Showing posts with label ஸ்லைடுர். Show all posts

 (சுகிர்தகுமார்)



திருக்கோவில் பிரதேச கடல் அரிப்பு தொடர்பில் கடந்தகால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அரச பணம் வீண் விரயம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட பிரதேச மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் இதற்கான நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நம்பிக்கையுள்ளதாகவும் கூறினர்.
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் உள்ளிட்ட நீண்ட கடற்கரை பிரதேசம் கடல் அரிப்பு காரணமாக பெறுமதியான வளங்களை கடலுக்கு இரையாக்கி இழந்து வருகின்றது.
அத்தோடு மீனவர்களின் தங்குமிடங்கள் அரச கட்டடங்கள் தென்னை மரங்கள் குடியிருப்புக்கள் என அத்தனை வளங்களையும் கடல் காவு கொண்டுள்ளது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் தேசத்து கோயிலான ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மதில் சுவர்களையும் காவு கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்ட திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிக்குமார் பிரதேச மக்கள் சகிதம் நிலைமையினை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் கடந்தகால அரசாங்கங்கள் கடல் அரிப்பை தடுப்பதாக தெரிவித்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மில்லியன் கணக்கில் செலவு செய்தது. இருப்பினும் அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. மாறாக கடல் அரிப்பை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பாரிய பாறாங்கற்கள் கூட கடல் அருகே குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கடல் நிலத்தினை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இந்நிலை தொடருமானால் மக்கள் குடியிருப்புக்களை இழந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டிவரும் என்பதுடன் மீனவர்கள் தொழிலை இழக்கும் நிலை உருவாகும்.
பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் இந்நிலையினை தடை செய்யவேண்டுமெனில் அரசு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் நாட்டினை சிறப்பாக வழிநடத்துவதை அனைத்து மக்களும் அறிந்து கொண்டுள்ளனர். ஆகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இதனை கருத்திற்கொண்டு மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கையினை தவிசாளரும் பொதுமக்களும் விடுத்தனர்.

 



நூருல் ஹுதா உமர்


சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர், முதியோர் தினக் கொண்டாட்டம் வியாழக்கிழமை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தினம் “அன்பால் போஷியுங்கள் – உலகை வழிநடத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். முஹம்மது ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக என்.எஸ் இன்ஜினியரிங் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எம்.யூ.எம்.நியாஸ், கெளரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா ஆகியோர் கலந்து கொண்டதுடன் வலய உதவியாளர் எம்.எஸ்.எம். நௌஷாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களான எம்.ஆர்.எஸ். ஷாமிலா, ஏ.எம்.அபுல் ஹுதா, எம். எம்.ஜாபிர், எம்.ஐ.அன்சார், ஜே.எம். றம்சா, ஏ.கணேசமூர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எப். றிகாஸா ஷர்பீன், எம்.ஐ.சர்பீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறுவர்களின் நடனங்கள், கதை கூறல், பாடல்கள், முதியோர்களின் நாட்டார் பாடல், கவிதை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் நினைவுச் சின்னங்கள், பரிசில்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.