#Breaking;மாகாணக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் கடமை புரிய மன்சூருக்கு அனுமதி


#IsmailUvaizurRahman.
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக M.K.M.மன்சூர் அவர்களைப் பணிபுரியும் படி, திருமலை மேல் நீதிமன்று இன்று  ஆணை பிறப்பித்தது. மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்து வந்த M.K.M மன்சூர் அவர்களை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இடை நிறுத்தியிருந்த அதேவேளை, அவருக்குப் பதிலாக நிசாம் என்பவரை நியமித்தும் இருந்தார்.

இதனை ஆட்சேபித்து, தமக்கு  நியாயம் கோரி ஆணை மனுவொன்று சிரேஸ்ட சட்டத்தரணி கிண்ணியா சபறுல்லாவினால் திருமலை மாகாண மேல் நீதிமன்றில் அண்மையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தின் பின்னர், இன்றைய தினம்  வழங்கப்பட்ட ஆணையில், மாகாணக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் கடமை புரிய M.K.M.மன்சூருக்கு அனுமதி வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.