Showing posts with label Slide. Show all posts



இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராட்டே சட்டம் (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த சொத்தை மீட்கவில்லை என்றால், அந்த சொத்துகளை பகிரங்க ஏலத்தில் விற்று, அதன் மூலம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகையை மீட்டெடுக்கும் வகையில் இந்த பராட்டே சட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 


பாறுக் ஷிஹான்


 சொட் கண் வகை துப்பாக்கி மற்றும்  ரி-56   துப்பாக்கி  ரவை  10 உடன் சந்தேக நபரை  சம்மாந்துறை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்   திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட   இந்நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இல்லாத  'பொரதொளகாய் சொட் கண்' வகையைச் சேர்ந்த துப்பாக்கியும்  ரி 56 வகை  துப்பாக்கியின் 10 ரவைகளுடன்  சந்தேக நபர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேக நபர் ஓய்வு பெற்ற முன்னர் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஆவார்.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸாரினால் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Akkaraipattu 17

ஜின்னா வீதியை சேர்ந்த #மஸ்வூவுத்

(#முனீர் - SANA ELECTRICAL) காலமானார்.


அன்னார் 

மர்ஹூம்கள் #யூசுப்_மாஸ்டர் 

முஹம்மது பாத்தும்மா (#மம்மாத்தும்மா_டீச்சர்)

ஆகியோரின்

#மகனும்


#றியாசா 

அவர்களின் #கணவரும் 


#சறபா 

#ஹசீம் 

#சயான் 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் #தாஹா_GS அவர்களின் 

#மருமகனும் 


மர்ஹூம் #நிஸ்பா_டீச்சர் 

#ஜெஸ்மின்_டீச்சர் 

#நளீர் (GAMA CONSTRUCTION)

ஆகியோரின் 

#சகோதரரும் 


மர்ஹும் 

#தாஜுதீன்_மாஸ்டர் 

ஓய்வு பெற்ற அதிபர் #சஹாப்தீன்

(#அன்சார்_மாஸ்டர்)

ஆகியோரின்

#மைத்துனரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்


Taqwa Emergency service

0742421817


 40ற்கும் அதிகமான பொதிகளில் தலைமன்னார் கடலில் மிதந்து வந்த 124kg கேரள கஞ்சா  மீட்பு! 


மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. 

 


உலகெங்கிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றது.


அந்த அடிப்படையில் இலங்கையிலும் பல பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்....



 


( வி.ரி.சகாதேவராஜா)

 சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். அம்பாறை தமிழ் மக்களையிட்டு சற்றும் சிந்திக்காதது  கவலைக்குரியது.

 என்று பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் சுயேச்சை அணியின் தலைமை வேட்பாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .

காலா காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொத்துவில் பிரதேச முக்கிய தூணாக விளங்கிய  பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபனுக்கு இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் அக் கட்சி சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் சுயேச்சையில் களம் இறங்கியுள்ளார்.
அந்த அணிக்கான சின்னம் மாம்பழம் ஆகும்.

சமகால அம்பாறை அரசியல் சூழல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்...



 இன்று தமிழ்த்தேசியம் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
 மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.

 எனவே பழையவர்களை தவிர்த்து புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இன்றேல் மக்கள் பெரும்பான்மை கட்சி உடன் சேர்ந்து போக நேரிடும்.

கடந்த முறை செய்த தவறை இம்முறையும் செய்யக்கூடாது.
 மக்கள் மனைநிலை வேறு அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.

 எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் .

மக்களே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.







அரச அதிபர் பங்கேற்ற கிரிக்கெட்  சுற்றுப் போட்டி !
தெஹியத்தகண்டிய பிரதேச செயலக அணி சாம்பியன்
( வி.ரி.சகாதேவராஜா)

2025 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி  உஹன பொலிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் தெஹியத்தகண்டிய பிரதேச செயலக அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது, 

மாவட்ட செயலக அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

உஹன பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில் மாவட்டச் செயலகம் மற்றும் உஹன, தமன, மஹாஓயா, பதியதலாவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செயலகங்களின் அணிகள் பங்கேற்றன.

விளையாட்டில் பங்கேற்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பேசுகையில்..

எதிர்காலத்தில் இதுபோன்ற போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பங்கேற்க மாவட்டத்தின் பிற பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஏற்பாடு செய்த உஹன பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.


 


துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சமிக்ஞைப் படையில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேகநபர் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றியவர் எனவும், கடந்த 20ஆம் திகதி விடுமுறையில் லுணுகம்வெஹரவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மீண்டும் கடமைக்காக திரும்பியபோது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து குறித்த சிப்பாயின் பயணப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ​​பைக்குள் T-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.