அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளினால், விபத்துக்குள்ளான அக்கரைப்பற்றைச் சேர்ந்த Mohamed Quare Atham Lebbai ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer பெற்ற வங்கியாளர்,Mohamed Quare Atham Lebbai ஏ.எல்.எம். காரி Rtd. BOC officer காலமானார்.
இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த ஒரு மாத காலமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த. வாரம் இவர் அம்பாரை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தடிருந்தார்.
அங்கு அதி தீவிர அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.
அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி வீதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற இலங்கை வங்கி (Bank of Ceylon) அலுவலரான
ஏ.எல்.எம். காரி அவர்கள்
இன்று அம்பாறை வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.இவர் திருமதி பரீதா இஸ்மாயில் அவர்களின் அன்புக் கணவரும்,மர்ஹூம் Dr. Jahfer Ismail மருமகன்ஸியாத் (சவூதி அரேபியா)நஜாத்சாஜித் (சவூதி அரேபியா) இம்தாத் (சவூதி அரேபியா)ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
இவர் மர்ஹூம் ரபியுதீன் அவர்களினதும், மர்ஹூம் முபஷ்ஷிர் (former Registrar) அவர்களினதும் சகோதரரும், நிஸார் (மாஸூர், ஓய்வுபெற்ற C.C.) அவர்களின் சகோதரரும் ஆவார்.
மேலும், மர்ஹூமா மஸயீனா (திருமதி ஜமால்தீன்) அவர்களினதும், நசீரா அவர்களினதும் சகோதரரும் ஆவார்.
இவர் Ameen S.S.O. அவர்களின் மச்சானும்,
RDHS பைரூஸ் மற்றும் Sober சறுக் அவர்களின் மாமாவும் ஆவார்.
அத்துடன், Elens Trade உரிமையாளர் எம்.ஐ.எம். யெஹியா அவர்களின் மச்சானும் ஆவார்.
அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) மர்ஹூமின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனப் பதவியை வழங்குவானாக.
ஆமீன்.
ஜனாஸா மற்றும் நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியை சேர்ந்த அக்கரைப்பற்று (சுள்ளியர் பெமிலி) வபாத் ஆனார்கள்
இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி றாஜிஹுன்
இவர்
லியாகத் அலி ( BMC)
ஜெமீல் (BMC)
இஸ்ஸதீன் (BMC)
அப்துல் ஹமீட் மௌலவி ஆகியோரின் அன்பு சகோதரரும்
சபறுல்லாஹ் அவர்களின் அன்பு மருமகனும்
சிராஜ் (சிங்கர்) அன்பு மைத்துனரும் ஆவார்கள்
நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
Taqwa jummah mosque
Taqwa emergency service
Akkaraipattu
சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சகோதரர் Irfan Ahamed - Banna அவர்களின் அன்புத் தந்தை, மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஒய்வுநிலை அதிபர் A.R. அப்துல் றாசிக் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர்.
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம் அப்துல் றாசிக் அவர்கள் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களினது முன்னேற்றத்திற்காகவும், மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒருவர்.
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவர்க்கத்தை வழங்கிடுவானாக. ஆமீன்!
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இலங்கை வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் சிரேஸ்ட ஒலிபரப்பாளர், தயாரிப்பாளர்,நாடகக் கலைஞர் எனப் பன்முக ஆளுமை கொண்ட ஜவஹர் பெர்ணான்டோ காமானார். www.ceylon24.com ஆழந்த இரங்கல்களைத் தெரிவிக்கன்றது.
யாழில் இளவயது சட்டத்தரணியும் இரட்டை குழந்தைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி!🔴👇🔴👇🔴👇🔴👇🔴👇
மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் விஸ்வேதிகா அவர்களின் கணவரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சி போட்டு தேநீர் வழங்கி உள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#news #NewsUpdate #newsfeed #sltnews #BreakingNews
www.ceylon24.com தமது ஆழ்ந்த இரங்கலை, மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர்,முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரி Dr. Jahfer (MBBS) சற்று முன்னர் கொழும்பில் வபாத்தானார்.
இவர் தம்பி போடியாரின் மகனும், இஸ்மாயில் ஸ்ரோர்ஸ் இன் மருமகனும், Eng. Haarun, Prof. Muzaathik, Eng.Rasaak, Asroff (Bsc)ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹ்
(Rep/Kalmunai Net)
மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்) ஆவார்.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார்.
(எஸ்.எம்.அறூஸ்)
பொத்துவிலைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளரும், கவிஞரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஐ.ஆதம்லெப்பை அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார்இ ஆதம் கண்டு அலிமாக் கண்டு என்பவரது கணவரும் சட்டத்தரணி ஏ.எல் ஹில்மி, கிழக்கு மாகாண விவசாய, காணி நிர்வாகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, சட்டத்தரணி ஏ.எல்.பௌமி , ஏ எல் றிஸ்மி, மர்ஹூமா பாத்திமா றிஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
பொத்துவில் பிரதேசத்தின் உயரிய குடும்பத்தில் பிறந்து கல்விப் புலத்திலும், இலக்கியப் புலத்திலும் சிறந்த ஆளுமையாக விளங்கியதுடன் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக பணியாற்றி தனது பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் மர்ஹூம் ஆதம்லெப்பை அவர்களாகும்.
பொத்துவில் பிரதேசம் அம்பாரை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்தாலும் கல்வி,இலக்கியம், விளையாட்டு, அரசியல் ரீதியாக தேசிய பல அடைவுகளை ஏற்படுத்திய பலரும் பிறந்து வளர்ந்த மண்ணாகும். அந்த வகையில் தனது பல்துறை ஆற்றலினால் பொத்துவில் பிரதேசத்தை முதன்மைப்படுத்திய தலைவராக மர்ஹூம் ஆதம்லெப்பை பார்க்கப்படுகின்றார்.
இலங்கையின் பாடப்புத்தகத்தில் ஆதம்லெப்பை அவர்களின் வெண்ணிலா என்கின்ற கவிதை இடம்பெற்றுள்ளதையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களான இருந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோருடன் மிக நெருக்கமாக செயற்பட்டு பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும், தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று உழைத்த அரசியல் தலைவராவார்.
ஏழை,பணக்காரன் என்று வயது வித்தியாசமில்லாமல் எல்லோருடனும் அன்பாகப்பழகும் ஆதம்லெப்பை அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தான் பிறந்த மண்ணிற்கும், சமூகத்திற்கும் அளப்பரிய பணிகளை ஆற்றிய ஆதம்லெப்பை அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.