Showing posts with label Slider. Show all posts

 


நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை 05, 06, 07ம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிளை புனரமைப்புக் கூட்டம் இன்று 18.05.2024 தொழிலதிபர் பீ.ரீ.அப்துல் மஜீத் (கபீர்) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை கிறீன்பீல்ட் பள்ளிவாசல் நிருவாகிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்முனை கிறீன் பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித் புனர் நிர்மானப்பணிகள் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்பட்டு புனரமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறந்து வைக்கப் பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு வருகை தந்திருந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு பட்லி ஹிஷாம் ஆதம் அவர்களினால் பள்ளிவாசல் நேற்று(18)திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அவர்களின் பாரியார்,கொழும்பு YWMA தலைவி பவாஸா தாஹா உட்பட அதன் நிருவாகிகள், மனித உரிமைகள் அமைப்பு லங்கா நிருவாகப் பணிப்பாளர் எம்.என்.எம்.அஸீம்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் பிரதிநிதிகள்,உலமாக்கள்,முஹ்யித்தீன் மஸ்ஜித் நிருவாகிகள்,ஏனைய பள்ளிவாசல் நிருவாகிகள்,நலன் விரும்பிகள்,மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.


 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் இன்று இந்தோனேசியாவில் எலென்மஸ்க்கைச் சந்தித்து இலங்கையில் Starlink ஐ நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார் மற்றும் உலகளாவிய Starlink வலையமைப்புடன் SLஐ இணைக்க விண்ணப்ப செயல்முறையை துரிதமாக கண்காணிப்பதில் உறுதியளித்தார் - PMD #LKA #SriLanka #Starlink

 


கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவி விலகினார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) மே 15-ஆம் தேதி லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார்.


இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.


1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.


லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட 

படக்குறிப்பு,சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ் தர்மனிடம் தனது ராஜினாமாவை கையளிக்கும் லீ சியென் லூங்

கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.


"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.


அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.


லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட 

படக்குறிப்பு,புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் லீ சியென் லூங்

அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.


அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.



சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது

லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.


ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.


2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.


ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.


"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.


அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.


சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.


இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?


சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.


இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.


"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.


ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.


மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.


கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.


அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.



சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.


சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.


சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.


அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.


"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.


அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .


நூருல் ஹுதா உமர்
பெண்களுக்கு மார்க்க கல்வியை புகட்டி வரும் நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை கையளிக்கும் நிகழ்வும், நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக்கல்லூரி வளர்ச்சி தொடர்பிலான கலந்துரையாடலும் இன்று (18) நடைபெற்றது.
நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட கிளை செயலாளருமான விரிவுரையாளர் மௌலவி ஏ.எல். நாஸர் கனி (ஹாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதரஸாவில் மேம்பாட்டு விடயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஹரீஸ் எம்.பியுடன் நிர்வாகத்தினர் கலந்துரையாடினர்.

இதன்போது நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நலன் கருதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை மதரஸா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இதன்போது பிரின்ஸ் காலேஜ் இற்கான நிதி ஒதுக்கீட்டு கடிதத்தையும் நிர்வாக இயக்குனர் எம்.எம். றியாஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் நற்பிட்டிமுனை ஆஸுர் பஸார் மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலமாக்கள், தாருல் ஹிக்மா பெண்கள் அரபுக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.எம். சாலிதீன் (ஹாமி), செயலாளர் ஐ. பாயிஸ், பொருளாளர் எம்.ஐ. யாகூப், இயக்குனர் சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜௌபர், உதவி செயலாளர் எம்.ஐ. நிரோஷ், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், மாணவிகள், அவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை நகரத்தை 4ஆக அல்லது 48 ஆக பிரியுங்கள்.
ஆனால் 
கல்முனை நகரத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக்கொடுக்க முடியாது.கல்முனை என்பது தமிழர்களின் தாயகம் .

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கவிந்திரன் கோடீஸ்வரன் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

குறித்த ஊடகச் சந்திப்பு அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்றது. அச்சமயம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் க.சிவலிங்கம், தமிழரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச தலைவர் கே.ஜெகநாதன்( குமார்) ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்கு கோடீஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்... நேற்று சமூக வலைத்தளங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்களின் கருத்தினை அவதானித்தேன்.

