Showing posts with label Slider. Show all posts

 


(நூருல் ஹுதா உமர் )


குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக (21) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதன் தொடரச்சியாக காரைதீவில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முசாரப் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் உட்பட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கி வைத்தனர். 

 


புத்தளத்தைச் சேர்ந்த காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த காதி நீதிமன்ற நடுவர் 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட 13 வருடங்களில், 99 ஆயிரத்து 375 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. 


Sugirthakumar Vijayarajah
.


40 வயதிற்கு மேற்பட்ட Legend Premier League கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லெஜன்ட் கிங்ஸ் அணி சம்பியனானது.
10 ஓவர்களில் 124 எனும் இலக்கை நிர்ணயித்த லெஜன்ட் வோரியஸ் அணியின் இலக்கை தாண்டி வெற்றி வாகை சூடியது.

குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டமாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரபு மற்றும் மேகசுதன் ஆகிய இருவருக்கும் அணியை வழிநடத்திய தலைவர் தயகாரன் சிரேஸ்ட வீரர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பாராட்டுக்குரியோர்.

இச்சுற்றுப்போட்டி தொடரை ஏற்பாடு செய்து கடந்த கால நினைவுகளை நினைவூட்டியதுடன் பதவி நிலைகளுக்கு அப்பால் முன்னாள் கிரிக்கெட் நண்பர்களை சந்திக்க வாய்பேற்படுத்திய ஏற்பாட்டாளர்கள் அனுசரணையாளர்கள் ஊக்கமளித்த அத்தனை பேருக்கும் நன்றி.

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய லெஜன்ட் பிரிமிய லீக் சுற்றுத்தொடர் கடந்த மாதம் (29) ஆரம்பமாகியது.
.
ஆரம்ப நிகழ்வு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் சுப்பர் லெஜன்டஸ்; பிளாஷ் லெஜன்;டஸ்; லெஜன்ட் வோரியஸ் லெஜன்ட் ஸ்டார்ஸ் லெஜன்ட் கிங்கஸ் ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வந்தன.
இறுதிப்போட்டி அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிபோட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரரும் சுப்பர் லெஜன்ட் அணி தலைவரும் நீதிபதியுமாகிய த.கருணாகரன் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்


 இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நீதியைக் கோருவது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலுக்காக சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து எனது மட்டக்களப்புப் பயணத்தை முடித்தேன்.


 (நூருல் ஹுதா உமர் )


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

 (ஏ.எம்.ஹஸ்னி)



பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும்
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின்  முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.தாஜுடீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவிலைப் பொறுத்தவரை செங்காமம், துக்வெல்ல, உடம்பன்குளம், தகராம்பெல, ஆமவெட்டுவான், கிராண்கோவை, சோனிகம உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் காணிப்பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு துண்டு நிலத்தைக்கூட முஷாரப் எம்.பியினால் விடுதலை செய்ய முடிந்ததா? எனப் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மண்மலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பேசுகின்றனர் மண்மலை பிரதேசத்தில் ஏதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றதா? மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றதா? அங்குள்ள மக்கள் அன்று அனுபவித்த அதே இன்னல்களை இன்றும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். இன்று அங்கு மலசலகூடம் கட்டிக்கொள்ள முடியாது. மக்கள் எல்லை வேலிகளை அமைத்துக் கொள்ள முடியாது. குடி நீருக்காக ஒரு கிணற்றைக்கூட நிர்மாணிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்த இடத்தை சவாலுக்குட்படுத்துகின்றனர்.

இருக்கின்றனர். இங்கு தனிப்பட்ட ஒருத்தருக்காக வாக்குகள் இல்லை. மிகக் குறுகிய காலத்துக்குள்ளே இந்தக்கட்சி பொத்துவில் பிரதேசத்தில் அளப்பெரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.

இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


சேவைகளை ஆற்றியுள்ளது. இந்தக் கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.


இந்த மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானது அல்ல இந்தக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகம் இழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.


 இலங்கை மாணவன் மதீனா விபத்தில் வபாத்

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். இவருடைய ஜனாஸா மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


கனேடிய அமைச்சரிடம்  “போரின் சாட்சியம்” நூலின் முதற்பிரதி...


வன்கூவரில் நேற்று இடம்பெற்ற #போரின்_சாட்சியம் வெளியீட்டு விழாவில் நூலின் முதற்பிரதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

 


வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து மரணம்!

அவரது வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற எடுத்த முயற்சியும் தோல்வி.


சமூக ஊடக ஆர்வலர்களுக்கான கப்சோவின் நான்காம் கட்ட பயிற்சிப் பட்டறை நிறைவு!*
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான "Youth Media Project" வேலைத்திட்டம் கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காம் கட்ட நிகழ்வு காரைதீவு லேடி லங்கா வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்வுக்கு வளவாளராக வருகை தந்திருந்த ஆசிரியர் அஸ்வர் மொகமட் விரிவுரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களைக் கொண்டு நடாத்தப்பட உள்ள ஒரு வருட கால திட்டமாகும்.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்படும் Youth Media Project வேலைத்திட்டத்தின் கீழ் “HOPE of YOUTH ”எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிபர் முய்சுவின் அதிகாரம் மேலும் வலுவாகிறது.


மொத்தம் 93 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் மக்களவையில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) 66 இடங்களை வென்றதாக முதற்கட்ட முடிவுகள் சொல்கின்றன.


சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேண முய்சு கடைபிடிக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சீனாவுக்கு ஆதரவானவர் என்று பரவலாகக் கருதப்படும் முய்சு, மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாகச் செலுத்திவரும் செல்வாக்கைக் குறைக்க விரும்புகிறார்.


