Showing posts with label Sri லங்கா. Show all posts

 


தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று (14) உடன்பாட்டை எட்டியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.


எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிகாரத்தை நிறுவும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் நாளை (15) கூட உள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். 


தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, முன்னாள் எம்.பி., வீரகுமார திசாநாயக்க தென்னகோன், பிரேமநாத் சி.தொலவத்த, நிமல் லான்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, தேசிய அமைப்பாளர் சாகல. ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜெயவீர தொலைபேசி ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திசைகாட்டியை எதிர்க்கும் அனைத்துக் குழுக்களுடனும் கலந்துரையாடி அதிகாரத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


 


எந்தவொரு கட்சியும் 50 வீதமான பெரும்பான்மையை பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் முதல் கூட்டத்தை நடத்துதல் மற்றும் தலைவர் தெரிவு தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கான வழிகாட்டல்கள் அடங்கிய கோவை வௌியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

9 மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சி ஆணையாளர்களும் குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் பிரகாரம் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை 7 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டிய முறைமை தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டும் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார ரீதியாக வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயருடன் கூடிய வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

 


கண்டியில் வெசாக் #Vesak யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 



நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் (HPV) தடுப்பூசியும், தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வளர்ந்தோருக்கான ஏற்புத்தடை (aTd) தடுப்பூசியும் ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.

இதேவேளை அப் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 1,4,7 தரம் 10 வரையான மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் பாடசாலை பற் சிகிச்சையாளரினால் சுகாதார கழக அங்கத்தவர்களுக்கு வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை பற் சிகிச்சையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 




ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது!
கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்
(வி.ரி.சகாதேவராஜா)

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகமாகும். ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது. அந்த வகையில் கல்முனை நெற் இணையத்தளமானது சமூகப் பொறுப்புடன் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு கல்முனை நெற்  ஊடகத்தின் பத்தாவது ஆண்டு துவக்க விழாவில் அதிதியாகக்கலந்து கொண்டுரையாற்றிய கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன்  தெரிவித்தார்.

கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி விழா நேற்று  (10)  சனிக்கிழமை  அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவைத்தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் தம்பலவத்தை தென்னந்தோப்பில் நடைபெற்றது.

ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன்,  கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே. அதிசயராஜ்,
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், 
தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.குணபாலன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக இயக்குனர் சபைக் கூட்டம் ஓய்வு நிலை அதிபர் கே.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உலகறிந்த எழுத்தாளர் தமிழ்மணி உமாவயதராஜன் ,தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதமஆசிரியர் க.குணராசா ஆகியோர்  எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தனர்.

கல்முனை நெற் ஊடகவலையமைப்பின் ஸ்தாபக பணிப்பாளர் ஊடகவியலாளர் புவிநேசராசா கேதீஸ்ஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் 
டாக்டர் சுகுணன் மேலும் பேசுகையில்..

கல்முனை நெற் பத்து வருட வரலாற்றில் ஊடக தர்மம் மாறாது சமூக பொறுப்புடன் இயங்கி வருகிறது.

 இடையில் ஊடகமையம் உதயமானது. அது ஊடகத்துறை பரிணாமவளர்ச்சியில் முக்கிய மைல்கல் எனலாம். ஊடகசுதந்திரம் நிலவுகின்ற அதேவேளை ஊடகதர்மமும் கடைப்பிடிக்கப்படவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சரியான தகவல்கள் பாரபட்சமின்றிச் செல்லும்.
ஊடகங்களுக்கு நக்கீரப்பார்வை வேண்டும்.கழுகுப்பார்வையும் வேண்டும். உண்மையை உலகுக்குக்கொண்டுவருவதில் ஊடகங்களுக்கு தனிப்பங்குண்டு.

