Showing posts with label Sri லங்கா. Show all posts

 ஸ்ரீ லங்கன் விமான நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .


அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன



🚨 BREAKING - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு! 😱✈️


🔴​ஸ்ரீலங்காவை உலுக்கியுள்ள அதிர்ச்சித் தகவல்! ஏர்பஸ் விமானக் கொள்வனவில் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொழும்பு 07 இல் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்! 🏠


​🔴 என்ன நடந்தது? (Quick Highlights):

♦️​திடீர் மரணம் - இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 👮‍♂️🔍

♦️​நேற்று வந்த உத்தரவு - 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல்!) இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், இவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நேற்று (மே 7) தான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது! ⚖️🚫


🔴​சர்ச்சை பின்னணி - கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட இருந்த தருணத்தில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 🤔❓


​🔍 அடுத்தது என்ன?

​மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன? இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது பிரேதப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும். 🏥🧪


🔴​விமான சேவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய சாட்சி/குற்றவாளி மறைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 📉🔥

​​#SriLankanAirlines #KapilaChandrasena #BreakingNewsSriLanka #ColomboNews #AirbusScandal #SrilankaCrime #TrendingNow #VpReport #VisionPoint #CurrentAffairsSL #CorruptionScandal #SrilankaUpdates #lka

 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.



 ஹேக்கர்களால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர், குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தனது தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அதேசமயம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர்.


 நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 118, 119 ஆகிய எண்களில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.


 


நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.


இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.


இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான நகர் கிரகரி வாவி, ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றன மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து வருகின்றனர் .


இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு பிரதான பூங்காக்களில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .


இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - கண்டி நுவரெலியா - ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,


குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துவருகின்றனர்.


டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் வருவாயின்றி வெறிச்சோடிய அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தும் இயங்குவதால் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.


செ.திவாகரன்


 


வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது.


இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் கிடைத்தன.


 


கல்முனை அஷ்ரஃப் நினைவு வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை


நூருல் ஹுதா உமர் 


கல்முனை அஷ்ரஃப் நினைவு வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகையான இரத்தங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த அவசர நிலையை முன்னிட்டு, இரத்த தானம் செய்யத் தகுதியுடைய பொதுமக்கள் அனைவரும் உடனடியாக இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து தங்களின் இரத்த தானத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக தினமும் அதிக அளவில் இரத்தம் தேவைப்படுவதால், தற்போதைய தட்டுப்பாடு பல நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.


“உங்கள் ஒரு இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றும்” என்பதை நினைவில் கொண்டு, சமூகப் பொறுப்புடன் இந்த உன்னத பணியில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இது மனிதநேயத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதால், பொதுமக்கள் விரைவாகச் செயல்பட்டு உயிர்களை காக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


அமெரிக்கா,டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


ஜன்னல்கள் அதிர்ந்ததாகக் கூறப்பட்ட வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து, போர்ட் ஆர்தர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.


சம்பவத்தின் தன்மையை மதிப்பிடும் வரை மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 


தற்போதைய செய்தி:

துபாய் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஈரான் "மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை" ஏவியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரவு வானில் பத்துக்கும் மேற்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் பாய்ந்ததாக துபாயிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் அச்சுறுத்தலை இடைமறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன.

தொடர்பில் இருங்கள், @MOSSADil-ஐப் பின்தொடருங்கள்.



 டுபாய் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரை நிறுத்தம் 


 


மத்திய கிழக்கில் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் இரானும் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன


லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துகிறது. இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் வெடிப்புகள் காணப்படுகின்றன.


இஸ்ரேலில் இரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மற்றும் தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டபோது வானத்தில் வெடிப்புகள் காணப்பட்டன. பிராந்தியத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைனில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.


பஹ்ரைனில் சேதமடைந்த கட்டடம் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பஹ்ரைனில் சேதமடைந்த கட்டடம்

இதற்கிடையே இரான் பதிலடி தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ''இதுவரை 75 இரானிய ஏவுகணைகள் மற்றும் 123 டிரோன்களை அழித்துள்ளோம்'' என பஹ்ரைன் கூறுகிறது.


