இந்த வனப் பகுதியை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரிஷாட் பதியூதீன், அமைச்சராக இருந்த காலப் பகுதியில், வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியை, அழித்து, முஸ்லிம் குடியேற்றங்களை செய்தார் என அவர் மீது பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நாட்டில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல், தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருக்கின்ற நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
COVID-19 வைரஸினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென வர்த்தமானியை மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் சிலர் அந்தப் பதவிகளை வகிக்காமையினால், பிரதிவாதிகளின் பெயர்களை மாற்றுவதற்கு இடமளிக்குமாறும் புதிய பிரதிவாதிகளாக பெயரிடப்படுவோருக்கு அறிவித்தல் விடுக்க அனுமதியளிக்குமாறும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அனுமதியளித்த நீதியரசர்கள், மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்தன் எதிர்வரும் 9ஆவது அமர்வில் நீதிமன்ற விளக்கமறியலில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடந்து முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக சிறையிலுள்ள இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனைகளின் போது, அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் ஏற்பாடுகளில் போது இரத்தினபுரி - காஹவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) 9ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்ள நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளாக 54 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்தவாறு, ஒரு பிரசார கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாத நிலையில், மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பிள்ளையானுக்கு செலுத்தப்பட்டன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்றம் செல்ல நீதிமன்றம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடித்தமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 நிதியத்திற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியின்றி சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பிடித்தமையானது அவர்களின் அடிப்படை உரிமை மீறும் செயலாகும் என தெரிவித்தே அதனை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த மே மாதம் சம்பளப் பட்டியலிலிருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தின் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டிருப்பதோடு மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுகாதார விதி முறைகளுக்கு முரணாக சில வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அறிவுறுத்தலுக்கமைய திறக்கப்பட்டு விருப்பமின்றி அனுமதி பெறப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் 2020.06.12 அன்று எஸ்.சி.எப்.ஆர்.166/220 இலக்கத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், மாகாண கல்விச் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ.உதயருபன் ஆகியோர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
செங்கலடி நிருபர்
பே.சபேஷ்
இந்த வழக்கில் வெற்றியீட்டுவதற்கு பிரார்த்தியுங்கள்.