Showing posts with label sports. Show all posts


 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 


வனிந்து ஹசரங்க 100, T20I விக்கெட்டுகளை எட்டினார்.

வரலாற்றில் வேகமாக 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் இவர், ரஷித் கானுக்கு அடுத்தபடியாக!

வாழ்த்துகள் வனிந்து ஹசரங்க

 


சனிக்கிழமை முதல் T20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக SLC இன் உறுதிப்படுத்தல். ஒரு ஆட்டத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கையில் கடைசியாக டிக்கெட்டுகள் எப்போது விற்றுத் தீர்ந்தன என்பது நினைவில் இல்லை. வேகப்பந்து வீச்சாளராகப் போகிறேன்


 (எஸ்.அஷ்ரப்கான்)


சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம்(எல்.எல்.விB) தலைமையில் நேற்று (13) சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.

உத்தியோகத்தர்
களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும்    
இச்சுற்றுபோட்டியில் இம்முறை 8 அணிகள்  கலந்து கொண்டதுடன் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இச் சுற்றுப் போட்டிக்கு  அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா மற்றும்  அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.பி. சாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நிர்வாக கிளையும் வெளிக்கள கிளையும் மோதின.

இதில் நிர்வாக கிளை 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இந்த ஆண்டு சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


 ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை T20 அணி அறிவிப்பு,

காயத்தில் இருந்து மீளாத சமீரவிற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

 சைக்கிள் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்தார் காத்தான்குடி உனைஸ் ஹாஜி



இன்று (09) காலை பொத்துவில் அறுகம்பை கடற்கரை தொடக்கம் பாசிக்குடா வரை பிரமாண்டமாக நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் காத்தான்குடி. Ultra Distributors (PVT) LTD அல்ஹாஜ் A.M. உனைஸ் முதலாவது இடத்தைப் பெற்று காத்தான்குடி மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார். 


156 கிலோமீட்டர் தூரத்தினை நான்கு மணித்தியாலம் நாற்பது நிமிடத்தில் ஓடி முடித்துள்ளார்.


இப்போட்டி நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது. இந்த வயதில் இப்படியான சாதனை படைத்துள்ள இந்த சாதனையாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் 


காத்தான்குடியின் பிரபல வர்த்தகரான இவர் சுமார் மூன்று மாதகாலமாக கடும் பயிற்ச்சி எடுத்தே இச்சாதனையை படைத்துள்ளார்.


இவருக்கு இன்று காத்தான்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது.


Noordeen Msm

 


இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தம்புள்ளை RDICS இல் அடிக்கல் நாட்டும் வசதிகளை வெளியிட்டது.


ஒரு புதிய நீச்dccxcc xbசல் குளம், ஒரு நீர் சிகிச்சை மற்றும் காயம் மறுவாழ்வு பிரிவு, மற்றும் தரையில் ஒரு நவீன வெள்ள விளக்கு அமைப்பு வசதிகள் உள்ளன

 


ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்ளும் டெஸ்ட் அணியில் 4 ஆட்டக்காரர்களை தேர்வு செய்துள்ளது. முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் ரஷித் கான் அவர்கள் இல்லாமல் இருப்பார்கள்

 


வெறும் 24 வயதுதான்

◾ தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாடுகிறார்

◾ தனது முதல் பந்திலேயே ஸ்மித்தின் விக்கெட்டைப் பெற்றுள்ளார்

◾ அடிலெய்டில் ஐந்து-க்கு எடுக்கிறது

◾ இளஞ்சிவப்பு பந்தில் பந்து வீசியதில்லை

◾ பிரிஸ்பேனில் 7-க்கு எடுத்து POTM ஆகும்

◾ 1997 க்குப் பிறகு AUS இல் முதல் டெஸ்டில் WI வென்றது

◾ தொடரின் நாயகன் விருதை வென்றார்


ஷமர் ஜோசப், நீங்கள் முழுமையான ராக்ஸ்டார்    #AUSvWI

 


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சதுரங்க வீராங்கனையான வேணுகணன் நயனகேசன், 8 வயதுக்குட்பட்ட திறந்த பிரிவில் இலங்கை தேசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார், மேலும் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற்றார் மற்றும் உலகளாவிய வெற்றிக்கான பேச்சுக்கு ஊக்கமளித்தார்.


கொழும்பில் உள்ள தர்மபால கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 450 வீரர்கள் கலந்து கொண்டனர், மேலும் நயனகேசன் முதல் பத்து இடங்களில் தனது இடத்தைப் பெற்றார்.


கொழும்பின் விளையாட்டு அமைச்சின் பெவிலியனில் நடைபெற்ற இந்தப் போட்டியானது, முன்னணி வீரர்கள் நேரடியாக எதிர்கொண்டதால் சவாலானதாக இருந்தது, ஆனால் நயனகாஷன் 8/9 புள்ளிகளைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தி அவருக்கு மதிப்புமிக்க தேசிய சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தார்.


நயனகேஷனின் வெற்றியானது 2024 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இளம் செஸ் உணர்வை அனுமதிக்கிறது. அவர் இப்போது காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப், அல்பேனியாவில் உலக கேடட் சாம்பியன்ஷிப், பிரேசிலில் நடக்கும் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் கஜகஸ்தானில் நடக்கும் ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள மேற்கு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.