 அவரது கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது.
குறிப்பாக 56வது நாளாக மழையிலும் வெயிலிலும் கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றது .அந்த எதிர்வினையான கருத்துக்கு பதிலடி கொடுக்க எனக்கு கடமை இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தின் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாக கூறுகின்றார் .இது அப்பட்டமான பொய். உணர்வுள்ள அனைத்து மக்களும் இணைந்து  நிர்வாக அதிகார பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தை நடத்துகின்றனர் . 1993 இல் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான பூரண அதிகாரங்களை அவர்கள் கேட்கிறார்கள்.
56 நாட்களாக இந்தப் போராட்டம் நடக்கிறது. அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பானவர் அரசாங்க அதிபர் ஆவார். அவர் இன்னும் அங்கு வந்து அந்த மக்களின் உணர்வலைகளை கருத்தைப் பெற முயற்சிக்கவில்லை. இது மிகவும் கவலையான விடயம். ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக இந்த விடயத்தை கூறி இருக்கிறோம் .ஓர் அரசாங்க அதிபர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும்.அவர் அரச நிருவாகி. ஓரினத்திற்கு மாத்திரம் கடமை செய்ய அவரை ஜனாதிபதி நியமிக்கவில்லை.

ஒரு இனத்துக்கு பாரபட்சம் காட்டி இன்னொரு இனத்தை அரவணைத்து செல்வது உலகத்தில் எங்கும் நடக்காத விடயம். அது இங்கு நடக்கிறது.
 கல்முனையை நகரை நான்காக பிரிக்க போவதாக ஹரிஷ் கூறுகின்றார் .அது அவரது சொந்த கருத்து.அவர்  நான்காக அல்ல 48 ஆக பிரிக்கட்டும் . எத்தனை பிரிப்பு வந்தாலும் எமது கல்முனை தமிழ் பிரதேசங்களில்உள்ள 29 கிராம சேவை பிரிவுகளிலே எந்த ஒரு இஞ்சி நிலத்தை கூட விட்டுக் கொடுக்க முடியாது .
கல்முனை என்பது தமிழர்களின் தாயகம். 

அவர் கல்முனைக்கு பிதா, தான் என்று கூறுகிறார் .
அவர் கல்முனைக்கு பிதாவாக ஒருபோதும் இருக்க முடியாது.
 தேவையானால் அவர் பிறந்த கல்முனைக் குடிக்கு  பிதாவாக இருக்கட்டும் . அல்லது சாய்ந்தமருதுக்கு மருதமுனைக்கு இருக்கட்டும்.


ஆனால் எங்களுக்கு இருக்க முடியாது. கல்முனை நகரம் தொண்ணூறு வீதம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற தமிழர் தாயகம் .அதை துண்டாடி பிரித்து கையாள்வதற்கான சதித் திட்டமே இதுவாகும்.
 இதே செயல்பாட்டில் முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஈடுபட்டிருந்தார். இப்பொழுது இவர் ஈடுபடுகின்றார் .

இந்த துண்டாடும் கோஷத்தை முன்வைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கின்றார்.

 தமிழ் மக்களின் நியாயமானதும் உரிமைகளை குழப்ப முனைகிறார்.ஒரு போதும் முடியாது.அது பகல் கனவு.

 இந்த பிரிவுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து வளங்களையும் மக்களையும் உள்ளடக்கிய தனியான பூரண அதிகாரம் மிக்க பிரதேச செயலகம் ஒன்றே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றியே தீருவோம் என்று சூளுரைத்தார்.


 வி.சுகிர்தகுமார் 0777113659   

 அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.
சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள் திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


 கல்முனை வாடிவீட்டு வீதியில் அஷ்ரபுக்கு கட்டிடத்தொகுதி.- பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்


நூருல் ஹுதா உமர் 

கல்முனையில் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நினைவாக அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் சமகால அபிவிருத்தி மற்றும் அரசியல் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு ஒன்றை 2024.05.18 ஆம் திகதி கல்முனை மாநகரசபை கேட்போர் கூடத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கூட்டியிருந்தார்.

ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், திட்டமிட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதியானது 

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஆய்வு ரீதியான ஆவணங்கள் சேகரித்து அடுத்த தலைமுறைக்கு முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தும் இடமாகவும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் எதிர்மறைக்கருத்துக்களை சட்ட ரீதியாகவும் ஒருமித்த கருத்துக்கள் ஊடாகவும் எதிர்கொள்ள தீர்மாங்களை எடுக்கும் இடமாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரான பாதையில் இட்டுச்சென்று அவர்களில் இருந்து சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் இடமாகவும், மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கருத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாகவும் குறித்த கட்டிடத்தொகுதி அமையும் என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதிக்கான சரியான பெயரை புத்திஜீவிகளை அணுகி அவர்களின் ஒப்புதலுடன் வைப்போம் என்றும் இந்த கட்டிடத்தொகுதியானது கல்முனை வாடி வீட்டு வீதியில் அமையும் என்றும் தெரிவித்தார்.

குறித்த கட்டிடத்தொகுதியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தன்னுடன் இருந்து ஒத்துழைத்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமையவுள்ள கட்டிடத்தொகுதியானது சர்வதேச தரத்தில் அமையும் என்றும் தெரிவித்தார்.

முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், D100 என்ற 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் விடுபட்டிருந்த அபிவிருத்திப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் நலன் மற்றும் இருப்பு தொடர்பில் கட்சி கூடி, சரியான தீர்மானங்களை எடுக்கும் என்றும் பிரதேச அபிவிருத்திகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை கையாள்வது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளான தாங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கல்முனை தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹரீஸ்,

 கல்முனை தமிழ் முஸ்லிம் மக்கள் அவர்களது தேவைகள் அடிப்படையில் பிட்டும் தேங்காய் பூ போலவும் இருப்பதாகவும் பிரச்சனைகளை காரணம் காட்டி அரசியல் செய்ய முனைபவர்களே குறித்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னையும் மாற்றுப்போராட்டம் ஒன்றை செய்ய சிலர் கோருவதாகவும் அவ்வாறான குறுகிய எண்ணம் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்தார். 

பாரிய பிரதேசங்களை உள்ளடக்கிய கொழும்பு போன்ற மாநகர சபைகளை துண்டாட விரும்பாத சில அரசிய பிரமுகர்கள் கல்முனையை இனரீதியாக பிரிக்க முனைவது ஆச்சரியத்தை தருவதாகவும் தெரிவித்தார்.

உண்மையில் பல்வேறு அலகுகளாக பிரிவே வேண்டும் என இப்பிரதேச மக்கள் விரும்பினால் அதற்கு தான் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் இதய சுத்தியுடம் பேச்சுவார்த்தையூடாக அதனையும் செய்யத் தயார் என்றும் சரியான எல்லைகளை வரையறுத்து அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்றும் நிலத்தொடர்பற்ற எல்லை என்பது சாத்தியப்படாது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

  கிழக்குபல்கலைகழக மாணவர்களின் தற்காலிக நினைவகத்தை அழித்த பொலிஸார் – அம்பிகா சற்குணநாதன் கடும்; கண்டனம்

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல்அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (18) இரவு 8.00 மணி முதல் நாளை (19) காலை 6.00 மணி வரை மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று (18) சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை  பிறப்பித்திருந்நது.

அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  மற்றும் காரைதீவு வினாயகம் விமலநாதன் ஆகியோர் 
நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தன் பேரில் நீதிமன்றம் அத் தடையுத்தரவு நேற்று  வெள்ளிக்கிழமை விலக்கி கொள்ளப் பட்டது.

அதன் பயனாக பாண்டிருப்பு  திரௌபதி அம்மன் ஆலயம் முன்றளில் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளர்  துஷாந்தன் ஏற்பாட்டில் சுடரேற்றி கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதான பிரமுகராக கலந்து கருத்துரைத்தார்.

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம் பொ.செல்வநாயகம் திருமதி சுமித்ரா சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலய வளாகத்தில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

 உறவுகளை நினைவு கூர்ந்து கஞ்சி வழங்கப்பட்டது.

 


யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.


இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.


இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.


அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரிய வந்தன.


அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.