இரண்டு இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக அஜர்பைஜான் கூறுகிறது.


வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியதாக இரான் கூறுகிறது


லெபனானின் சேதத்தை காட்டும் புகைப்படம் பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,லெபனானின் சேதத்தை காட்டும் புகைப்படம்

இஸ்ரேலில் தாக்குதல்

வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி இரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது


'40 நிமிடங்களுக்கு என் இதயம் நின்றுவிட்டது' – இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய நபர்

இந்தியா - இங்கிலாந்து - டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியின் 2 பலவீனங்கள் என்ன?

இரான் கப்பல், இலங்கை

'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

'ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கி' கடனில் மூழ்கிய ஆற்காடு நவாப் முகமது அலி என்ன ஆனார்?

End of அதிகம் படிக்கப்பட்டது

இரண்டு மணி நேரத்தில் மூன்று தனித்தனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜெருசலேமில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் பாதுகாப்பு புகலிடங்களிலிருந்து வெளியேற ராணுவம் தற்போது அனுமதி அளித்துள்ளது.


முன்னதாக, இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் மற்றுமொரு தொடர் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


"இரான் ஆட்சிக்கு சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, தெஹ்ரான் முழுவதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை(ஐ.டி.எஃப்) கூடுதல் தாக்குதலை தொடங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தாக்குதல் நடத்தப்படும் குறிப்பிட்ட இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதையும் அது வழங்கவில்லை, ஆனால் கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.


புதன்கிழமை இரவு தலைநகரில் ஒரு சக்திவாய்ந்த வெடி சத்தத்தை தங்கள் செய்தியாளர்கள் உணர்ந்ததாக ஏ.எஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


டெஹ்ரானில் புகை எழும் காட்சி பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,டெஹ்ரானில் புகை எழும் காட்சி

இஸ்ரேல் தொடர்ந்து இரானின் பதிலடி தாக்குதல்களால் குறி வைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தெடர்பான முன்னேற்றங்களுக்கு உட்பட்டு வான்வெளியை ஓரளவு மீண்டும் திறக்க இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


நாட்டிற்குத் திரும்பும் குடிமக்களை ஏற்றி வந்த விமானம் ஒன்றும் டெல் அவிவ் வந்தடைந்துள்ளது.


முன்னதாக, தலைமை மையங்கள் மற்றும் உள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட கிழக்கு தெஹ்ரான் வளாகத்தின் மீது தனது விமானப்படை "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது.


இரான் 

மத்திய கிழக்கில் விமான சேவைகளின் நிலை என்ன?

பல நாட்கள் இடையூறுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கில் சில விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.


ஓமனிலிருந்து பிரிட்டிஷ் குடிமக்களை அழைத்து வருவதற்காக பிரிட்டன் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சார்ட்டர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை புறப்படவில்லை.


"அந்த விமானம் இன்று (மார்ச் 5) பிற்பகுதியில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கிலிருந்து மக்களை பத்திரமாக அழைத்து வந்தன.


மத்திய கிழக்கில் விமான சேவைகளின் நிலை என்ன?பட மூலாதாரம்,Reuters

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் ஏர்வேஸ் இப்போது குறைந்த அளவிலான விமான சேவைகளை இயக்கி வருகின்றன. அபுதாபியின் ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதன் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஓமனின் மஸ்கட்டிலிருந்து லண்டன், பெர்லின், கோபன்ஹேகன், மாட்ரிட், ரோம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நகரங்களுக்கு வியாழக்கிழமை நிவாரண விமானங்களை இயக்கப் போவதாக கத்தார் ஏர்வேஸ் இன்று காலை அறிவித்தது.


நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து செயல்படும் அந்த விமான நிறுவனத்தின் முக்கியச் சேவைகள், "கத்தார் வான்வெளி மூடப்பட்டிருப்பதன் காரணமாக" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இஸ்ரேலில், முதல் சுற்று மீட்பு விமானங்கள் டெல் அவிவில் தரையிறங்கியுள்ளன.


