கனடாவில் கொல்லப்பட்ட ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.
குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரது ஏழு வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அசிட் தாக்குதலில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இரத்தினபுரி சமன் தேவாலய பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான வழக்கிற்காக பிரசன்னமான பிரதான சந்தேகநபரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் சந்தேகநபர், சந்தேகநபரின் மனைவி, நண்பர் ஒருவர் மற்றும் அருகிலிருந்தத மேலும் இருவர் அசிட் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் தந்தையே, அசிட் தாக்குதல் நடத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும்
குறிப்பிட்ட இந்த சந்தேகம் அவர்கள் ஒன்பது பேரில் மூன்று பேர் இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் குறித்த மூவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கம் அளிக்குமாறு அக்கரைப்பற்று நீதிபதி ஏ.சி ரிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் சார்பில்,
சட்டத்தரணிகள் சமீம், ஜனிர் ரிஸ்வான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்
நாகானந்த கொடிதுவாக்குவின் பெயரை சட்டத்தரணியாக மாற்றியமைத்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கொடிதுவாக்கு தொழில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாகாநந்த கொடிதுவாக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய் மடி தேடி, தாயகம் நோக்கி புறப்பட்டார் சாந்தன்.
உயிரற்ற உடலாக சிறப்பு முகாமில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றார் சாந்தன்.
உயிரோடு வந்தவனை உயிரற்ற பிணமாக தாயகம் அனுப்புகிறது தமிழகம்.
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...
மே 27, 2022 அன்று பாத்திமா ஆயிஷா கொலை செய்யப்பட்டார், அதே நாளில் அவர் அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் திரும்பி வராதபோது காணாமல் போனார்.
கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் இருந்து ஆயிஷா காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் ஆயிஷாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி சென்றதால் அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். காலை 10 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு சென்றும் திரும்பவில்லை. சிசிடிவி காட்சிகளில் சிறுமி கடையை விட்டு வெளியேறியதைக் காட்டியது, பண்டாரகம காவல்துறை மற்றும் பாணந்துறை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளூர்வாசிகள் சிலருடன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது. ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலையாளி என சந்தேகிக்கப்படும் அத்துலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடந்த மே மாதம் 30ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர் கொத்து ரொட்டி தயாரிக்கும் திருமணமானவர் எனவும் உயிரிழந்தவரின் அயலவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர், மளிகைக் கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் சிறுமியை அழைத்துச் சென்று கொண்டிருந்த சாலையோரம் காத்திருந்து, குழந்தையை அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவரின் காணாமல் போனது குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கிய பின்னர் சந்தேக நபரும் தேடுதல் குழுவில் சேர்ந்தார் மற்றும் அந்த நேரத்தில் அவரது நடத்தை எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. மூன்று மருத்துவர்களால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் மூக்கு, வாய் மற்றும் நுரையீரலில் தண்ணீரும் சேறும் கலந்திருப்பது தெரியவந்தது, இது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நீதிபதிகள் நம்புகிறார்கள். பிரேத பரிசோதனையில் குழந்தை பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்தது. சந்தேக நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக அருகிலுள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்றது பின்னர் தெரியவந்தது, ஆனால் அவள் அவனது நடவடிக்கையை எதிர்த்து உதவிக்காக அலறத் தொடங்கியதால், அவளை சில மீட்டர் தூரம் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இழுத்துச் சென்று பின்னர் அழுத்தி கொலை செய்துள்ளார். சேற்று நீர் குளத்திற்கு எதிராக குழந்தை உறுதியாக பாதிக்கப்பட்டவரின் முதுகில் முழங்கால்களை வைத்து இறக்கும் வரை அவளை வீட்டிற்கு திரும்ப அனுமதித்தால் நடந்ததை பெற்றோரிடம் கூறுவதை தடுக்கிறது#DM.
பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிடம் சுமார் ரூ. கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது.
சந்தேக நபர் ஒரு அரசியல்வாதியின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் எங்களை அவதூறாகப் பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். இலங்கை ரூபாவிற்கு டொலர்களை மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் எங்களை, அரசாங்கம், செயல் ஐஜி மற்றும் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றன, ”என்று அவர் கூறினார்.
குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டத்தரணியின் காரியாலயத்தில் சட்ட ஆலோசனை பெறச் சென்ற மட்டக்களப்பை சேர்ந்த சந்தேக நபரான, கோகுல் என்பவரும், இன்னுமொரு பெண் சந்தேக நபரும் இந்தத் தாக்குதலைத் தொடுத்தவர்கள் ஆவர்.
குறித்த பெண் சட்டத்தரணியும் அவரது கணவரும் மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (04) அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் அழைக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அழைக்கப்பட்டார்.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் பொறுப்பில் இருந்த போது அரச வைத்தியசாலைகளுக்கு புற்றுநோய்க்கான போலி மருந்துகளை விநியோகித்து பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்தமை தொடர்பில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.