Showing posts with label Janaaza. Show all posts

 


ஜனாஸா அறிவித்தல்:


காத்தான்குடி சேவிங் சூப்பர் மார்க்கட் உரிமையாளர் கபூர் ஹாஜியார் அவர்கள் சற்று முன் வஃபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.


அன்னாரினது கப்றுடைய வாழ்க்கையை அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக!


اللهم اغفرله وارحمه وعافه واعف عنه


அடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 


புகழ் பூத்த மூத்த செய்தி வாசிப்பாளா் எஸ்.நடேச சா்மா  "சா்மாஜி" தமது 85-வது வயதில் காலமானாா்.


சா்வதேச இந்து மத சம்மேளன ஷா்மா ராம் அவா்கள் தமது முக நூல் பக்கத்தில் தகவலை கவலையுடன் பகிா்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது


அன்னாாின் ஆத்ம சாந்திக்கு ஜிந்துப்பிட்டி முருகனை பிராா்த்திக்கிறேன்.

அன்னாரின் பூதவுடல் நாளை 11-ஆம் திகதி கொழும்பு ஜெயரட்ண மலா்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மறுநாள் 12-ஆம் திகதி நான்கு மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.




அக்கரைப்பற்று முதலியார் வீதியை சேர்ந்தவரும்  வெல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

#அப்துல் #கபூர் 

இன்று மாலை(27/10/2023)

களுபோபிலை வைத்தியசாலையில்

காலமானார் 

இன்னாலில்லாஹ்


இவர்

சுமையாவின் கணவரும்

சஸ்னா

நஸ்ஸஹத்தாரா

அம்மார்

ஆகியோரின் தந்தையும்


மர்ஹூம்

முகமட் இப்றாலெப்பை 

ஹாஜியாரின் மகனும்


ஹாசிம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

அன்சார் (கணக்காளர்)

ஆகியோரின்

சகோதரரும்


மர்ஹூம் 

மொஹிடீன் 

(#சூனா #மாஸ்டர்)

சாலீம் BA 

ஹனிபா மதனி

ஆகியோரின் 

மைத்துனரும்


றிசாம் (farzan construction)

றியாட் Mohideen Riyadh 

ரியாஸ் 

Reenazz Salimu 

ஆகியோரின் மாமாவும் ஆவார்


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்


தகவல்

அன்சார்




ஓட்டமாவடி அல் அக்ஸா வீதி, 1ஐச் சேர்ந்த எம்.எஸ்.பர்ஹான் (வயது 29) சற்றுமுன் (17) மட்டக்களப்பு சிறைச்சாலையில் காலமானார்.


அன்னார் அப்துல் காதர், றகுமத்தும்மாவின் அன்பு மகனும் பாத்திமா நிப்ராவின் கணவரும் சம்முவின் தந்தையுமாவார்.


ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். 


பெளசுல் ஹமீட்

 


( வி.ரி.சகாதேவராஜா)


தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவாவாறு இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
              மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசா  நேற்று உடல் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அவரது மறைவு தொடர்பாக மேலும் ஜெயசிறில் தெரிவிக்கையில்..
எமது அம்பாறை மாவட்டத்தின் பல செயற்பாடுகளையும்,செயல் திட்டங்களையும் முன்னெடுத்த அக்கறை மிகுந்த ஒருவர்.  உரத்த குரலில்  எதிரியை  பதற வைத்த குரல் ஓய்ந்தது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எதிர்காலத்தில் பல இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் வீர மண்ணின் விடுதலைக்காய் இறுதி வரை செயல்பட்டவர். தமிழ் தேசியத்தின் பாசறையில் வெற்றி பெற உழைத்தவர். தனக்காக வாழாது தன் இனத்தின் விடிவுகாய் இதுவரையும் செயல் பட்டு ஈழத்தின் ஏக்கத்தோடு இன்று உங்கள் மூச்சி ஓய்ந்து விட்டது ஐயா. தமிழர் தாயகம் தமிழர்களுடைய கையை மீறி போகக்கூடாது என்பதற்காக பல அழைப்புக்களை எடுத்து பேசி ஒவ்வொரு விடயமாக ஆலோசனை வழங்கிய ஒருவர் . அவரது கருத்துக்கள் எப்போதுமே பொன்னானதாகவே இருக்கும். ஆயுதமுனைக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு இளைஞனை போன்று செயல்படும் ஒரு சிறந்த வீரர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

 




MIM இப்றாஹீம்.