அஜர்பைஜானைத் தாக்கிய இரானிய டிரோன்கள்

அஜர்பைஜானைத் தாக்கிய இரானிய டிரோன்கள்

அஜர்பைஜானில் இரானிய டிரோன் தாக்குதலால் பொதுமக்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"ஒரு டிரோன் நக்ஷிவன் தன்னாட்சி குடியரசில் உள்ள விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தைத் தாக்கியது, மற்றொரு டிரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக் கட்டடத்திற்கு அருகில் விழுந்தது," என்று அமைச்சகம் கூறுகிறது.


இந்த டிரோன் தாக்குதல் விமான நிலையக் கட்டடத்தை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களில் இரண்டு பேரைக் காயப்படுத்தியது.


அஜர்பைஜானுக்கான இரானிய தூதர் இப்போது நேரில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு "இரானியத் தரப்பிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும், மேலும் அதற்கான எதிர்ப்பு தொடர்பான குறிப்பும் சமர்ப்பிக்கப்படும்."


இரானின் அச்சுறுத்தல்களால் 20,000 மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளனர் - ஐநா அமைப்பு தகவல்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற இரான் நாட்டின் அச்சுறுத்தல்களால், அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, உல்லாசக் கப்பல்களில் இருக்கும் மேலும் 15,000 பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்செனியோ டோமிங்குஸ் கூறியுள்ளார்.


உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கியமான பாதையாகும். சாதாரணச் சூழலில் உலகின் 20% எண்ணெய் விநியோகம் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அழிக்கப்பட்ட இரானிய போர் கப்பலின் கோப்புப் படம் பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அழிக்கப்பட்ட இரானிய போர் கப்பலின் கோப்புப் படம்

இதற்கிடையில் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் குவைத்தில் இரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது வீரரின் பெயரை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.


அயோவாவின் வௌகி பகுதியைச் சேர்ந்த மேஜர் ஜெஃப்ரி ஓ'பிரையன், 2012-ஆம் ஆண்டில் ராணுவ இருப்பில் சிக்னல் கார்ப்ஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவர் 2019-ஆம் ஆண்டில் குவைத்திற்குப் பணியமர்த்தப்பட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைத்தின் போர்ட் சுவைபாவில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தை, வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பித்து வந்த ஒரு "ட்ரோன்" தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலில் மூன்று வீரர்கள் இறந்ததாக அமெரிக்க மத்திய தலைமை முதலில் கூறியிருந்தது. ஆனால், காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மற்றும் இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர்.


அமெரிக்க அதிபரின் போர் அதிகாரங்களை குறைப்பதற்கான வாக்கெடுப்பு தோல்வி

வாக்கெடுப்பு தோல்விபட மூலாதாரம்,US Senate

அமெரிக்க செனட்டில் போர் அதிகாரங்கள் குறித்த வாக்கெடுப்பு 47-53 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சட்டமியற்றுபவர்கள் பெரும்பாலும் தங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு ஏற்பவே வாக்களித்தனர்.


இந்த மசோதா நிறைவேறியிருந்தால், போர் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் குறைந்திருக்கும்.


இந்த மசோதாவின்படி, போர் தொடர்பான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்னால், டிரம்ப் அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றம்) அனுமதியைப் பெற வேண்டியிருந்திருக்கும்.


இந்த மோதலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட இத்தகைய முதல் மசோதா இதுவாகும், ஆனால் இது டிரம்பைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது.


ஆனால், இரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) பேசப்போகும் கடைசி விஷயம் இதுவல்ல. ஏனெனில், அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.


நாளை இதே கேள்வி குறித்து பிரதிநிதிகள் சபை வாக்களிக்க உள்ளது. டிரம்ப் கணித்துள்ள ஒரு சில வாரங்களைத் தாண்டி போர் நீடித்தால், எதிர்காலத்தில் போர் அதிகாரத் தீர்மானத்தை ஆதரிக்கத் தாங்கள் அதிக விருப்பத்துடன் இருப்பதாக சில செனட் உறுப்பினர்கள் கேபிடல் ஹில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.


தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிப்பவர்களை வெளியேற்றும் கத்தார்

இதற்கிடையே, தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிக்கும் மக்களை கத்தார் வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


"தேவையான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செளதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துபையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இந்த வாரம் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், இப்பிராந்தியத்திலிருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்டாலோ, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக மத்திய கிழக்கை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்காக சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்ய அமெரிக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அத்துடன், மற்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் வணிக ரீதியிலான விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் உதவி வழங்கி வருகிறது.