கல்முனை வரலாற்றில் கல்முனைநெற் ஊடகத்திற்கென தனித்துவத்துடன்கூடிய தனிச்சிறப்புண்டு. மறைந்துகிடக்கின்ற சமுகம்சார் பல அநீதிகளை பாரபட்சஅம்சங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது. அந்தவகையில் அதன் ஸ்தாபகர் கேதீஸ் மற்றும் உறுதுணையாயிருக்கின்ற சிரேஸ்டஊடகவியலாளர் ஜனாதிபதி ஊடகவிருதுபெற்ற சகா மற்றும் உமா வரதராஜன் குணராசா போன்ற ஊடகவியாளர்கள் மற்றும் நிருவாகக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
கல்முனைநெற் செய்திகளுக்கு அப்பால் சமுகசேவைகள் பலவற்றையும் செய்துகொண்டிருக்கிறது. 

பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் பேசுகையில்..
.நாம் அன்று செய்திகளைப்பெற்ற முறைவேறு. இன்று தொழினுட்பம் நவீனமயப்படுத்தப்பட்டுவிட்டது.
வடக்கில் பிராந்திய பத்திரிகைகளுக்கு உள்ள மௌசு தனிரகம். ஆனால் துரதிஸ்டவசமாக கிழக்கில் இன்று பிராந்திய பத்திரிகை இல்லை. ஊடகங்கள் வளர்ந்தஅளவிற்கு ஊடகவியலாளர்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை.  ஊடகவியாளர்களிடையே ஒற்றுமை அவசியம். பிரிந்துநின்று  எதனையும் சாதிக்கமுடியாது.  எமது கல்முனை வைத்திய சாலை வரலாற்றில் கல்முனை நெற்றின் பங்களிப்பு ஒத்துழைப்பு அபரிமிதமானது.
நன்றிகள் என்றார்.

கல்முனை வடக்கு பிரதேசசெயாளர் அதிசயராஜ் பேசுகையில்:
காலத்தின் அவசியதேவை கருதி  கல்முனைநெற்  ஊடகமையத்தையும் திறந்து மேலும் பரிமாணம் பத்திரிகையும் வெளியிட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்படும் எனநம்பலாம்.இதுமேம் வளர வாழ்த்துக்கள் என்றார்.

பணிப்பாளர் ச.நவநீதன் பேசுகையில்:
உலகம் அவ்வப்போது இற்றைப்படுத்திக்கொண்டிருக்கிறது. தகவல்தொழினுட்பமும் அப்படியே. எனவே நாமும் அதற்கேற்ப மாறி ஒத்திசைந்துபோகவேண்டிய பொறுப்புள்ளது.
என்றார்.

விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அனுசரணையாளர் வி.விஜயராஜா( சுவிஸ்) மற்றும் ஊடகவியலாளர் என்.சௌவியதாசன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

 


பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களில் இரு தரப்பும் டிரோன்களைப் பயன்படுத்தின. இது தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான முதல் டிரோன் போராக பார்க்கப்பட்டது.


தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பதால் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.


நேற்று (மே 10) இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர், 'ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாகக்' கூறினார்.


அதேபோல, பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்த மோதலில், டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது பேசுபொருளாக மாறியது. இதற்கு முந்தைய மோதல்களைப் போல அல்லாமல், டிரோன்களின் பயன்பாடு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றே கூறலாம்.


டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து இவ்வாறு கூறுகிறார்: "இது தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய புதிய முறை ஆகும், ஆளில்லாமல் இயக்கப்படும் டிரோன்கள் இருக்கும்போது, போர் விமானத்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை. டிரோனில் விமானி இருக்கமாட்டார் என்பதால் தாக்குதல் நடத்தும் தரப்புக்கு உயிர் சேதம் ஏற்படாது."


டிரோன், இந்தியா - பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,யுக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யா ஸிர்கான்-2 என்ற தற்கொலை டிரோனைப் பயன்படுத்தியுள்ளது

மோதலில் முக்கிய பங்கு வகித்த டிரோன்கள்

டிரோன் என்பது பறக்கக்கூடிய ஒரு வகை ரோபோ ஆகும், இதை மென்பொருள் அமைப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும். விமானத் திட்டம், விமானப் பாதை போன்றவற்றை டிரோனின் மென்பொருளில் முன்கூட்டியே திட்டமிட்டு தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்.


