கல்முனை விஜயம்!
( வி.ரி. சகாதேவராஜா)
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் அணிவகுப்பு இடம்பெற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பணிப்பாளரினால் சிறப்புரை வழங்கப்பட்டது.
தனது உரையில், வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இக்கட்டான நிலையில் சிறந்த முறையில் கடமையாற்றுவதை பாராட்டியதுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு திருப்தியான சிறந்த சேவையை வழங்குவதற்கு ஆலோசனையும் வழங்கியதோடு எந் நிலை வந்தாலும் அவற்றை வென்று சிறந்ததொரு வைத்திய சேவையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இதேபோன்று சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி எமது பிரதேச வாழ் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த சுதந்திர தினத்தில் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதியபரிபாலகர் என்று.சசிதரன், தாதியபரிபாலகி திருமதி எல்.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள், பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி.ரோஷி சுகுமார் மற்றும் விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், நிறைவுகான் தொழில் வல்லுனர் சேவை உத்தியோகத்தர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், விடுதி மேற்பார்வை உத்தியோகத்தர்கள், சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களும், ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாற்சோறும் வழங்கி இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி நேற்று முன்தினம் (30) வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் தொழுநோய் தின நிகழ்வு நடைபெற்றது.
வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் டாக்டர்.என். தமிழ்வண்ணன் கலந்து சிறப்பித்தார்.
வரவேற்புரையினை தோல் நோய் மருத்துவர் டாக்டர் ஜே.எச்.. மஷாகிட் வழங்கியதோடு விசேட உரையினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வழங்கியிருந்தார்.
தோல் வைத்திய நிபுணர் டாக்டர் என். தமிழ்வண்ணனினால் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது.
அவர் தனதுரையில் தொழுநோயின் வரலாறு, அதன் வகைகள், அறிகுறிகள் முக்கியமாக தொடுகையுணர்வு குறைவான தோலின் நிறமாற்றங்கள், நரம்புத்திரள்கள், ஏனைய தோலின் மாற்றங்கள் இதற்கு சிகிச்சை முறைகள் மருந்துகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக விவரித்தார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் டாக்டர் தமிழ்வண்ணனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
நன்றியுரையினை தோல் சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி.வி. இராஜலோஜினி நிகழ்த்தினார்.
நிகழ்வில் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம் என் எம். சுவைப், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆர்.. கணேஷ்வரன், தாதிய பரிபாலகர் திரு. என். சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி எல். சுஜேந்திரன், பிரதம மருந்தாளர் பி.சுதர்ஜினி, பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரோஸி சுகுமார், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. என்..மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.
இவரது சேவை நலனைப் பாராட்டிப் பொன்னாடையும் போர்த்தப்பட்டதுடன் கௌரவிப்பும் இடம்பெற்றது