பிரிட்டிஷ் குடிமக்களை ஓமனிலிருந்து திரும்ப அழைத்து வருவதற்காக பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சார்ட்டர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை புறப்படவில்லை என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இது குறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாடகை விமானம் திட்டமிட்டபடி நேற்று ஓமனிலிருந்து புறப்பட முடியவில்லை. அந்த விமானம் இன்று பிற்பகல் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.


லெபனான், இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்த மோதலின் பாதிப்பை அதிகளவில் உணர்கின்றன.


இரான் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 3 வரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.


பிப்ரவரி 28 முதல் சுமார் 17,500 குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய 20,000 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்புகின்றனர்

தாயகம் திரும்பும் இந்தியர்கள் பட மூலாதாரம்,Courtesy Yogi Oversea

படக்குறிப்பு,தாயகம் திரும்பும் இந்தியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்து கோவில்களைத் தரிசிப்பதற்காகச் சென்றிருந்த 200 இந்தியச் சுற்றுலாப் பயணிகள், போர் வெடித்ததால் அங்கு சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது அங்கிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர்.


இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த 'யோகி ஓவர்சீஸ்' நிறுவனத்தின் தலைவர், வான்வெளி இடையூறுகள் காரணமாக இந்தப் பெரிய குழுவினர் விமானங்களுக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.


"பயணிகள் யாரும் பீதியடையவோ அல்லது அசௌகரியமாகவோ உணரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே எங்களது முதல் முன்னுரிமையாக இருந்தது," என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கௌஷல் தமேஷா கூறினார். தமேஷாவும் மற்ற சில சுற்றுலா வழிகாட்டிகளும் துபையிலேயே தங்கியிருந்து, டஜன் கணக்கான பயணிகள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதி செய்தனர்.


இந்தக் குழுவில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததாக தமேஷா தெரிவித்தார். "எங்கள் டூர் மேனேஜர் பயணிகளுடன் நீண்ட நேரம் உரையாடினார், அவர்களுடன் விளையாடினார், மேலும் அவர்களை உற்சாகமாக வைத்திருந்தார்," என்று அவர் கூறினார்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியாவின் எந்தப் பகுதிக்காவது விமானம் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் கடைசி குழு இன்று அழைத்துச் செல்லப்பட்டது. அவர்கள் தற்போது தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.


பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள ஆல்பனீஸ் மற்றும் கார்னி

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், இரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்படும் வரை போர்நிறுத்தம் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆல்பனீஸ் பேசுகையில், "உலகம் அமைதியை விரும்புகிறது... இதில் சம்பந்தப்படாத வளைகுடா நாடுகளும், சுற்றுலாப் பகுதிகளும் கூடத் தாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்," என்றார்.


சனிக்கிழமை தொடங்கிய இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


'எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்' - இரானியர் ஆதங்கம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து இலக்காகி வரும் நிலையில், பிபிசி பெர்சியன் இரானியர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.


பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டதாகவும், தெருக்கள் மிகவும் நிசப்தமாக இருப்பதாகவும் சஜாத் கூறுகிறார். மக்கள் "கவலையிலும் மன அழுத்தத்திலும்" இருக்கும் அதே வேளையில், அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மரணம் தனக்கு "எதிர்காலத்தைப் பற்றிய அதிக நம்பிக்கையை" அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். "நிலைமை இந்த அளவுக்குச் செல்லும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை," என்று கூறும் அவர், மேற்கு நகரமான உருமியாவின் மீதான "இந்தத் தாக்குதல்களின் அளவு" உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு இரான் நாட்டை விட்டு வெளியேறி, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித்தவிக்கும் அமீர் கூறுகையில்: "போரினால் நல்லது எதுவும் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிறந்த நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்."


தெஹ்ரான் மீதான மற்றொரு தாக்குதலைப் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் தான் "நடுங்குவதாக" அவர் கூறுகிறார், ஏனெனில் அவரது குடும்பத்தினர் அங்கேயே உள்ளனர்: "எனது அன்புக்குரியவர்களுக்கு இது நடக்கிறது என்பதை இங்கே இருந்து தெரிந்துகொள்வதை விட, நானே அந்த குண்டுவீச்சின் கீழ் இருப்பதை விரும்புவேன். எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்."


