அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை கல்முனை பொலிஸார் சவளக்கடை பொலிஸார் தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.
இடையே வீதி மூடப்பட்டு பொலிஸார் இராணுவம் பாதுகாப்பு கடமையில் இன்றும் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது.மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது. அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று முதல் ஆரம்பித்த பலத்த மழை இன்று (25) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது. ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மரமொன்றும் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவி;ற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான பனங்காட்டு பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாசவின் பணிப்பின் பேரில் வெள்ளத்தை வடிந்தோடச் செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இணைந்தார்.
இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை அவர் கரம்பிடித்தார்.
திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அரசாங்கத்தின் காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கும் துரித வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களும் காணி உத்தரவு பத்திரங்களை பெற்று வருகின்றனர். இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7இன் கீழ் 4 பிரிவு மக்களுக்கான காணி உத்தரவுப்பத்திரங்கள் நேற்று (21)வழங்கி வைக்கப்பட்டன. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தரவுப்பத்திரங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் காணி உத்தியோகத்தர் லோஜினி உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். மிக நீண்டகாலமாக பலர் காணி உத்தரவுப்பத்திரங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் காணி உத்தரவு பத்;திரங்கள் என்பது மக்களின் பெரும் கனவாக இருப்பதுடன் மிக முக்கிய தேவைப்பாடாகவும் அமைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் இங்கு தெரிவித்தார். இவர்களுக்கான காணி உத்தரவு பத்திரங்களை வழங்குவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அரசின் இந்த வேலைத்திட்டத்தை மிகச்சிறப்பாக முன்னெடுத்துவரும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டுகின்றேன் எனவும் கூறினார்.
*மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு*
தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 21.11.2025ஆந் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி TJ பிரபாகரன் ஐயா தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர், சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்.
தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன. எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி தெரிவித்தார்.
சற்றுமுன் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
திருமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பாதுகாப்பு சரியானதுடன் அது மீண்டும் வைக்கப்பட்டது.
அந்த காணியில் அமைந்த உணவகம் சட்டவிரோதம் என்று கூறி நீதிமன்ற வழக்கு உள்ளது. சமய ஸ்தலம் என்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
இதனை இனவாதமாக்க இடமளிக்கமட்டேன். இந்த நாட்டில் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். யாரும் இனவாத தீயை மூட்ட விட மாட்டோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமாக செய்வதற்கு எதுவுமில்லை. நேர்மறை எண்ணங்களை நாம் வளரவிடுவதுமில்லை. பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பான முழுமையான அறிக்கை கோரியுள்ளேன்.
நீதிமன்ற வழக்கு உள்ளது. பின்னர் ஏன் ஆடுகின்றீர்கள்? இனவாதிகள் தான் இதை பெரிதாக காட்டுகின்றார்கள். சின்னவயது ஹனுமான் ஓடிஆடி தீயை பரப்பியது போல் தான் இங்கும் நடக்கின்றது. இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது, அந்த விளையாட்டு முடிந்துவிட்டது. என்றார்.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இரண்டு சமூகங்களுக்கிடையில் பல ஆண்டுகளாகத் தழைத்தோங்கும் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவை மேலும் வலுப்பெற வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தைப் பதிவு செய்தனர்.
மேலும், இவ்வாரம் இடம்பெறவிருக்கும் 204வது கொடியேற்ற விழா அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு இரு சமூகங்களினதும் பங்களிப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விழாக் காலங்களில் போக்குவரத்து, ஒழுங்கு, பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இரு சமுதாயங்களின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இச்சந்திப்பில் கடந்த வருட கொடியேற்று விழாவிற்கு ஆலய பரிபாலன சபையினர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டதும், கந்தூரி அன்னதானத்தினை தமிழ் சகோதரர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கிய விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்கள் பெரிதும் சிலாகித்து பேசியிருந்தனர்.
எதிர்காலத்திலும் இத்தகைய சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம், கல்முனை பிராந்தியத்தின் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இரு தரப்பும் மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது இச்சந்திப்பின் சிறப்பம்சமாகும்.
இந்த சந்திப்பானது, பிராந்தியம் எதிர்நோக்கும் இதர சவால்களைக் கூட இரு தரப்பு சமூகங்களும் ஒன்றாக அமர்ந்து பேசி, நிரந்தர தீர்வுகள் காணக்கூடிய புதிய நம்பிக்கைகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தியின் அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.
நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.
இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலினுடையது எனத் தெரிகிறது.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் சவுக்கடி கடல் பகுதியில் சம்பவித்துள்ளது.
காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரு படகுகளே இவ்விதம் விபத்துக்குள்ளானது.
இதன்போது இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் தெய்வாதீனமாக பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளளனர்.
எனினும் அவர்களில் ஒருவருக்கு காலில் பலத்த வலி மற்றும் காயம் ஏற்பட்டிருந்தது
அவர்கள் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் மீட்கப்பட்டதோடு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்துக்குள்ளாகிய படகுகளை மீட்க உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்ட போதிலும், பலத்த அலை நீரோட்டம் கொந்தளிப்பு காரணமாக அவை கரைதட்டின.
இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையிலையே அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்தது.
அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரை தட்டியது.
குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் போலீசாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே இடத்திற்கு வருகை தந்திருந்த போலீசார் விடயத்தை கேட்டறிந்தனர்.
விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
தமிழ் முற்போக்கு கூட்டணி இதற்கு ஆதரவாக வாக்களித்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் காரணமாக இந்த ஆதரவு வழங்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் உபதலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மார் சபையில் அறிவித்தனர்.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெற்ற பின்னர், வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், "இந்த உத்தரவு இருந்தபோதிலும், ஒரு வீரரோ அணியின் உறுப்பினரோ இலங்கைக்குத் திரும்ப தீர்மானித்தால், சுற்றுப்பயணம் தடையின்றி நடைபெறுவதற்காக, இலங்கை கிரிக்கெட் வாரியம் உடனடியாக மாற்று வீரர்களை அனுப்பும்" என்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஒரு வீரரோ, வீரர் குழுவோ அல்லது துணை ஊழியர்களோ இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
டெல்லி கார் வெடிப்புச் சம்பவம், உலக நாடுகள் அறிக்கை, டெல்லி
செங்கோட்டை அருகே வெடிப்பு: இஸ்ரேல், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் கூறியது என்ன?
முடிவுக்கு வந்த அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கம்
முடிவுக்கு வந்த அமெரிக்க அரசு முடக்கம் - டிரம்புக்கு ஆறுதல் கிடைத்தாலும் சவால் தொடருமா?
பாடகி சுசிலா, பி.சுசிலா
''நெஞ்சம் மறப்பதில்லை... '' : பி.சுசீலாவின் பிரபலமான 15 பாடல்கள்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் நிரம்பாதது ஏன்?
காலியாக இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ கல்வியிடங்கள் - ஆர்வம் குறைகிறதா?
End of அதிகம் படிக்கப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன கூறியது?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, போட்டிகள் தொடரும் என்றும், போட்டி நடைபெறவிருந்த தேதிகளில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அட்டவணையில் சில மாற்றங்களுடன் தொடர் தொடரும் என்று தெரிவித்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது, ஆனால் இப்போது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டி நவம்பர் 15 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 16 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
முதல் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது, அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த தொடருக்காக இலங்கை 16 வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியுள்ளது. நம்பகமான வட்டாரங்களின் தகவல்படி, குறைந்தது எட்டு வீரர்கள் கொழும்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டர் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக உள்ள மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கையின் முடிவை வரவேற்கும் பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
"இது உண்மையான விளையாட்டுத்திறன் மற்றும் பரஸ்பர ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மொஹ்சின் நக்வியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தப் போட்டிகள் முதலில் நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தன.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் வரவேற்றுள்ளனர். "ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்" என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 'ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "கிரிக்கெட்டுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கை அணிக்கு நன்றி" என்று பதிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி, "பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பின் அடையாளமாக கிரிக்கெட்டைப் பயன்படுத்துவது இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு" என்று தனது பதிவில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஷீத் லத்தீஃப், தனது நீண்ட பதிவில், இலங்கையில் மிகவும் மோசமான பாதுகாப்பு சூழல் இருந்தபோதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடிய காலத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டிருந்தார்.
