Showing posts with label Aacident. Show all posts

 


காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்தை சந்தித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தினுள் சுமார் 20 பயணிகள் வரை இருந்துள்ளனர்.



பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் பேருந்து பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் பலமாக மோதியுள்ளது. இந்த அதிவேக மோதலினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மொடர்ன் எலக்ரிகல் நஷாட் விபத்து ஒன்றில் சற்றுமுன்னர் காலமானார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


விமான நிலையம் சென்று வருகையில் இந்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்..


ஜனாஸா தற்போது

பகமுனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இதனை குறிப்பிட்டுள்ளார்.


அதில், ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியினால் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் வரையில் தாம் ஆளுநராக கடமையாற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளது. 


எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தமது சர்வதேசத் தொடர்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக தற்போதைய தன்னார்வ பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஹனீஃப் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

 


அரச வாகனம் மோதியதில் மாடொன்று உயிரிழப்பு.


திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.


திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


 #accident #SriLankaNews #Trincomalee

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் வைத்து வேன் ரக வாகனம் மாட்டொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.


திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தம் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது வீதியின் குருக்கே நின்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


 #accident #SriLankaNews #Trincomalee

போரதீவுப்பற்றில் தமிழ்த்தினப் போட்டிக்குச் சென்ற மூன்று மாணவிகள் விபத்தில்  காயம்.!


​தமிழ்த்தினப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற பாடசாலை மாணவிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர்.


இன்று (07.05.2026) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள், கோவில்போரதீவு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.


வெல்லாவெளி - பொறுகாமம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியின் முன் டயர் திடீரென வெடித்துள்ளது. 


இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் காரணமாக முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


விபத்தின் போது வாகனத்திலிருந்த நான்கு மாணவிகளில் மூவர் காயமடைந்த நிலையில், உடனடியாகக் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


​மாணவிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் இது குறித்துத் தெரிவிக்கையில்.


​சிகிச்சை பெற்ற மாணவிகளில் இருவர், தங்களது திறமையை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் சிகிச்சை முடிந்து உடனடியாகத் தமிழ்த்தினப் போட்டிக்குச் சமூகமளித்துள்ளனர்.


​ஒரு மாணவி மட்டும் மேலதிக சிகிச்சைக்காகத் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


 ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்டபோதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.


விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


( Rep/ Yathursan)

க.பொ.த.உயர்தர பரீட்சையில் (2025)  உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ  இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் அவர்களை  பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா ,  தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமாகிய ரதீசன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்


 இன்று  இடம்பெற்ற விபத்தில் ஓர இளைஞர் கடுங்காயமுற்ஞள்ளார்.அவர் சென்ற மோட்டார் சைக்கிள் அடையாளங் காணப்பட்டுள்ளது. 


 
அவரின் அடையாளம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

👉 இந்த நபரை யாராவது அறிந்திருந்தால் தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்.

🙏 மனிதாபிமான அடிப்படையில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து, அவரின் குடும்பத்தினரிடம் சேர உதவுங்கள்.

#



மோட்டர் சைக்கிள் ஒன்று  கார் மீது மோதி இன்றைய தினம் விபத்துக்குள்ளானது.இதில் மோட் பார் வாகனச் சாரதி காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்

 


பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் எவருக்கும் உயிர் சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன.


விபத்துக்குள்ளான வாகனத்தை மீண்டும் நிலைநிறுத்தும் பணிகளில் மின்சார சபை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


ராமு தனராஜா 

 


வீரவில பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் வீரவில பகுதியில் வைத்து, அரச பேருந்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதுண்டன.


இந்த அனர்த்தில் சிக்குண்டவர்களே உயிரிந்தனர்.


சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிறுமி, இன்று அதிகாலை கொக்கரல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு. திருக்கோவில் கொழும்பு பஸ்சுடன், குறித்த குடும்பத்தவர் சென்ற வாகனம் மோதியதில், குறித்த சிறுமியின் தாயும்,மாமாவும் காயமுற்றுள்ளதோடு, 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஜனாசா தற்சமயம் குருநாகலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதைனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 


ஹபரணை - பொலன்னறுவை வீதி, ஹபரணை - பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.