"தெஹ்ரான் மிகவும் வெறிச்சோடிக் காணப்படுகிறது," என்கிறார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். "அவசரத் தேவை இருந்தாலொழிய எவரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை, இல்லையெனில் அவர்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள்."


மேற்படிப்புக்காக ஐரோப்பாவுக்குப் பயணம் செய்ய நேற்று ஒரு விமான டிக்கெட் வைத்திருந்ததாகவும், ஆனால் "இப்போது எனது திட்டங்கள் அனைத்தும் அந்தரத்தில் தொங்குகின்றன, இது எனக்குச் சற்று வருத்தத்தை அளிக்கிறது" என்றும் அவர் கூறுகிறார்.


"முதல் நாளில், மக்கள் கோஷமிட்டனர் மற்றும் அனைவரும் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் இப்போது சுற்றிலும் போலீஸ் படைகள் உள்ளனர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பேக்கரிகள் மட்டும் திறந்துள்ளன, இருப்பினும் சில ஏடிஎம்கள் (ATMs) வேலை செய்யவில்லை."



 கல்முனை எரிபொருள் நிலையத்தில, இன்று பிற்பகல் 3:30 அளவில் எரிபொருளை நிரப்புவதற்காக நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்


 சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இன்று (03) அதிகாலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.


ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சவூதி பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்திற்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.


அங்கிருந்தவர்கள் இரண்டு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 


கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களும் இன்று (02) இரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

 


(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)


இரானின் அதிஉயர் ஆயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து தற்போது காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.


காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.


இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.


அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை.


தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது.


முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். காமனெயியின் "தியாகம்" "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்" தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - என்ன நடந்தது?

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

இரான் தலைவர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் குறி - பதிலடியாக, இரான் என்ன செய்கிறது? நேரலை

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, கொடவா திருமணம்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?

End of அதிகம் படிக்கப்பட்டது

சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது.


புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, "டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது.


"வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



டிரம்ப் கூறியது என்ன?

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என பதிவிட்டுள்ளார்.


"அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது."


"இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், 'அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'"


"ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது."


"இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்."


இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.


எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது.


காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்பட மூலாதாரம்,Reuters

'இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு'

பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.


இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை.


இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 வ.சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனமே தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்து மின் கம்பத்தில் மோதுண்டு வித்துள்குள்ளாகியுள்ளது.


வட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி இதன்போது எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் பிளைத்துள்ளார். எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. 


இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின்படி, 

 இதற்காக பிரதமர் ஹரிணி அமர சூரிய 515 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.


வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக  வளாகத்தில் கல்வி கற்கும் அனைத்து வெளிப்பிரதேச மாணவர்களுக்கும் தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவு போதுமான விடுதி வசதிகள் இன்மையால்,  மாணவர்கள் அருகில் உள்ள தனியார் தங்கும் இடங்களை பணம் கொடுத்து பெற்று மிகுந்த சிரமங்களை அனுபவித்தவர்களாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் . இது நீண்ட கால பிரச்சினையாக இருந்தது.

மாணவர்களின் இந்த அவல நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு ,   பிரதமரும்,  கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் கவனத்திக்கு கொண்டு சென்று விடுதி ஒன்று அமைப்பதன் அவசியம் குறித்து வேண்டிக்கொண்டு முயற்சிகளை முன்னெடுத்தார்.

அதன் பலனாக தற்போது சுமார் 515 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் ஒவ்வொரு அறைகளும் தலா 2 மாணவர்கள் தங்கி இருக்கத்தக்கதாக மொத்தமாக 200 அறைகளை கொண்டு அமைய உள்ளதுடன்  400 மாணவர்கள் இதனூடாக நேரடி பயனடையும் வகையில் குறித்த விடுதி கட்டடம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும்,  தூரப்பிரதேச மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக இது அமையும் என்றும் இதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை கிழக்கு பல்கலைக்கழக நிருவாகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.