"நாங்கள் 1994 ஆம் ஆண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சென்றபோது, இலங்கையில் சூழல் சரியாக இல்லை. தமிழ்ப் புலிகளுடன் பல மோதல்கள் நடந்தன. கொழும்பில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, ஒரு குண்டுவெடிப்பு நடந்தது, நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. மோசமான சூழல் நிலவியபோதும், பாகிஸ்தான் அணி கொழும்பில் இருந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அரசாங்கமும் எடுத்த முடிவுகளை வீரர்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டனர்" என்று ரஷீத் லத்தீஃப் அப்பதிவில் கூறியுள்ளார்.
இலங்கையின் முக்கிய மீன் சந்தையையும், லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தையும், பள்ளிவாசல்கள் மேலும் பல கேந்திர இடங்களையும் கொண்டுள்ள மாளிகா வீதி முடிவில் வடிகான்கள் அடைப்பு எடுத்துள்ளதால் நீர் வடிந்தோட இடமின்றி நீர்தேங்கி நிற்பதால் பல்வேறு இன்னல்கள் உருவாகி அப்பிரதேச மக்களுக்கு நோய்நிலைகளும், அசௌகரியங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியும் பலனில்லை. மனிதாபிமானமான அடிப்படையில் மாணவர்களினதும், மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் நன்மை கருதி காரைதீவு பிரதேச சபை உடனடி தீர்வை வழங்க முன்வரவேண்டும் என காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் இன்று பிரதேச சபை அமர்வில் வலியுறுத்தினர்.
உபகுழுக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமாரவின் ஊழல் ஒழிப்பு, போதையொழிப்பு செயற்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், சபையை வெளிப்படை தன்மையுடன் வழிநடத்துமாறும் வேண்டினார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் யோகரெத்தினம் கோபிகாந்த், போகின்ற போக்கை பார்க்கும் போது அடுத்தவருட நடுவில் சபை நிதி நிலைகளை சமாளிக்க முடியாத வாங்கறோத்து நிலை வரும். ஆதலால் சிறப்பான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டியுள்ளதை வலியுறுத்தி, மேலதிக ஆளணியினரை உள்ளுராட்சி திணைக்களத்தில் இணைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அடுத்த சபைக் கூட்டத்தில் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால் அதனை பரிசீலனை செய்து ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் முன்மொழிவுகளை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க தவிசாளர் உறுப்பினர்களை வேண்டிக்கொண்டதுடன் காரைதீவு மயானத்தில் தகன சாலை ஒன்றை அமைப்பதற்கு நன்கொடையாளர் ஒருவர் முன்வந்துள்ளமையினால் துறை சார் திணைக்களங்களின் இணக்கப்பாட்டுடன் தகனசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டு சபை அனுமதி வழங்கியது.
கலாசார மண்டப தேவைகள், 43 அலுவலக ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு வழங்கும் பணி, அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சபை நிதியிலிருந்தும் உதவி வழங்க அனுமதி, இராணுவத்திடமிருந்து கையளிக்கப்பட்ட காணியில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு பாவனைக்கு விடுவதற்கு சபை அனுமதி பெறல் போன்ற பல விடயங்களுக்கு சபை அனுமதி வழங்கியது.
கி. ஜெயசிறில், எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.எம். ஜாஹீர், யோ.கோபிகாந்த் போன்ற உறுப்பினர்களினால் தெருமின்விளக்கு சீரமைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சபை அமர்வின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தெரிவித்து ஜனாதிபதி அநுர குமாரவின் ஊழல் ஒழிப்பு, போதையொழிப்பு செயற்பாடுகளை தாம் வரவேற்பதாகவும், சபையை வெளிப்படை தன்மையுடன் வழிநடத்துமாறும் வேண்டினார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் யோகரெத்தினம் கோபிகாந்த், போகின்ற போக்கை பார்க்கும் போது அடுத்தவருட நடுவில் சபை நிதி நிலைகளை சமாளிக்க முடியாத வாங்கறோத்து நிலை வரும். ஆதலால் சிறப்பான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டியுள்ளதை வலியுறுத்தி, மேலதிக ஆளணியினரை உள்ளுராட்சி திணைக்களத்தில் இணைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அடுத்த சபைக் கூட்டத்தில் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால் அதனை பரிசீலனை செய்து ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் முன்மொழிவுகளை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க தவிசாளர் உறுப்பினர்களை வேண்டிக்கொண்டதுடன் காரைதீவு மயானத்தில் தகன சாலை ஒன்றை அமைப்பதற்கு நன்கொடையாளர் ஒருவர் முன்வந்துள்ளமையினால் துறை சார் திணைக்களங்களின் இணக்கப்பாட்டுடன் தகனசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டு சபை அனுமதி வழங்கியது.