டிரோன்கள் ஆன்போர்டு சென்சார்கள் மற்றும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) உடன் இணைந்து செயல்படுகின்றன. இவை தானாக இயங்கக்கூடியவை.


இம்பீரியல் போர் அருங்காட்சியக வலைத்தளத்தின்படி, இது முன்னர் ரிமோட்லி பைலட்டட் வெஹிக்கிள் (Remotely Piloted Vehicle (RPV)) என்று அழைக்கப்பட்டது. முதல் உலகப் போரின் போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தால் உருவாக்கப்பட்ட டிரோன் 1917-1918 இல் சோதிக்கப்பட்டது. இவை முன்பு ரேடியோ அலைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.


"தற்போது தயாரிக்கப்படும் டிரோன்கள் மிகவும் மேம்பட்டவை. தொலைவிலிருந்தே இலக்கைக் கண்டறிந்து அதை குறிவைத்து தாக்க முடியும். டிரோன்கள் விபத்துக்குள்ளானாலும், போர் விமானத்தை விட பொருளாதார இழப்பு குறைவாகவே இருக்கும்" என்று பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து கூறுகிறார்.


9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா இதை ஆப்கானிஸ்தானில் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளது. அண்மையில் இது ரஷ்யா-யுக்ரேன் போரில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.


2025 மே 9 நாளன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெரான்-2 ஒரு காமிகேஸ் அல்லது தற்கொலை டிரோன் ஆகும். யுக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பை அழிக்க ரஷ்யாவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.


சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டிரோனை ரஷ்யா காட்சிப்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


டிரோன், இந்தியா - பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்கை ஸ்ட்ரைக்கர் டிரோன் எதிரி எல்லைக்குள் நுழைந்து, அந்நாட்டின் ரேடாரின் கண்களில் அகப்படாமலே தாக்க முடியும்

இந்தியாவிடம் உள்ள டிரோன்கள்

இந்தியாவில் பல வகையான டிரோன்கள் உள்ளன. பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு, இஸ்ரேலுடன் பல டிரோன் ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது.


இருப்பினும், பாதுகாப்பு நிபுணர் பிரிகேடியர் ஷர்தேந்து கூறுகையில், "பாகிஸ்தானிடம் உள்ள டிரோன்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவிடம் மூன்று மடங்கு அதிக டிரோன்கள் உள்ளன, இதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக வலிமை உள்ளது. இவற்றில் ஹாரோப், ஹிரோன் மார்க்-2, ஸ்கை-ஸ்ட்ரைக்கர் போன்ற டிரோன்கள் அடங்கும் "


இந்தியாவிடம் ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன் உள்ளது. இவை இந்தியா - இஸ்ரேல் கூட்டு முயற்சியில் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டவை.


"இந்தியாவிடம் பல்வேறு வகையான டிரோன்கள் உள்ளன" என்று புது டெல்லியை தளமாகக் கொண்ட விமான சக்தி ஆய்வு மையத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வுபெற்ற குழு கேப்டன் டாக்டர் தினேஷ் குமார் பாண்டே கூறுகிறார். நிலைமைக்கு ஏற்றாற்போல, எந்த டிரோனைப் பயன்படுத்துவது என ராணுவம் தான் முடிவு செய்யும் என்று அவர் கூறுகிறார்.


"தற்போது இந்தியா பல நாடுகளுக்கு டிரோன்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பல நாடுகள் இந்தியாவிடமிருந்து டிரோன்களை வாங்குகின்றன" என்று அவர் கூறுகிறார்.


2021ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 100 ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன்களை வாங்கியது, சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஸ்கை-ஸ்ட்ரைக்கர் டிரோன்கள் 10 கிலோ வரையிலான போர்க் கருவிகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.


டிரோன், இந்தியா - பாகிஸ்தான்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குறைந்த அளவில் ஓசை எழுப்பும் தன்மை கொண்டிருப்பதால், இவை குறைந்த உயரத்தில் கூட பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.


"இவை அமைதியானவை, கண்ணுக்குத் தெரியாதவை மற்றும் திடீரென்று தாக்குபவை" என்று, இதை உருவாக்கும் நிறுவனம் கூறுகிறது.


