Showing posts with label Aacident. Show all posts

( Rep/ Yathursan)

க.பொ.த.உயர்தர பரீட்சையில் (2025)  உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ  இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் அவர்களை  பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா ,  தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமாகிய ரதீசன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்


 இன்று  இடம்பெற்ற விபத்தில் ஓர இளைஞர் கடுங்காயமுற்ஞள்ளார்.அவர் சென்ற மோட்டார் சைக்கிள் அடையாளங் காணப்பட்டுள்ளது. 


 
அவரின் அடையாளம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

👉 இந்த நபரை யாராவது அறிந்திருந்தால் தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்.

🙏 மனிதாபிமான அடிப்படையில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து, அவரின் குடும்பத்தினரிடம் சேர உதவுங்கள்.

#



மோட்டர் சைக்கிள் ஒன்று  கார் மீது மோதி இன்றைய தினம் விபத்துக்குள்ளானது.இதில் மோட் பார் வாகனச் சாரதி காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்

 


பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.


விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


ராமு தனராஜா 

 


வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.


இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.


சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிறுமி, இன்று அதிகாலை கொக்கரல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு. திருக்கோவில் கொழும்பு பஸ்சுடன், குறித்த குடும்பத்தவர் சென்ற வாகனம் மோதியதில், குறித்த சிறுமியின் தாயும்,மாமாவும் காயமுற்றுள்ளதோடு, 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஜனாசா தற்சமயம் குருநாகலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதைனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 


ஹபரணை - பொலன்னறுவை வீதி, ஹபரணை - பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.