”நாடாளுமன்றம் இல்லையேல்,அங்கு ஜனநாயகம் இல்லை”



  (பின்னிணைப்பு)

வரலாற்றில் முதன் முறையாக உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு மண்டபத்தில் நடந்த விசாரணையாக இது கருதபப்பட்டது.3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்ற அமர்வுகள் இன்றி நாடு இயங்க முடியாது - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டுள்ளார்.

மனுதாரர்களான விக்டர் ஐவன், சரித்த குணரத்ன சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தார். ஜனநாயகத்தின் துாண்களாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவை காணப்படுகின்றது. அதில் ஒன்று இழக்கும் முக்காலை் இல்லாத கதிரையாகின்றது என்று வாதிட்டார்.
.

”நாடாளுமன்றம் இல்லையேல்,அங்கு ஜனநாயகம் இல்லை” என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டு வந்தார். மேலும்  தேர்தல் இடம் பெறுவதற்கு 5 வாரங்களுக்கு முன்னர் பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய தேவைப்பபாடு உள்ளது. அது இங்கு நடைபெறச் சாத்தியப்பாடுகள் இலலை. எனவே ஜீன் 20ந் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போகும் என்றும் கருத்துரைத்தார்.

(முந்தைய செய்தி)
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.