Showing posts with label world. Show all posts

 


ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் 'உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை' என்று துணைப் பிரதமர் துமாஸ் தாரபா தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய துமாஸ் தாரபா ஃபிகோவின் அறுவை சிகிச்சை 'நன்றாக' முடிந்திருப்பதாகவும், 'இறுதியில் அவர் உயிர் பிழைப்பார் என்று தான் நம்புவதாகவும்,' தெரிவித்தார்.

முன்னர், தாக்குதலில் படுகாயமடைந்த ஃபிகோ 'உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக' ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதன்கிழமை (மே 15) மாலை ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக், பிரதமர் ஃபிகோ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையில் இருந்ததாகவும், அவரது நிலைமை 'மோசமாக' இருப்பதாகவும் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை 'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கூறியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்.

என்ன நடந்தது?

உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180கி.மீ. தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது".

ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்லோவாக்கியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது

சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள், ஒரு நபர் துப்பாக்கியை உயர்த்தி, பிரதமர் ஃபிகோவை நோக்கி ஐந்து முறை சுடுவதைக் காட்டின. அதன்பின் பிரதமர் ஃபிகோவின் மெய்க்காப்பாளர்கள் அந்த நபரை அடக்கினர். ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.

அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், 'துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் ஃபிகோ ஹெலிகாப்டர் மூலம் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஹண்ட்லோவாவின் கிழக்கே உள்ள பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்," என்றார்.

பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், அப்போது, பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

முன்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தச் செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” 

யார் இந்த ராபர்ட் ஃபிகோ?

கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.

இடதுசாரி ஸ்மெர்-எஸ்.எஸ்.டி கட்சிக்குத் தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

2018-இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்,” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார்.

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன

 


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 2024ஆம் ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சியில்,தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி டைலா என்பவர் கடற்கரை மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து சென்றுள்ளார்

 


நூருல் ஹுதா உமர் 


கத்தாரில் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வரும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்கம், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கத்தார் ஹமாத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை கத்தார் தோஹாவில் நடத்தியது.


இதில் ஹமாத் மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் திருமதி. சாதிக்கா ஸ்மாயில் அப்பாஸ், அமைப்பின் தலைவர் திரு. தாகீர் அவர்களுடன் இணைந்து சிறப்புரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார்.  

மேலும் ஐ.சி.சி பொதுச் செயலாளர் திரு. மோகன் குமார், ஐ.சி.பி.எஃப் பொதுச் செயலாளர் வர்க்கி போபன், ஐ.சி.பி.எஃப் காப்பீடு மற்றும் சமூக நலன் தலைவர் திரு. அப்துல் ரகூப், தொழிலதிபர் திரு. யாழினி குமார், தி.மு.க அயலக அணி பொறுப்பாளர் திரு.மதன், ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான ஜே.எம் பாஸித் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு ஆஸ்திரேலியா மக்கள் ஒன்றியம் தமிழர் பாரம்பரியத்தை மறக்காமல்  (AusKar)நடத்திய சித்திரைத்திருநாள் பெருவிழா நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை சிட்னி லிட்டன் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 ஒஸ்கார் அமைப்பின் நடப்பாண்டுத் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

அதிதிகளாக ஒஸ்கார் அமைப்பின் போசகர்களான சிட்னியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவிய உதயசூரியன் நாகமணி குணரெட்ணம், முன்னாள் பட்டய கணக்காளர் ரி.பிரகதீஸ்வரன், முன்னாள் பொறியியலாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு பெருமக்கள் அனைவரும் பங்கு பற்றினார்கள்.

நான்கு மணி நேரமாக ஒரே குதூகலமாக நடைபெற்ற அந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்  இடம் பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிசுகள் வழங்கப்பட்டதாக ஒஸ்கார் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.

 


கராச்சியில் இதை விட நெருக்கமாக வீடுகள் இருக்கும். ஆனால் இவ்வளவு வண்ணங்கள் இருக்காது.”

மருத்துவமனையின் பதினொறாவது மாடியில் நின்றபடி, ஜன்னல் வழியாக சென்னை நகரத்தைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தார் சனோபர் ரஷீத். 19 வயதான தனது மகள் ஆயிஷாவுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து நம்பிக்கையோடு இந்தியாவிற்கு வந்த அவரின் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை நிறைந்திருந்தது.

ஆயிஷாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருக்கு 25% இதய பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. படிப்படியாக இதயம் செயலிழக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள மூத்த இதயவியல் மருத்துவரை காண வந்திருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு செயற்கை இதயத் துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பின் கராச்சி திரும்பிய ஆயிஷாவுக்கு இரண்டு ஆண்டுகளில் தொற்று ஏற்பட்டு, அவரது இதயத்தின் வலதுபுறம் செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு பிறகு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

 அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்காவின் உயர்கல்வி வளாகங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.


கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து சுமார் 1,200 பேரைக் கொன்றது. அதற்குப் பதிலடியாக காஸாவின்மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை 34,000க்கும் அதிகமான பாலத்தீனர்களை கொன்றிருக்கிறது. காஸாவில் மனிதாபிமான சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


இந்தச்சம்பவங்களைக் கண்டித்தும், காஸாவில் அமைதி வேண்டியும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.


இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.


ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.


அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்டின் நகரத்தில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் மாணவப் போராட்டக்காரர்கள்

மாணவர்கள் கைது, வன்முறை

முதலில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.


பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்ட முகாம்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.


கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்தியதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரத்தில், போராட்டக்காரர்களை கைது செய்யுமாறு மாகாண துருப்புகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.


அட்லாண்டா நகரத்தில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


இஸ்ரேல் - பாலத்தீன மோதல்: எளிய வடிவில் முழுமையான வரலாறு

9 அக்டோபர் 2023

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

25 ஏப்ரல் 2024

ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் - முழு விவரம்

25 ஏப்ரல் 2024

போராட்டம் எப்படித் துவங்கியது?

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் கூடாரம் அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

முதலில் போராட்டத்தைத் துவங்கியது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில், பாலத்தீனத்தை ஆதரித்து மாணவர்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடனர். இதனால் இந்தப் பல்கலைக்கழகத்தின்மீது யூத எதிர்ப்புக் குற்றமும் சாட்டப்பட்டது.


கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் போராட்டத் தளத்தை அகற்றுமாறு போலிசாரிடம் கேட்டதை அடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஆனால் இந்தக் கைதுகள் மாணவர்களின் போராட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. கைதுகள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும் மாணவர்கள் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.


அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான இல்ஹான் ஓமரின் மகளும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்டார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த இயக்கம் வெகுசில மாணவர்களுடன் தொடங்கியது, ஆனால் இந்தக் கைதுகள் காரணமாக விரைவாகப் பரவியது, என்றார்.


கடந்த வியாழன் அன்று கொலம்பியாவில் பிபிசியிடம், "இது வெறும் 70 மாணவர்களுடன் தொடங்கிய இயக்கம்" என்று கூறினார்.


"கொலம்பியா பல்கலைக்கழகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் இப்போது தேசிய அளவில் பரவியுள்ளது," என்றார்.


இதைத்தொடர்ந்து அமெரிக்கா எங்கிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். ஹார்வார்ட், யேல், எமரி, தெற்கு கலிபோர்னியா, ஜார்ஜ்டவுன், டெக்சாஸ், நியூயார்க், எமெர்சன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலத்தீன ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.


பிராமண எதிர்ப்பு இயக்கம், பாலியல் கல்வி வழக்குகளில் அம்பேத்கர் முன்வைத்த வாதங்கள் என்ன தெரியுமா?

14 ஏப்ரல் 2024

டைட்டானிக் மூழ்கியபோது பலகையைப் பிடித்துக் கொண்டு தப்பியவர், பிபிசியிடம் விவரித்த பயங்கர நினைவுகள்

17 ஏப்ரல் 2024

பட்டமளிப்பு விழா ரத்து

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அட்லாண்டா நகரத்தில் எமரி பல்கலைக் கழகத்தில் காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்படும் ஒரு மாணவர்

லாஸ் ஏஞ்சல்ஸில் நகரத்தில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California - USC), பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி எதிர்வரும் மே 10ஆம் தேதி நடக்கவிருந்த முக்கிய பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது.


அந்தப் பல்கலைக்கழகம், ஓர் அறிக்கையில் பட்டமளிப்பு விழா அன்று, வளாகத்திற்கு "பாரம்பரியமாக மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 65,000 பேர் வருவார்கள். பல்கலைக் கழகத்தால் முக்கிய மேடை விழாவை நடத்த முடியாது," என்று கூறியது.


இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த புதன்கிழமை, அத்துமீறி நுழைந்ததற்காகக் குறைந்தது 93 பேரைக் கைது செய்த போலீசார், போராட்டக்காரர்கள் அமைத்திருந்த முகாமை அகற்ற உத்தரவிட்டனர்.


தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், குறிப்பிடப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் மாணவியான அஸ்னா தபஸ்ஸும் நிகழ்த்தவிருந்த பட்டமளிப்பு விழா உரை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தது.


பூமிக்குள் புதைந்து கிடக்கும் தங்கம் விண்ணில் இருந்து எப்படி வந்தது? விடைதேடும் விஞ்ஞானிகள்

12 ஏப்ரல் 2024

நம் உடலுக்கு காபியின் தேவை என்ன? அது அதிகரித்தாலும் குறைந்தாலும் என்ன ஆகும்?

11 ஏப்ரல் 2024

கலவரமாக மாறிய அமைதிப் போராட்டம்

அமெரிக்க மாணவர்கள் போராட்டம், இஸ்ரேல் காஸா போர், பாலத்தீனம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எமரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.

அட்லாண்டா நகரில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பாலத்தீனத்தினர்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி, அப்பகுதியில் ஒரு காவல்துறை பயிற்சி மையம் அமையவிருப்பதை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர். இந்தப் பயிற்சி மையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அன்று எமரி பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர்.