அன்புக்குரிய நண்பர் "கலைநிலா"

உவைஸ் ஷெரீப் அவர்களது மறைவு 

கவலை தருகிறது! போட்டி பொறாமைகள் 

நிறைந்த கலையுலகில் எவரோடும் 

பகைமை பாராட்டாது அனைவரையும் 

அனுசரித்து மக்கள் மத்தியில் தமக்கொரு 

தனியிடத்தை வகித்துக் கொண்டு 

கடைசிவரை தனது நற்பெயரைத் 

தக்கவைக்க ஒரு பண்பான ஒருவரை 

நாம் இழந்துவிட்டோம்..ஆர்ப்பாட்டம் இல்லாமல் கலைத்துறையில் நிறைய 

சாதனைகள் புரிந்த நண்பர் உவைஸ் 

ஷெரீப் எவர் மனதையும் புண்படுத்தாது 

வாழ்ந்து மறைந்துவிட்டார்.. கடைசியாக 

அவரது புதல்வியின் மணவிழாவில்தான் 

சந்திக்க முடிந்தது! இன்று (2023.10.04)

இறையழைப்டை ஏற்ற சேதி கிடைத்திருக்கிறது!


அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து 

மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸை அருள 

இதயபூர்வமாக இறைஞ்சுவோம்!!

 


கல்முனைக்குடி-12 பழைய தபாலக வீதியைச்சேர்ந்த கண்டி பேராதனை பல்கழைக்களக வைத்தியபீட இறுதியாண்டு மாணவன் ஐமன் சற்று முன் பேராதனை வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்


சம்மாந்துறை முன்னாள் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ALM தாஸீம்(SLAS) அவர்கள் வபாத்தானார்கள்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 05.00 மணிக்கு மருதமுனையில் நடைபெறும்.

 


ஜனாஸா அறிவித்தல்


மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 


காத்தான்குடியை சேர்ந்த சகோதரர் நுபைல் அவர்களின் மகளும், *கோழிக்கடை ஹுசைன்*  மாமனாரும்  வபாத்தாகி உள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 


தந்தை Nufail தற்போது கட்டாரில் உள்ளார்..


விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..


நுபைல் அவர்களின் மாமியார் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது...


 தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட வாகனம் பாதையில் இருந்து வழுக்கிச் சென்று மரம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


தற்போது பெய்து வரும் மழை காரணமாக வாகனம் செலுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்...

 


அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் ஜீனியர் கல்லூரி வீதியினைச்_சேர்ந்தவரும்,. தற்போது கத்தாரில் வசித்துவந்த வருமான

சகோதரர் றமீஸ் https://www.facebook.com/faees.ramees?mibextid=LQQJ4d அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் றமீஸ் சவுதி அரேபியா தம்மாம்யில் வபாத்தானார்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன் 


அவரது ஜனாஸா  நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் .

 


நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தரும், கவிஞரும், எழுத்தாளருமான ஏ. எல். எம். மக்கீன்(மக்கீன் ஹாஜியார்) சற்றுமுன்னர்  காலமானார்.


இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காக பிரார்த்திப்போம்.


செய்திப் பரிமாற்ற உதவி : அல்ஹாஜ் ஏ. ஷபாஅத் அஹமட்

 


தென் கிழக்குப் பல்கலையின் சிரேஸ்ட முன்னாள் விரிவுரையாளர், மர்ஹூம் பளிலுல் ஹக் அவர்களின் புதல்வர்,அக்கரைப்பற்று இஹ்சான்  மெளலவி (SEUSL) மட்டக்களப்பு வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலை உத்தியோகத்தவரான இவர், கல்முனையில் மணம் முடித்வர். இரண்டு பிள்ளைகளின் தந்தை..

இவரது ஜனாசா இன்று மாலை அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி ஜீம்ஆ பள்ளிவாயலில் மாலை அடக்கம் செய்யய்படும்.


 


ஜனாஸா அறிவித்தல்

----------------------------------------

அக்கரைப்பற்று 5, "மன்பஹுல் கைராத்" மத்ரசா வீதியை சேர்ந்த 

M.A. பாறுக் ( silver tone உரிமையாளர்) வபாத்தாகி விட்டார். "இன்னாலில்லாஹி வஹின்னாஹ் இலைஹி  ராஜுஹூன்".


