தெஹ்ரான் மிகவும் வெறிச்சோடிக் காணப்படுகிறது," என்கிறார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். "அவசரத் தேவை இருந்தாலொழிய எவரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை, இல்லையெனில் அவர்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள்."


மேற்படிப்புக்காக ஐரோப்பாவுக்குப் பயணம் செய்ய நேற்று ஒரு விமான டிக்கெட் வைத்திருந்ததாகவும், ஆனால் "இப்போது எனது திட்டங்கள் அனைத்தும் அந்தரத்தில் தொங்குகின்றன, இது எனக்குச் சற்று வருத்தத்தை அளிக்கிறது" என்றும் அவர் கூறுகிறார்.


"முதல் நாளில், மக்கள் கோஷமிட்டனர் மற்றும் அனைவரும் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் இப்போது சுற்றிலும் போலீஸ் படைகள் உள்ளனர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பேக்கரிகள் மட்டும் திறந்துள்ளன, இருப்பினும் சில ஏடிஎம்கள் (ATMs) வேலை செய்யவில்லை."

 புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது.


இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது.


இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது.


அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை.


ஆனால், இரானியப் போர்க்கப்பலான 'தேனா' உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தத் தாக்குதலுக்காக இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை விமர்சித்துள்ளார்.


"இரான் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் அமெரிக்கா, கடலில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த, 130 கடற்படையினரை ஏற்றிச் சென்ற 'தேனா' எனும் போர்க்கப்பல், சர்வதேச எல்லைக்குள் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இந்த சூழ்நிலைக்காக கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது


'40 நிமிடங்களுக்கு என் இதயம் நின்றுவிட்டது' – இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய நபர்

இந்தியா - இங்கிலாந்து - டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியின் 2 பலவீனங்கள் என்ன?

புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ள இரான், இஸ்ரேல் - என்ன நடக்கிறது? சமீபத்திய தகவல்கள்

புதிய தாக்குதலை தொடங்கிய இரான், இஸ்ரேல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சமீபத்திய தகவல்கள்

இரான் கப்பல், இலங்கை

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

End of அதிகம் படிக்கப்பட்டது

 இரானிய போர்க்கப்பல் 

பட மூலாதாரம்,AP

மோதி அரசு பற்றி கேள்வி எழுப்பப்படுவது ஏன்?

இந்தத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோதியை விமர்சித்துள்ளனர்


இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "இந்த இரானிய மாலுமிகள் ஒரு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தனர். நாம்தான் அவர்களை அழைத்தோம், அவர்கள் நமது விருந்தினர்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, ஓர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அவர்கள் கப்பலைத் தாக்கி அவர்களைக் கொன்றுள்ளது," என்று சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.


மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், இரானியக் கப்பலின் வீடியோவைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.


"இந்தியாவின் அழைப்பின் பேரில் இரான் தனது கப்பலை அனுப்பியது. அமெரிக்காவால் இந்தக் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர். நமது விருந்தினர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் மோதி அமைதியாக இருக்கிறார்," என்று சஞ்சய் சிங் பதிவிட்டுள்ளார்.


ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதியும் அரசாங்கம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார்.


பிரியங்கா பாரதி எக்ஸ் தளத்தில், "முழுமையாக ஆயுதம் ஏந்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், போர் அல்லாத நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பலை தாக்கியுள்ளது. இந்தியா ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.


மோதி அரசின் நிலைப்பாடு குறித்த விவாதம்

அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளை இந்திய அரசாங்கம் 'தவறானவை' என்று குறிப்பிட்டுள்ளது.


"அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேனலில், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர், இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியக் கடற்படைத் தளத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது" என்று அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை கண்டறியும் குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


ஆனால் பல நிபுணர்களும் முன்னாள் ராஜீய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் காட்டும் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.


முன்னாள் ராஜீய அதிகாரி கே சி சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார்.


"நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மேலும், இந்தியாவின் உணர்வுகளை அமெரிக்கா புறக்கணிப்பதாக கன்வல் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.


புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கி ஏவுகணை பயன்படுத்தி இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.


இருப்பினும், மூழ்கடிக்கப்பட்ட இரானியக் கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை.


முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.


இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய இரானியக் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா பிபிசி சிங்களாவிடம் தெரிவித்தார்.


"இந்தச் சம்பவம் எங்களது கடல் எல்லைக்கு வெளியே நடந்தது. ஆனால் எங்களது தேடுதல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் நடந்தது. எனவே எங்களது சர்வதேச கடமைகளின்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது," என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயிடம் தெரிவித்தார்.


"தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தவர்களை மீட்டோம். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது," என்றார் அவர்.


செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலின் ஆவணங்களில் சுமார் 180 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 ( வி.ரி. சகாதேவராஜா)


புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மி,  தான் பிறந்த மாவடிப்பள்ளி கிராமத்தில் உள்ள சகல வீடுகளுக்கும் நோன்பு பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுடீனின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழம், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி கிராமத்தின் அனைத்து குடும்பங்களுக்கும்  விநியோகிக்கும் நிகழ்வு கடந்த 2026.03.03ம் திகதி  செவ்வாய் கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டு மாவடிப்பள்ளி கிராமத்தின் பெரும்பாலான அனைத்து குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஹில்மி தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று அவற்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி.சகாதேவராஜா)




30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட 
களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது .

இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.

 களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் களுதாவளை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த  தை மாத காலத்தினுள் 37 இறப்புக்கள் ஏற்பட்டதாக கிடைத்த சமூக ஊடக தகவல்களை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையினையும் இறப்புகளுக்கான காரணங்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் இவ் ஆய்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

 மரணம் சம்பவித்த 37 வீடுகளுக்கும் சென்று வினாக்கொத்து வழங்கி தகவல்கள் பெறப்பட்டன. எதனால் மரணம் இடம்பெற்றது என்ற காரணமும் அறியப்பட்டிருக்கிறது. 

இந்த சுகாதார கள ஆய்வானது மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. 

இக் கள ஆய்வில்  மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் உத்தியோகத்தர்கள்,
பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், களுதாவளை கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.