மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரு வீதிகள்





மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள இரு வீதிகளின் வேலைத்திட்டங்கள் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக  மீள்குடியேற்ற அமைச்சின் 20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக அக்கரைப்பற்று 9ஆம் பிரிவில்; இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்;கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ஆர்;.ரதீசன் உள்ளிட்ட பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக சீரான பாதையின்மை காரணமாக கவலையடைந்திருந்த மக்களுக்கு இவ்வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் வீதியமைப்பினை முன்னெடுத்துவரும் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.