இவர் மர்ஹும்களான 

முஹம்மது அபூபக்கர்( Bai) 

ஆசியா  ஆகியோரின் மகனும்


பௌசியாவின் கணவரும்


சியாத்

ரிசாட்

ரசாட்   

சலிதா

சஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.


ரசீதா

கமால் பச்சான்  

நிசார் ( லியாகத் அலிகான்) 

ஐனூன் ( Australia) 

மர்ஹூம் முபாரக் ஆகியோரின் சகோதரரும் ஆவார் . 


 "இன்ஷாஅல்லாஹ்" அஸர் தொழுகைக்கு பெரிய வாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

 


ஆசிரியர் முஹம்மது அஸாம் உயிரிழந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நண்பன் #நுஸைக் அஹமட்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

என்ற செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.




 #விபத்தில் ஒருவர் வபாத் மேலும் ஒருவர் காயம்...


ஓட்டமாவடியைச் சேர்ந்த அஸாம் ஆசிரியர் ரிதிதென்னையில் இடம்பெற்ற விபத்தில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


இந்த விபத்தில் நுஷைக் அஹமட் என்பவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


யா அல்லாஹ்!

வபாத்தான சகோதரனுக்கு மேலான சுவனத்தைக் கொடுத்தருள்வதுடன் காயமடைந்த சகோதரனுக்கு பரிபூரண உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவாயாக ஆமீன்!

 


ஜனாஸா_அறிவித்தல் 


அக்கரைப்பற்று - 04 பெரிய பள்ளியடியை சேர்ந்த மர்ஹும் MTM. ஹனிபா ஆசிரியரின் மனைவி ஆதம்லெப்பை சித்தி பாத்தும்மா இன்று காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னாஃ இலைஹி ராஜிஊன்.


அன்னார்

Dr சனூபர் 

Dr சனூஷ் 

Dr உறுஜா 

Dr சபீல் 

சப்ரி bsc ஆகியோரின் தாயாரும் 


Dr நிஹால் காரியப்பரின் மாமியாரும்


ஜமால்டீன் ஆசிரியர் அபுல் ஹஸன் ஆசிரியர் மர்ஹும் மீரா சாஹிப் ஆசிரியர் றஷீதா ஆசிரியை மஃபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.


இவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையுடன் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல் மகன் Dr சனூபர்

 


*ஜனாஸா அறிவித்தல்...*


        இலங்கை நாட்டின் பிரபல தஃவா பேச்சாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரான் பின்னூரி ஹஸ்ரத் அவர்கள் காலமாகி விட்டார்கள் , அன்னாரின் ஜனாஸா மல்வானையில் வைக்கப்பட்டுள்ளது , முடியுமான அனைவரும் ஜனாஸாவில் கலந்து கொள்வோம்.


إنا لله وإنا إليه راجعون 

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار 


2023.08.06 /1445.01.18



முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான #பாயிஸ் அவர்கள்  வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....


தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்...


யா அல்லாஹ்!

அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!


இலங்கையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மூத்த ஒலிபரப்பாளரரும், வழக்கறிஞருமான விமல்  சொக்கநாதன் விபத்தொன்றில் அகால மரமடைந்துள்ளார்.



 'இலண்டனிலிருந்து விமல்' என்னும் நுால் கடந்த  மே மாதம்  இலங்கையில் வைத்து அவரால்  வெளியிட்டு வைக்கப்பட்டது. அதவே விமல் சொக்கநாதன் இலங்கையில் கலந்து கொண்ட இறுதி நிகழ்வாகும். இசையும் கதையும், செய்தி வாசிப்பு என்று இலங்கை வானொலியில் அன்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த விமல் சொக்நாதன்  இலங்கை வானாலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். தொழிச்சார் சட்டத்தரணியான இவர் .இலண்டன் சென்று, உலகப் புகழ்பெற்ற பிபிசி தமிழோசையில், செய்திவாசிப்பாளராகவும் கோலோச்சினார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயது 75.


ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும்  பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த-லண்டனில் இருந்து முழங்கி வந்த தமிழோசையில் செய்தி வாசித்ததால் தரணியெங்கும் புகழ் அடைந்த நண்பர் விமல் சொக்கநாதன் மரணம் என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லொனாத் துயரம்” என இலங்கை ஒலிபரப்பு துறையின் முதுபெரும் ஒலிபரப்பாளர் வி.என்.மதியழகன் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


விமலின் பிரிவால் துயருறும் உலகளாவிய வானொலி நேயர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் www.ceylon24.com குழுமம் தமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.