உள்ளூர் ஊடகங்கள் முய்சுவின் கட்சியின் வெற்றியை ‘சூப்பர் மெஜாரிட்டி’ என்று விவரித்துள்ளன. அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அக்கட்சி பாராளுமன்றத்தில் எட்டியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


‘மாலத்தீவில் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முய்சு’

பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) வாக்கெடுப்புக்கு முன்னர் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்டிருந்தது.


மாலத்தீவு ஆய்வாளரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அசிம் ஜாஹிர் இதுகுறித்து கூறுகையில், "முய்சுவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை,” என்றார்.


"அரசியல் சார்ந்து பார்த்தால், மாலத்தீவின் அனைத்து அமைப்புகளும் இப்போது முய்சுவின் கட்டுப்பாட்டில் உள்ளன். அவருக்கு மாலத்தீவு நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இருப்பதால், அவரால் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


முய்சு கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்தார். அவரது தேர்தல் பிரசாரம், முந்தைய அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டிருந்தது. அவர் இன்னும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.


மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க, அங்குள்ள அனைத்து இந்தியப் படைகளையும் திருப்பி அனுப்புவதாக அவர் உறுதியளித்துள்ளார்.


சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - குடும்பத்துடன் செல்லலாம்

21 ஏப்ரல் 2024

இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

21 ஏப்ரல் 2024

பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

18 ஏப்ரல் 2024

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனாவுடன் நெருங்கிய உறவுகளை அடைவதற்கு முய்சு கொண்டிருக்கும் கொள்கைக்கு இந்த வெற்றி வலுசேர்க்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

சீனாவுடனான முய்சுவின் நெருக்கம்

மீட்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக சில வருடங்களுக்குமுன் இந்தியா மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தைக் கொடுத்திருந்தது. அவற்றைப் பராமரிக்கவும் இயக்கவும் சுமார் 85 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்தனர்.


மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. அவர்களுக்குப் பதிலாக அங்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இந்திய துருப்புகள் மே 10-ஆம் தேதி மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய துருப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முய்சுவின் முடிவு, இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை மோசமாக்கிவிட்டது. சீனா இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது போல தோன்றுகிறது.


முய்சு கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று முதலீடுகளுக்கான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

10 ஏப்ரல் 2024

உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

19 ஏப்ரல் 2024

இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு

9 மணி நேரங்களுக்கு முன்னர்

மாலத்தீவு, முகமது முய்சு, இந்தியா, நரேந்திர மோதி, சீனா, ஷி ஜின்பிங்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோதியைச் சந்தித்துப் பேசும் முய்சு. ஆனால் இதுவரை முய்சு அரசமுறைப் பயணமான இந்தியா வரவில்லை

‘மாலத்தீவுடனான உறவுகளை இந்தியா பராமரிப்பது முக்கியம்’

சென்ற மார்ச் மாதம் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது போன்ற ‘ராணுவ உதவிகளுக்கான’ ஒப்பந்தத்தில் சீனாவுடன் மாலத்தீவு கையெழுத்திட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு மாலத்தீவு ராணுவத்துக்குப் பயிற்சி அளித்து வந்தன.


"இப்போது ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தியா மாலத்தீவுடனான உறவுகளை நன்றாக நிர்வகிக்காமல், முய்சுவுக்கு உதவ மறுத்தால், அவர் வெளிப்படையாக பெய்ஜிங்கைச் சார்ந்திருப்பார்," என்று ஜாஹிர் கூறுகிறார்.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவானதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது 2019-இல் பதிவான 82% வாக்குகளை விடக் குறைவு.


முதற்கட்டத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான எம்.டி-பி-யின் மூத்த தலைவர் ஒருவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


"எம்.டி.பி-யின் எம்.பி-க்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், பொறுப்பான எதிர்க்கட்சியாக அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதற்கும் தயாராக இருப்பார்கள்," என்று அக்கட்சியின் தலைவர் ஃபயாஸ் இஸ்மாயில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


 (நூருல் ஹுதா உமர்) 


கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுச்சோதனை இன்று(20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹிலா இ்ஸ்ஸடீன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுாக், பொது சுகாதார பரிசோதகர்களான எம்.ஜுனைடீன், ஜே.எம்.நிஜாமுடீன், ஐ.எல்.எம்.இத்ரீஸ், எம். ரவிச்சந்திரன் ஆகியோர்களினால் பொது சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் பொது சந்தை வர்த்தகர்களுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதன்போது  பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டதுடன் சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற முறையில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்) 



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் கல்முனையில் நேற்று(21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டார்மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியகச் செயலாளர் பி.எம்.எம்.ஜஃபர்,நிருவாக கிராம உத்தியோகத்தர் உதார,கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 (றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்)


சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுகாதார கல்வி பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கு சனிக்கிழமை (20) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ், பல் வைத்திய நிபுணர் ஏ.ஆர்.கத்தாபி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலிக் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அன்னையர் ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


UpDated  
தியத்தலாவை, ஓட்டப் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொக்ஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.


 


தனது விருதை காசாவுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய நடிகை அறிவிப்பு


சிறந்த நடிகைக்கான  OTT  விருதை வென்ற, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தனது விருதை பலஸ்தீனத்திற்கு - காசாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். 


குறித்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் ஆற்றிய சிறு குறிப்பொன்றை பகிர்ந்துள்ள பலஸ்தீன ஊடகங்கள் அவரது உரை உணர்வு மிக்கதாக இருந்ததாக வர்ணித்துள்ளன.

 உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை! 



அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள திருமதி துஷாரி ஜெயக்கொடி நேற்று (19) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.


உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை(21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெறவுள்ளது.


திருமதி துஷாரி ஜெயக்கொடி அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளார்.


நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார்.


இந்நிலையில் உலக அழகி போட்டியில் பங்கேற்கவுள்ள துஷாரி ஜெயக்கொடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.