ஹாரோப் டிரோனின் பறக்கும் வரம்பு மிக அதிகம். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோன், சுமார் 9 மணி நேரம் காற்றில் பறக்கக்கூடியது என்பதுடன் 1000 கிலோமீட்டர் வரை செல்லக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியா தனக்கு எதிராக ஹாரோப்பை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஹாரோப் என்பது ஒரு ரேடார் எதிர்ப்பு தொழில்நுட்பமாகும். அதன் கேமராக்கள் பெரிய ராணுவ இயந்திரங்களை அடையாளம் காண உதவுகின்றன. துல்லியமான சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தும் திறனும் இதற்கு உண்டு.


23 கிலோ எடையுள்ள போர்க்கருவிகள் அல்லது குண்டுகளை சுமந்து செல்ல முடியும். கடலில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமும் ஹாரோப் டிரோனைப் பயன்படுத்தலாம்.


இதைத் தவிர, 3000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய ஹெரான் மார்க்-2 டிரோனும் இந்தியாவிடம் உள்ளது. 2023 இல் வாங்கப்பட்ட இது, 24 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது.


அவற்றின் உள்ளே ரேடார் ஐஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் லேசர் உதவியுடன் இலக்கை துல்லியமாக சென்றடைபவை. இவற்றை தரவு இணைப்பு வழியாக தரையில் இருந்து கட்டுப்படுத்தலாம்.


ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே கூறுகையில், "எந்த டிரோன் எவ்வளவு சுமையை சுமந்து செல்லும் என்பது அதன் இயந்திரத் திறனைப் பொறுத்தது. டிரோனில் சுமையை அதிகரித்தால் அதன் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறையும்." என்றார்.


பாகிஸ்தானிடம் உள்ள டிரோன்கள்

டிரோன், இந்தியா - பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பாகிஸ்தான் தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஷாபர்

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலில், துருக்கியில் தயாரிக்கப்பட்ட டிரோனை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது. பாகிஸ்தானிடம் திரள் டிரோன்கள் (Swarm drones) உள்ளன.


திரள் டிரோன்களைப் பற்றி கூறும் ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே, "அவை குழுக்களாக நகரும், அவற்றைக் தாக்குவது எளிதல்ல, தாக்கப்பட்டாலும் அவற்றில் பல தப்பிவிடும்" என்று கூறுகிறார்.


"அவை சிறிய பல தொகுதிகளாக அனுப்பப்படுகின்றன, அவை வான் பரப்பை அடைந்த பிறகு ஒன்று சேரும்," என்று அவர் கூறினார். ஒரு இலக்கை குறிவைத்து செல்லும் அவை, பாதுகாப்பாக இயங்குபவை" என்று அவர் கூறுகிறார்.


பாகிஸ்தானிடம் ஷாபர்-2 டிரோன்களும் உள்ளன, அவை 23000 அடி வரை பறக்கும் திறன் கொண்டவை. அரபு நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, ஷாபர்-3 பாகிஸ்தானால் நவம்பர் 2024 இல் சோதிக்கப்பட்டது. இந்த டிரோன் தோராயமாக 35000 அடி உயரத்தை எட்டும்.


இது 500 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டேவின் கருத்துப்படி, "பாகிஸ்தானின் சொந்த தயாரிப்பான புராக் டிரோன்கள் தவிர மீதமுள்ளவை வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டவை."


இது தவிர, பாகிஸ்தானிடம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பைரக்டர் அகின்சி டிரோனும் உள்ளது. இது வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோனில் ரேடார் வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.


"அகின்சி டிரோன், மிகவும் மேம்பட்ட வகையாக இருந்தாலும், அது எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, ஏனெனில் அவற்றில் பல இன்னும் தயாரிக்கப்படவில்லை என்பதால் குறிப்பாக சொல்ல முடியாது" என்று ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் தினேஷ் குமார் பாண்டே கூறுகிறார்.


இரு நாட்டு டிரோன்களின் வலிமை

டிரோன், இந்தியா - பாகிஸ்தான்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, நடுத்தர உயரம் கொண்ட, நீண்ட தூர டிரோனான ருஸ்டமை உருவாக்கியுள்ளது.