போராட்டம் நடத்தும் மாணவர்களைக் கட்டுப்படுத்த ரசாயன எரிச்சலூட்டிகளைப் பயன்படுத்தியதாக அப்பகுதியின் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்படுவதுபோல மாணவர்கள் மீது ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.


போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட எமரி பல்கலைக் கழகத்தின் தத்துவத்துறைத் தலைவர் நோயல் மெச்-அஃபீ, முதலில் போராட்டம் அமைதியானதாக இருந்ததாகத் தெரிவித்தார். மாணவர்கள் முன்னேறி நடக்கத் துவங்கியதும், காவல்துறையினரும் செயல்படத் துவங்கினர் என்றார். "அமைதியான போராட்டமாக இருந்தது, திடீரென ஒரு நிமிடத்தில் கலவரமாக மாறிவிட்டது," என்றார் அவர்.


கன்னெடிகட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் போராட்டத் தலைவரும் சட்டக்கல்வி மாணவருமான சிஸாடோ மிமுரா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், தங்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரும் காஸாவில் நடக்கும் இன அழித்தொழிப்பிற்கு நிதியும் ஆயுதங்களும் வழங்குவது குறித்து போராட்டக்காரர்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.


 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 


தனது விருதை காசாவுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய நடிகை அறிவிப்பு


சிறந்த நடிகைக்கான  OTT  விருதை வென்ற, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தனது விருதை பலஸ்தீனத்திற்கு - காசாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். 


குறித்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ஆற்றிய சிறு குறிப்பொன்றை பகிர்ந்துள்ள பலஸ்தீன ஊடகங்கள் அவரது உரை உணர்வு மிக்கதாக இருந்ததாக வர்ணித்துள்ளன.

 


இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.


இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.


இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.


இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது.


அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.


ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.


இஸ்ரேல் - இரான் இடையே என்ன பகை? நண்பர்கள் பகையாளி ஆனது எப்படி?

36 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?

15 ஏப்ரல் 2024

பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி

இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது.


பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது.


Instagram பதிவை கடந்து செல்ல

Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


ஏற்பு மற்றும் தொடரவும்

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

எண்ணெய், தங்கம் விலை உயர்வு

இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன.


வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது.


ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன.






கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.


இரானிய அமைச்சர் எச்சரிக்கை

இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.


"இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தா


இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடக்கிறது
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடக்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் இன்று மக்களைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது
‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ – பிரதமர் மோதி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

 



பதில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை!

🔹இஸ்ரேல் மீது தாக்குதலை தொடரப் போவதில்லை; சிரியாவில் ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
🔹ஈரான் தூதரகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்காத ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை ஈரான் கடுமையாக சாடியுள்ளது
🔹ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுக்க முற்பட்டால், அமெரிக்கா அதில் பங்கேற்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
🔹ஈரானின் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சிலிடம் இஸ்ரேல் முறையிட்டுள்ளது; ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நாளை மதியம் கூடுகிறது
🔹சிரியா, ஈராக், ஜோர்டான், எகிப்து லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது

 


இஸ்ரேல் மீதான ஈரானின் ராணுவத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம்!

இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் துணை நிற்கும் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிக்கை

 


ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?
ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.

இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,ISRAELI PM'S OFFICE
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார்.

“இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,X/@POTUS
இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர்.

இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார்.

“அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

கவலை தெரிவித்த ஐ.நா.
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், "பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், "பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக" இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.

"தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், "ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்" செயல்பட்டதாகக் கூறியுள்ளது.

 


அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் கும்பல் கத்தியால் குத்திய இஸ்லாமிய பயங்கரவாதியின் முதல் பலியாக ஒரு தாயும் அவரது குழந்தையும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பல பேர் கொல்லப்பட்டனர்.

 


பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது!

ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தில் ரூ.4.3 கோடி வரை மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வைபவ் பாண்டியாவை கைது செய்தனர்


 ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.


இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது.


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.


பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.


உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?

7 ஏப்ரல் 2024

கச்சத்தீவு: இந்திரா காந்தியிடம் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் கூறியது என்ன? இன்றைய ராணி விளக்கம்

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.


எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்?

அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.


ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.


போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.


கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது.


அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.


மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.


இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார்.


அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.


கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.


இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது.


மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.


காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது.


எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.


“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார்.


"ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.


தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா?

6 ஏப்ரல் 2024

பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்?

இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர்.


மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது.


பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர்.


பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது.


மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர்.


இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.


பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது?

ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது.


ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.


இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.


காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை.


இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.


இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது.


இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது.


இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன.


இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.


காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது.


நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார்.


இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.


அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா? சிஏஏ, அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

5 ஏப்ரல் 2024

உடலில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன.


பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.


ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது.


ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன.


கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.


போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.