கலாசார மண்டப தேவைகள், 43 அலுவலக ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு வழங்கும் பணி, அனர்த்தங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு சபை நிதியிலிருந்தும் உதவி வழங்க அனுமதி,
இராணுவத்திடமிருந்து கையளிக்கப்பட்ட காணியில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு பாவனைக்கு விடுவதற்கு சபை அனுமதி பெறல் போன்ற பல விடயங்களுக்கு சபை அனுமதி வழங்கியது.
கி. ஜெயசிறில், எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.எம். ஜாஹீர், யோ.கோபிகாந்த் போன்ற உறுப்பினர்களினால் தெருமின்விளக்கு சீரமைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சபை அமர்வின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வரலாற்றில் முன்மொழியப்படாத பல்வேறு திட்டங்களை உள்வாங்கியுள்ளதாகவும் ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது எனவும் கல்வி மற்றும் விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை அதிகம் வழங்கியுள்ளதெனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவரும் விபுலானந்தா இல்ல ஸ்தாபகருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபி;ள்ளை ஆகியோர்கள் கருத்து தெரிவித்தனர். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு கூறினர். இச்சிறந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நமது நாடு மிகவிரைவாக அபிவிருத்தி பாதையினை நோக்கி செல்லும் எனவும் இவ்வாறானதொரு சிறந்த வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டனர். பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரி மாணவர்களின் நலன் விவசாயிகளின் எதிர்காலம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பு உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். குறிப்பாக வலது குறைந்தவர்கள், சிறுவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்க ஊழியர்களின் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்திலும் அரசு அக்கறை செலுத்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் கல்வி தொழிநுட்பம் விவசாயம் ஆகிய விடயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ள இச்சிறந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நமது நாட்டை எவ்வாறு வளம்மிக்க நாடாக மாற்றுவது எனும் விடயத்தில் மக்கள் கவனம் செலுத்துவது சிறந்தது எனவும் குறிப்பிட்டனர்.
கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என்.எம். அப்ரின் தலைமையிலும் கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம். அஸீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் பங்களிப்புடன் நேற்று (08) சந்தாங்கேணி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பணிப்பாளர் டபலியு.ஏ. கங்கா சாகரிக்கா,அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஏ.முபாரக் அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆர்.எம். சிறிவர்த்தன, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ்.அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் பளீல், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் வஹாப் ரிஷாட், எம்.ராஜித், கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் றஸாக், றீம் 1st உரிமையாளர் ஜவ்ஸான், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி யும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், அமானா தக்காபுல் உத்தியோகத்தர் எம்.ஏ.கரீம் மற்றும் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது இளைஞர் கழக வீரர்களுக்கு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையின்போது கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் கைத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கலை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பணிப்பாளருமான வாங் குவோஷெங் தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களுடன் இன்று (06) கலந்துரையாடலொன்றை நடத்தினர்.
இலங்கை பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன், இத்தூதுக் குழுவினர் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியை சந்தித்திருந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை தூதுக் குழுவினர் மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையில் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களைத் தாம் ஊக்கப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, ராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, ருவன் மாப்பலகம, சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பதி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவு இந்தக் குழுவின் விஜயத்தின் மூலம் வலுப்படுவதாகக் குறிப்பிட்டார். சீனா இலங்கைக்குப் பல துறைகளில் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றமையை நினைவுகூர்ந்த அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது இரு தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சீன தூதுக் குழுவின் தலைவர் வாங் குவோஷெங், சீனாவுக்கு மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும், சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தூதுக் குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, இலங்கையில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சஜீவ சேனசிங்க ஆகியோர் இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
உயர்மட்ட சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பிரதிப் பணிப்பாளருமான ஃபு ஜிபாங், சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உறுப்பினர் மாவோ டிக்ஸி, சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் பணிப்பாளர் லியூ வாசிங், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளர் ஜாங் ஜின்ஜி, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் சந்திப்பு நிறைவடைந்தது.