(கனகராசா சரவணன்;)
வாழைச்சேனையில் ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 3 மீனவர்கள்  உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர் மீட்பு ஒருவர் காணாமல் போயுள்ளார்--

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதிலிருந்த் தப்பி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை இன்று வெள்ளிக்கிழமை (17)  மாலையில் உயிருடனும் ஒருவரை சடலமாகவும் கடற்படையினர்  மீட்டகப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர்; 9 ம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள்  வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 12 ம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதன் போது கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினார் மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை இன்று வெள்ளிக்கிழமை மாலை கண்டதையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த  3  மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டனர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர்  ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர்  கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனா


 ( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில் பிரிவுபசாரநிகழ்வு நேற்று முன்தினம் (16) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது 


சம்மாந்துறை வலய நிருவாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்வை.யாசீர் அரபாத் முன்னிலையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி  நிலோபரா, எச்.நைரூஸ்கான், பி.பரமதயாளன் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 ஓய்வுபெறும் ஆசிரியஆலோசகர்  மன்சூர் தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ,வலய கணினி நிலையப் பொறுப்பதிகாரி ஜலீல்,உதவிக்கல்விப்பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர்  ஆகியோர் உரையாற்றினர்.ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி கவிதையாற்றி வாசித்தார்.

மன்சூரின் அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் அரபாத் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார்.

11 வருட காலம் ஆசிரியர் பணியும் 25 வருட காலம் ஆசிரியர் ஆலோசகர் பணியையும் நிறைவு செய்து 2024.05.17ம் திகதி ஓய்வு பெறும்  Z.M. மன்சூர் நல்லதொரு கவிஞராவார்.

ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஏற்புரைநிகழ்த்துகையில் தான் 36வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாக நன்றி கூறினார்.

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் விளையாட்டு நிகழ்வும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வெளிவீதி பிரதேசத்தில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபக தலைவரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அருளாளராக ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக வசந்தன் குருக்களும் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முன்பள்ளி இணைப்பாளர்; மோகனதாஸ் மற்றும் ஆலய தலைவர் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது.
பின்னராக நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் பாலர் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இறுதியாக போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் பரிசுகள் என வழங்கி வைக்கப்பட்டன.
பாலர் பாடசாலை மாணவர்களை சிறப்புற கற்பித்த ஆசிரியைகளும் இதன்போது பாராட்டப்பட்டனர்.


 சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கடமைகளை பொறுப்பேற்றார். 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். 


சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார். 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 


கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து விலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார்.


இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.


1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People's Action Party - PAP) சேர்ந்தவர்கள்.


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ (Lee Kuan Yew). அவர், தற்போது பதவி விலகும் லீ சியென் லூங்-கின் தந்தை, நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் பரவலாகக் கருதப்பட்டவர். 25 ஆண்டுகள் அந்நாட்டை வழிநடத்தியவர்.


லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்றாலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


கடந்த வார இறுதியில் பிரதமர் என்ற முறையில் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த தனது இறுதிப் பேட்டியில், சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.


"மற்ற எல்லோரையும் முந்த வேண்டும் என நான் முயற்சிக்கவில்லை. அனைவரையும் என்னுடன் சேர்ந்து ஓட வைக்க முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். "நாங்கள் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.


அவர் தனது தந்தை, மற்றும் அவருக்கு முன் இருந்த மற்றொரு பிரதமரான கோ சோக் டோங்க் (Goh Chok Tong) ஆகியோரது செயல்முறையிலிருந்து வேறுபட்ட பாணியில் 'காரியங்களை தன் வழியில் செய்ய' முயற்சித்ததாக அவர் மேலும் கூறினார்.


லீ சியென் லூங் 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே பின்வரிசை உறுப்பினராக அரசியலில் சேர்ந்தார். சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமரான கோ சோக் டோங்க்-இன் கீழ் அவரது பதவி உயர்ந்தது. 2004-இல் அவர் அரசுக்குத் தலைமையேற்றார்.


அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் லீ குடும்பத்தினர் குடும்ப அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதாகக் கூறினர். அதை லீ குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். தனிப்பட்ட உரையாடல்களில், சில சிங்கப்பூர் மக்கள் 'fami-Lee politics' என்று இதைக் கேலி செய்தனர்.


ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் தலைவராக லீ சியென் லூங் தனது முத்திரையை பதித்தார்.


அவரது மேற்பார்வையின் கீழ், சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது. பல பொருளாதார மந்தநிலைகள், உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட் பெருந்தொற்றின் போதெல்லாம் நாட்டைத் திறமையாக வழிநடத்திய பெருமை லீ சியென் லூங்-இன் அரசாங்கத்திற்கு உண்டு.


பசிக்காமலேயே அதிகமாகச் சாப்பிடத் தூண்டி உடலைப் பருமனாக்கும் 'போலியான பசி' பற்றித் தெரியுமா?

