சட்டத்தரணி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்




 


பொது நலன் வழக்கு செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவாக்கு சட்டத்தரணி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நாகானந்த கொடிதுவாக்குவின் பெயரை சட்டத்தரணியாக மாற்றியமைத்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொடிதுவாக்கு தொழில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரியந்த ஜயவர்தன, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாகாநந்த கொடிதுவாக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.