குறிப்பிடத்தக்க வகையில், நயனகேசன் இலங்கையில் தனது வயதுப் பிரிவில் மிக உயர்ந்த சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை (தரநிலை மதிப்பீடு 1116) பெற்றுள்ளார், இது அவரது விதிவிலக்கான திறமை மற்றும் விளையாட்டிற்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


தற்போது கொக்குவிலில் உள்ள இந்து ஆரம்பப் பள்ளியில் படிக்கும் இளம் செஸ் சென்சேஷன், 4 வயதில் தனது சதுரங்கப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தீவு முழுவதும் நடந்த போட்டிகளில், நயனகேசன் தனது வயது பிரிவில் ஆதிக்கம் செலுத்தினார்.


நயனகேஷனின் சாதனைகள் அவரது அபாரமான திறமையை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் அவர் சதுரங்க உலகில் தொடர்ந்து அலைகளை உருவாக்கி வரும் அவர் எதிர்காலத்தில் இருக்கும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 


நடிகை நிவேதா பெத்துராஜ் ,டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்டு  இரட்டையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 


மாளிகைக்காடு நிருபர்


சாய்ந்தமருதின் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான பிளாஸ்டர் விளையாட்டுக்கழக ஆறாவது ஆண்டை முன்னிட்டு நடைபெறவுள்ள கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் வெற்றிக்கிண்ணம் 2024 இந் அணிகள் அறிமுகமும், வெற்றிக்கிண்ண அறிமுகமும், சுற்றுத்தொடரின் போட்டி அட்டவணை வெளியீடும் கழக முகாமையாளர் எம்.எல்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவர் எம்.பி.எம். பாஜில் தலைமையில் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (20) மாலை நடைபெற்றது.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான எஸ்.எல். சம்சுதீன் மற்றும் சுற்றுத்தொடருக்கு பிரதான அனுசரனை வழங்கும் நாபீர் பௌண்டஷன் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கழக ஊடக செயலாளருமான யூ.எல்.என். ஹுதா, கழக உப தலைவரும், ஓய்வு பெற்ற பிரதி அதிபருமான ஏ.எம். அப்துல் நிஸார், கழக செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான எம்.ஏ.சி. நிஸார், கழக பொருளாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம். முனாஸ், உட்பட கழக நிர்வாகிகள், வீரர்கள், அம்பாறை மாவட்ட 27 முன்னணி விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், நாபீர் பௌண்டஷன் உறுப்பினர்கள், நடுவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது தேசிய அணியில் கிரிக்கெட் வீரர்களாக சிறுபான்மை இன வீரர்கள் புறக்கணிக்கப்படும் விடயங்கள் தொடர்பிலும், போதைத்தடுப்பு தொடர்பிலும், போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டவர்களின் விடயங்கள் தொடர்பிலும் அதிதிகளினால் உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்த மாதம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசும், கிண்ணமும் இரண்டாம் நிலை அணிக்கு 25 ஆயிர ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.


 தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை U19 அணியில் இணைய உள்ளார். சனத் ஜெயசூர்ய -லெஜண்டுடன் மேலும் இரண்டு U19 சிறுவர்கள் பயணம் செய்வார்கள்

 


சிறப்பு ❤️💛


#வாழ்த்துக்கள்! 


முதல் முறையாக பிரித்தானிய கால்பந்து அணியில் ஈழத்தமிழ் இளைஞன்! 


ஈழத்தில் பிறந்த 18 வயதான விமல் யோகநாதன் இங்கிலாந்தின் #Barnsley அணியின் வீரராக உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


அம்பாறை மாவட்டம் மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் அன்பஸ் கரீம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெறவுள்ள இருபத்தியொரு(21)வயதிற்கு உட்பட்ட ராஜீவ் காந்தி கிண்ண T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் முகமாக இந்தியா பயணமாகின்றார். 


இலங்கை( RICHES LANKA Centre for Cricket (RCC) அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெறவிருக்கும்,பல நாடுகள் பங்குபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் (Rajiv Gandi Trophy, Hyderabad, 2024 ) இவர் விளையாடுவதற்காக நாளை (12) இந்தியா செல்கின்றார்.


அன்பஸ் ஹிபத்துல் கரீம் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டில் இடது கை வேகப்பந்துவீச்சில் காட்டிய திறமை காரணமாகத்தான் இவ் அரிய வாய்ப்பு இவருக்கு கிட்டியது.மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகும். இந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மருதமுனை மண்ணிற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இடதுகை வேகப்பந்து வீச்சாளரும் வலதுகை துடுப்பாட்ட வீரருமான அன்பஸ் கரீம் அம்பாறை மாவட்ட U19 பாடசாலை அணியின் ஒரு முக்கியமான வீரராவார். மென்பந்து போட்டிகளில் மருதமுனை Brisbane Sports Club விளையாட்டுக் கழகத்திலும் கடினபந்தில் Kalmunai Victorious அணியிலும் விளையாடிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மருதமுனையை சேர்ந்த முகம்மது பழீல் ஹிபத்துல் கரீம்,முகம்மது ஜுனைட் அகீலா தம்பதிகளின் மூன்றாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

MNM.Afras
0750576661
journulist


 இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாப்வே அணி சற்றுமுன்வரை (11.5/43 ov) 48/3 பெற்றுள்ளது. போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.