15 மே 2024

கனடா வழங்கும் 'சூப்பர் விசா' - பெற்றோர், தாத்தா-பாட்டியை அழைத்துச் செல்லலாம்

14 மே 2024

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய இந்துக்கள் முஸ்லிம்களை எப்படி பார்க்கிறார்கள்?

14 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லீ சியென் லூங்-இன் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது

லீ சியென் லூங்-இன் அரசியல் பாதை

சர்வதேசப் புவிசார் அரசியலில், இப்பிராந்தியத்தில் இழுபறியிலிருந்த, அமெரிக்கா-சீனா போட்டியை லீ சியென் லூங் கவனமாக சமநிலைப்படுத்தினார். LGBTQ குழுக்கள் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்ததைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை எதிர்ப்பு சட்டத்தை (anti-gay sex law) ரத்து செய்தது. இருப்பினும் சிங்கப்பூரில் பேச்சு சுதந்திரம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


அவரது அரசியல் பரம்பரை மற்றும் மென்மையான, அறிவார்ந்த தோற்றம் ஆகியவற்றால், லீ சியென் லூங் பொதுவாக சிங்கப்பூர் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகள் குறித்த கணக்கெடுப்பில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அவரது தொகுதி, தேர்தல்களில் அதிக வாக்குச் சதவீதத்தைப் பெறுகிறது.


ஆனால் அவர் விமர்சனங்களிலிருந்தோ சர்ச்சைகளிலிருந்தோ தப்பவில்லை.


2000-களின் பிற்பகுதியில், தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அனுமதிக்க அவரது அரசாங்கம் முடிவு செய்தது. இது ஆழ்ந்த அதிருப்தியைத் தூண்டியது. சிங்கப்பூர் செல்வச் செழிப்பாக மாறியதும், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வருமான இடைவெளி அதிகரித்தது. லீ சியென் லூங்-கின் கீழ், மக்கள் செயல் கட்சி 2011 மற்றும் 2020 இல் அதன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றது.


ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் சிங்கப்பூர் ஆளுகை நிபுணரான டொனால்ட் லோ, "லீ சியென் லூங் பதித்த முக்கிய முத்திரை, அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தான்," என்று குறிப்பிட்டார்.


"ஆனால் அவரது பதவிக்காலத்தின் முதல் பாதியில், அந்த மேம்பாட்டுக்காக அதிகரித்து வந்த ஏற்றத்தாழ்வு, அதிக எண்ணிக்கையில் குடியேறிய வெளிநாட்டினர், வேலைவாய்ப்புகளுக்கான போட்டி, நெரிசல், மற்றும் குடியுரிமை அடையாள இழப்பு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது," என்கிறார் அவர்.


அரசியல் விமர்சகர் சுதிர் வடகேத், லீ சியென் லூங்-இன் அரசாங்கம் "சிங்கப்பூரை ஒரு உலகளாவிய நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அதீத குடியேற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை," என்றார்.


சிங்கப்பூர் மக்களிடம் இருந்து இதற்கான ஏற்பினைப் பெறாததால் இது இன்றுவரை இருக்கும் 'மிக மோசமான இனவெறி மற்றும் வெறுப்புக்கு' வித்திட்டது, என்று வடகேத் கூறினார். அவர் 'ஜோம்' என்ற சுதந்திர செய்தி இதழை நடத்துகிறார். சிங்கப்பூர் மக்கள் 'இனவெறி' தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்னையாக உணர்கிறார்கள் என்றும், கோவிட் பெருந்த்தொறின் போது இது தீவிரமடைந்தது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.


நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்னையான பொது வீட்டுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னையை லீயின் அரசாங்கம் போதுமான அளவில் தீர்க்கவில்லை என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இந்தக் கட்டடங்களில் தான் வசிக்கின்றனர். பலரும் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து அரசாங்கத்திடமிருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு அவர்களுக்கு வயதாகும்போது குறையும்.


இந்தப் பிரச்னைகளை ஒப்புக்கொண்டு, அரசாங்கம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மூலமும் கடுமையான விதிகள் மூலமும் அவற்றைத் தீர்க்க முயற்சித்துள்ளது.


நிலவில் கால் பதிக்க அமெரிக்கா - சீனா போட்டியில் உள்ளே நுழையும் இந்தியா - முந்தப் போவது யார்?