Techie.com வலைத்தளத்தின்படி, இந்தியாவிடம் நடுத்தர உயரத்தில் பறக்கக் கூடிய 200 டிரோன்களும் (MALE), 980 மினி டிரோன்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் நடுத்தர உயரத்தில் பறக்கும் 60 டிரோன்களும், 60 கடற்படை டிரோன்களும், 70 விமானப்படை டிரோன்களும் மற்றும் 100 ராணுவ டிரோன்களும் உள்ளன. இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்தியாவிடம் ஹார்பி, ஹாரோப், எம்க்யூ 9 ரீப்பர் மற்றும் ருஸ்டம்-2 ஆகிய டிரோன்கள் உள்ளன.


ஹார்பி என்பது இஸ்ரேலிய தயாரிப்பு டிரோன் ஆகும். இது 9 மணி நேரம் பறக்கும். இதன் வரம்பு 500 கிலோமீட்டர் வரை இருக்கும். ஹார்பி 32 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் 4 மில்லியன் டாலர்கள் ஆகும்.


ஹாரோப் இஸ்ரேலிலும் தயாரிக்கப்படுகிறது. இது 9 மணி நேரம் பறக்கக்கூடியது, ஆனால் அதன் வரம்பு சுமார் 1000 கி.மீ. இது 23 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.


MQ-9 ரீப்பர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது, 1700 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த டிரோனை இராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.


27 மணி நேரம் வானில் பறக்கக்கூடிய திறன்கொண்ட இந்த டிரோன் 1850 கிலோமீட்டர் வரை செல்லும். ஒரு டிரோனின் விலை 32 மில்லியன் டாலர்கள் ஆகும்.


ருஸ்டம்-2 இந்தியாவின் டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்டது. இதன் வரம்பு 200 கிலோமீட்டர் வரை இருக்கும். இது 350 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் விலை, டிரோன் ஒன்றுக்கு 50 முதல் 60 லட்சம் டாலர்கள் வரை இருக்கும். இது தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.


Techie.com வலைத்தளத்தின்படி, பாகிஸ்தானிடம் துருக்கியில் தயாரிக்கப்படும் பைரக்டர் அகின்சி (Bayraktar Akinci) உள்ளது. இதன் நீளம் 12.2 மீட்டர். இது 1500 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது, 40,000 அடி உயரத்தை எட்டக்கூடியது.


பைரக்டர் டிபி-2, துருக்கியில் தயாரிக்கப்படுகிறது. இது 18000 அடி உயரம் வரை செல்லக்கூடிய இந்த டிரோனால் 27 மணி நேரம் வரை இயங்க முடியும். இது 150 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.


இதுதவிர சீனாவில் தயாரிக்கப்பட்ட CH-4 டிரோன்களும் பாகிஸ்தானிடம் உள்ளன. இது 3000-5000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இது 345 கிலோ வரை எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.


மொனராகலையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 680 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜனவரி 2023 இல் கைது செய்யப்பட்ட எஸ்எஸ்பி சிசிர குமார ஹேரத் இன்று சேவையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்

 


இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்: Reuters செய்தி வெளியிட்டுள்ளது.


 

இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.


நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், "ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன," என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


மே 8 இரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.


விளம்பரம்


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

படக்குறிப்பு,ஜம்மு முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.


அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார்.


மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


"ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.


"ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன."


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,ANI

நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.


"ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்."


இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.


இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்பட மூலாதாரம்,Getty Images

மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள்

பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.


அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


 இதோ, நீதிமன்றத்தில் அவரது தொலைபேசி ஒலித்தது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தடுப்புக் காவலில் இறந்தார். ஆனால் கேள்வி என்னவென்றால் - இது யாருக்கும் தற்செயலாக நடக்கலாம். இது வழக்கறிஞர்களுக்கு தினமும் நடக்கும். இது ஒரு தீவிரமான பிரச்சினை. நீதித்துறை சேவைகள் ஆணையத்துடன் விவாதித்து, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இந்த முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். - நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா #இலங்கை #பாராளுமன்றம் #கொழும்பு #SLnews


 பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது.

