அக்கரைப்பற்றில், வெள்ளத்தில் பாதிப்புற்றோருக்கு வள்ளத்திலும் சென்று பசி தீர்ப்போம்!




 





அக்கரைப்பற்று அவசரகால வெள்ள அனர்த்த நிவாரணக் குழுஅக்கரைப்பற்றுப் பகுதியில் வெள்ளத்திளால் பாதிப்புற்றோருக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்ற அதேவேளையில், பொது மக்களால் வீடுகளிலிருந்து வழங்கப்பட்ட உணவுப் பொதிகளையும் ஒன்று சேர்த்து பாதிப்புற்றோருக்குப் பகிர்ந்தும் வருகின்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளிலிருந்து சமைத்த உணவை வழங்குமாறு அவசரகால வெள்ள அனர்த்த நிவாரணக் குழு நேற்றிரவு விடுத்த வேண்டுகோளை ஏற்று எதிர்பார்த்த எண்ணிக்கைகளையும் விட அதிகமான உணவுப் பார்சல்களை அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் மற்றும் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி மக்களின் பசி தீர்க்க உதவிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள். ஜஸாக்கமுல்லாஹு ஹைரா.
அல்லாஹுத்தஆலா உங்களுடைய குடும்ப பொருளாதார வாழ்வில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக!
இப்பணியில் தொண்டர்களாக பணியாற்ற சகோதரர்களின் பணியை அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்வானாக!