14 மே 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

16 ஏப்ரல் 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது வெளியில் நடந்த குடும்பச்சண்டை

தனிப்பட்ட முறையில், லீ சியென் லூங்-இன் தந்தை லீ குவான் யூ இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருக்கு சொந்தமான வீட்டைச் சுற்றி நடந்த ஒரு குடும்பச் சண்டை 2016-இல் பொதுவெளிக்கு வந்தது. பிரதமர் லீ சியென் லூங் தனது உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒரு பொதுச்சண்டையில் ஈடுபட்டார். தங்கள் நாட்டின் மிக உயர்ந்த குடும்பத்தின் இந்தச் சொத்துச் சண்டையை சிங்கப்பூர் மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


ஒரு கட்டத்தில், லீ சியென் லூங்-இன் உடன்பிறப்புகள் அவரை 'மரியாதையை இழந்த மகன்' என்று அழைத்தனர். மேலும் அவர் ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்குவதற்காக தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், 'அரசின் நிர்வாக அமைப்புகளை' தங்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அவரது சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர், துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, சுயமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ்கின்றனர்.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் லீ சியென் லூங் மறுத்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுக்கு அரசியலில் சேர விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?

11 ஏப்ரல் 2024

வெறும் 18,000 ரூபாயில் இலங்கை சென்று வரலாம் - காண வேண்டிய இடங்கள் என்ன? இ-விசா பெறுவது எப்படி?

5 மே 2024

மது அருந்தாமலேயே போதை ஏற்றும் விநோத நோய் - உடலுக்குள் ஆல்கஹால் உற்பத்தியாவது எப்படி?

13 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் யார்?

லீ சியென் லூங் இப்போது தனது பதவியை, முன்னாள் பொருளாதார நிபுணரும் அரசு ஊழியருமான லாரன்ஸ் வோங்-இடம் ஒப்படைக்க உள்ளார். வோங் ஒரு கட்டத்தில் லீ-யின் முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றிய்வர்.


இது லாரன்ஸ் வோங்கிற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் புதிய சூழ்நிலை ஆகும். சிங்கப்பூரின் 59 ஆண்டுகல சுதந்திர வரலாற்றில் 45 ஆண்டுகள் லீ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்திருக்கிறார். "அடுத்து பிரதமராகக் காத்திருக்கும் லீ குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லாத முதல் பிரதமர் வோங் ஆவார். இது சிங்கப்பூர் சாதாரணமான ஒரு ஜனநாயகமாக மாறும் அறிகுறியாகும்," என்று டொனால்ட் லோ கூறினார்.


"சிங்கப்பூர் மீது லீ குடும்பத்தினர் எப்போதும் ஒரு அளவுக்கதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். இது மாறுவது ஒரு பரந்த சமூக அரசியல் மாற்றத்திற்கு நல்லது," என்று வடகெத் கூறினார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வோங் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட போது, அவரை அடுத்த பிரதமராக்கும் முடிவு அவருக்கு தந்தி மூலம் அனுப்பபட்டது. இது மக்கள் செயல் கட்சிக்கே உரித்தான ஒரு செயல்முறையாகும்.


ஆனால் ஆரம்பத்தில், 51 வயதான வோங் வெளிப்படையான ஒரு தேர்வாக இருக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்னர்,மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைவர்கள் அறிமுகமான போது, அவர் பிரபலமற்றவராகப் பார்க்கப்பட்டார்.


மற்றொரு அமைச்சரான ஹெங் ஸ்வீ கீட் (Heng Swee Keat), அவரது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி ஓய்வு பெறும் முன்பு வரை அவரைத்தான் பிரதமராக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.


கோவிட் பெருந்த்தொற்று சிங்கப்பூரைத் தாக்கியபோது, லாரன்ஸ் வோங் முக்கியப் பொறுப்பில் இருப்பார் என்பது தெளிவானது. அரசாங்கப் பணிக்குழுவின் இணைத் தலைவராக இருந்த அவர், சிங்கப்பூர் மக்களுக்குப் பரிச்சயமான முகமாக மாறினார். வாராந்திர செய்தியாளர் சந்திப்புகளில் சிக்கலான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிதானமாக விளக்கினார்.


அவரது குழுவும், உள்ளூர் ஊடகங்களும் வோங்-இன் பிம்பத்தை ஒரு சாதரண மனிதராகப் பரப்பியிருக்கின்றன. பெரும்பாலான சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர் ஒரு பொது வீட்டுக் குடியிருப்பில் வளர்ந்தார். மேலும் சிங்கப்பூரின் மேல்தட்டுப் பள்ளியில் பயிலாமல் உள்ளூர் பள்ளியில் படித்த முதல் பிரதமரும் வோங் தான்.


சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? உணவில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

13 மே 2024

பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?

13 மே 2024

இயேசுவை பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்ன? இரு சித்தரிப்புகளில் எது உண்மை?

11 மே 2024

சிங்கப்பூர், லீ சியென் லூங், லாரென்ஸ் வோங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

'திறந்த மனம் கொண்ட பழமைவாதி'

லாரென்ஸ் வோங் அரசியலில் நுழைந்த போது ஒற்றுமையை முன்னிறுத்தினார். ஒரு நாடு தழுவிய ஆலோசனையை நடத்தி, மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக ஆதரவுடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உருவாக்குவதாக உறுதியளித்தார். 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சிங்கப்பூரின் குடிமக்கள் சிறுபான்மையினராக மாற மாட்டார்கள் என்றும், குடியேற்றம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.


சிங்கப்பூரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைப் பிரச்னைகளில் ஒன்றான அமெரிக்க-சீனா உறவுமுறையில் தற்போதிருக்கும் நிலையில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் அரசு எந்த வல்லரசு நாட்டுக்கும் சார்பாக இல்லை, மாறாக, 'சிங்கப்பூர் சார்பாக' இருப்பதாக அவர் கூறினார்.


சிங்க்கப்பூர் ஆளுகை வல்லுநரான டொனால்ட் லோ லாரன்ஸ் வோங்க்-ஐ 'திறந்த மனம் கொண்ட பழமைவாதி' என்று விவரித்தார். அவர் மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்றவராக இருப்பார், ஆனால் அவற்றை 'அதிரடியாக' இல்லாமல் 'மெதுவாக, சிறிதுசிறிதாக' அறிமுகப்படுத்துவார், என்றார்.


அதனால்தான், அரசியல் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மக்கள் செயல் கட்சி செய்திருக்கும் பாதுகாப்பான தேர்வாக ஆய்வாளர்கள் லாரன்ஸ் வோங்-ஐப் பார்க்கிறார்கள். அவரும் இந்தப் பண்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகச் சமிக்ஞை செய்திருக்கிறார்.


"தொடர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை முக்கிய விஷயங்களாகும். குறிப்பாக இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில்," என்று திங்களன்று தனது அமைச்சரவையை வெளியிட்டபோது வோங் கூறினார்.


அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார். இது வோங்கின் மிகப்பெரிய அரசியல் பரீட்சையாக இருக்கும். லீ சியென் லூங்-இன் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் வோங் முதன்முறையாகப் போட்டியிடுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். .

 


ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் 'உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை' என்று துணைப் பிரதமர் துமாஸ் தாரபா தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய துமாஸ் தாரபா ஃபிகோவின் அறுவை சிகிச்சை 'நன்றாக' முடிந்திருப்பதாகவும், 'இறுதியில் அவர் உயிர் பிழைப்பார் என்று தான் நம்புவதாகவும்,' தெரிவித்தார்.

முன்னர், தாக்குதலில் படுகாயமடைந்த ஃபிகோ 'உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக' ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதன்கிழமை (மே 15) மாலை ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக், பிரதமர் ஃபிகோ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையில் இருந்ததாகவும், அவரது நிலைமை 'மோசமாக' இருப்பதாகவும் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை 'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கூறியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்.

என்ன நடந்தது?

உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180கி.மீ. தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது".

ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது

சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள், ஒரு நபர் துப்பாக்கியை உயர்த்தி, பிரதமர் ஃபிகோவை நோக்கி ஐந்து முறை சுடுவதைக் காட்டின. அதன்பின் பிரதமர் ஃபிகோவின் மெய்க்காப்பாளர்கள் அந்த நபரை அடக்கினர். ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.

அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், 'துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் ஃபிகோ ஹெலிகாப்டர் மூலம் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஹண்ட்லோவாவின் கிழக்கே உள்ள பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்," என்றார்.

பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், அப்போது, பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

முன்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தச் செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” 

யார் இந்த ராபர்ட் ஃபிகோ?

கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.

இடதுசாரி ஸ்மெர்-எஸ்.எஸ்.டி கட்சிக்குத் தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

2018-இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்,” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார்.

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.