பேருவளை மாணவன் மதீனாவில் ஏற்பட்ட விபத்தில் மறைவு





 இலங்கை மாணவன் மதீனா விபத்தில் வபாத்

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். இவருடைய ஜனாஸா மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.