இதில், எல்லை கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகில் இருக்கும் சலமாபாத் கிராமம் பாதிக்கப்பட்டது. இங்குள்ள வீடுகள் தீக்கிரையாகின. குண்டுவீச்சு தாக்குதலால் அச்சமடைந்த மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதன்கிழமை இரவு முதல் 25 இந்திய டிரோன்களை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.

முன்னதாக, 12 இந்திய டிரோன்களை அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

அதே சமயம், 'புதன்கிழமை இரவு, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பல இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றதாக' இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

முன்னாள் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினரும்  நீண்ட காலம் சவூதி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் உயர் பதவி வகித்தவருமான ஐஎல்எம்.மாஹிர்  தவிசாளராக தெரிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குள்ள வட்டாரங்கள் 10 .ஆனால் வீரமுனை வட்டாரம் மூன்று அங்கத்தவர்ளைக் கொண்டது . அதன் காரணமாக வட்டார ரீதியாக 12 பேர் தெரிவாகினர். போனஸ் 08 ஆசனங்கள். மொத்தமாக 20 ஆசனங்கள். ஆனால் இம்முறை தேர்தல் முடிவுகளின்படி 03 தொங்கு ஆசனங்களும்  கிடைத்துள்ளது.
ஆதலால் சம்மாந்துறை பிரதேச சபைக்கு வரலாற்றில் இம் முறை 23 உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 12676 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் 

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8124 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3990 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி - 2540 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

இலங்கை தமிழ் அரசு கட்சி - 2036 வாக்குகள் - 1 உறுப்பினர் 

தேசிய காங்கிரஸ் - 1393 - 1 உறுப்பினர்

இங்கு மூன்று தொங்கு உறுப்பினர்களும்(hanging members) தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


கொழும்பு மாநகர சபையில் (சிஎம்சி) 13 கவுன்சிலர்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி (ஐஎன்பி), அடுத்த கவுன்சில் நிர்வாகத்தை அமைப்பதிலும் மேயரை நியமிப்பதிலும் சமகி ஜன பலவேகயவை (எஸ்ஜேபி) ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

"எஸ்ஜேபியை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்," என்று ஐஎன்பி துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன கூறினார், இந்த ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்கள் விரைவில் நடைபெறும் என்று கூறினார்.
* ஐக்கிய குடியரசு முன்னணி – 1 இடம் * சுயேச்சைக் குழு 01 – 1 இடம் * சுயேச்சைக் குழு 02 – 1 இடம்

 


உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தான் அறிவுறுத்தியபடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என்று கூறினார்.


குறிப்பாக கொழும்புக்கு இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்றார்.


 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது ,


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன. நாம் திருப்தி அடையலாம். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.


நான் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விஷயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன. தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.


யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும்போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர். யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்று இப்போது தெரிகிறது. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.  என்றார்.



2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 

எவ்வாறாயினும், அக்கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை 126 சபைகளில் மாத்திரமே கிடைத்துள்ளது. ஏனைய சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் உதவியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய மக்கள் சக்தி காணப்படுகிறது. 

அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயாதீன கட்சிகளிடமும் ஏனைய சபைகளுக்கான ஆட்சி அதிகாரம் பிரிந்துச் சென்றுள்ளது. 

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை விடவும் அதிகளவான உறுப்பினர்களை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 


பொது உதவி🚨

சீதுவாவில் 2 பேர் கொல்லப்பட்டு 1 பேர் காயமடைந்ததில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.


ஏதேனும் தகவல் உள்ளதா? சீதுவா காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்

📞071 8591637

📞011 2253522


#SriLanka #Seeduwa #LKA


@SL_PoliceMedia

சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டது

 


இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம், இலங்கையர்கள் உட்பட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் என்று கூறுகிறது, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் தங்கி புகலிடம் கோருவார்கள், ஏனெனில் அவர்கள் அமைப்பை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் தொழிலாளர் கட்சியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். - தி டைம்ஸ் யுகே

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.